முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவுடன் கூட்டு சேர்ந்து உலகின் மிகப் பெரிய போர் ஒத்திகையை நடத்திய ரஷ்யா

வெள்ளிக்கிழமை, 14 செப்டம்பர் 2018      உலகம்
Image Unavailable

மாஸ்கோ,உலகின் மிகப்பெரிய போர் ஒத்திகையை ரஷ்யா நடத்தி சாதித்து காட்டி இருக்கிறது. இது உலகம் முழுக்க அதிர்வை ஏற்படுத்தி உள்ளது.இந்த போர் ஒத்திகை ரஷ்யாவின் டிசுகுல் என்ற பகுதியில் நடந்தது. 5 நாட்கள் நடந்த இந்த ஒத்திகை நேற்றோடு முடிவடைந்தது. இதில் ரஷ்யா வீரர்கள் மட்டும் 3 லட்சம் பேர் கலந்து கொண்டுள்ளனர். 1000 அதிதொழில்நுட்ப , விமானங்கள், 36,000 போர் டேங்குகள், 10,000 போர் வாகனங்கள் என்று மிகப்பெரிய போர் படைகள் எல்லாம் இதில் கலந்து கொண்டு சாதனை படைத்துள்ளது.

தற்போது இதுதான் உலகின் மிகப்பெரிய போர் ஒத்திகை என்று கூறப்படுகிறது. இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இதில் சீனாவும் சேர்ந்ததுதான். சீனா இதில் கலந்து கொண்டு ரஷ்யாவிற்கு ஒரு லட்சம் வீரர்களை அனுப்பி உள்ளது. 1000 வாகனங்களை அனுப்பி உள்ளது. 30 விமானங்களை பறக்க விட்டது. இதனால் ரஷ்யா சீனாவின் படைகள் எவ்வளவு வலிமை வாய்ந்தவை என்று உலகிற்கு பறைசாற்றப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து