எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை,கடப்பாரையை விழுங்கிய கல்லுளிமங்கன் போல முழிக்கும் ஸ்டாலின், இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்து மவுனம் சாதிப்பது ஏன்? என்று அமைச்சர் ஜெயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்திற்காக புது டெல்லி சென்ற மீன்வளத்துறை மற்றும் அரசு பணியாளர் சீர்த்திருத்தத்துறை அமைச்சர் ஜெயகுமார் சென்னை விமான நிலையத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-பிரியாணி கடையில் பாக்சிங் நடத்துவது, பியூட்டி பார்லரி்ல் பெண்ணை காலால் எட்டி உதைத்து அவமானப்படுத்துவது, டீக்கடையில் வன்முறையில் ஈடுபடுவது என்று தி.மு.க.வினரிடையே பஞ்சாயத்து செய்வதே மு.க.ஸ்டாலினுக்கு முக்கிய பணியாகி விட்டது. பொதுமக்களை பாதிக்கும் அளவுக்கு தி.மு.க. எந்தளவுக்கு வன்முறையில் ஈடுபட்டு வருகிறது என்பதை நாம் பார்த்து கொண்டுதான் இருக்கிறோம். அந்த பஞ்சாயத்துகளை தீர்ப்பதற்கே ஸ்டாலினுக்கு நேரம் சரியாக இருக்கிறது.
காற்றாலை மின்சாரம் குறித்து மு.க.ஸ்டாலின் எழுப்பிய குற்றச்சாட்டுக்கு அமைச்சர் தங்கமணி தெளிவான விளக்கம் அளித்து விட்டார். எந்தவிதமான முறைகேடும் நடைபெறவில்லை என்று அமைச்சர் தெளிவுப்படுத்தி இருக்கிறார். மு.க.ஸ்டாலின் எந்த வழக்கும் போடட்டும். அதை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். தனியார் நிறுவனத்திடமிருந்து வந்து சேர வேண்டிய பணத்தை அரசுக்கு சேர்க்க வழிவகுத்ததே அம்மாவின் ஆட்சி தான். இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் வழக்கு போடட்டும். சந்திக்க தயாராக இருக்கிறோம்.
என்னை அரிச்சந்திரன் என்று கூறியதற்கு கருணாசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் அவருக்கு நாக்கில் சனி. அதற்காக அவர் என்னென்ன அனுபவிக்க போகிறார் என்பதை பார்க்கத்தான் போகிறோம். எல்லா சமூகத்தையும் கேவலமாக பேசுவதை ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட யாரும் ஏற்றுக் கொள்ள முடியாது. அப்படி பேசத் தொடங்கினால் சாதிக்கலவரம் தான் வெடிக்கும். அதைத்தான் அ.தி.மு.க. சார்பில் நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். வன்மையான கண்டனத்தை தெரிவிக்கிறோம். ஆனால் நடிகர் கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்கவில்லையே. எல்லா சமூதாயத்தையும் கேவலமாக பேசிய கருணாசுக்கு ஸ்டாலின் ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை. ஏன் வாய்மூடி மவுனமாக இருக்கிறார். ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவிக்கிறார். அது குறித்து ஸ்டாலின் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. எங்களை நோக்கி ஊழல் என்று சுட்டுவிரல் நீட்டும் ஸ்டாலினை கேட்கிறேன், தி.மு.க. ஆட்சியில் நடந்தென்ன சர்க்கரை பேரத்தில் ஊழல், பூச்சிமருந்தில் ஊழல், எங்கும் ஊழல் எதிலும் ஊழல் தானே தி.மு.க. ஆட்சியில் நடந்தது.
ஒட்டுமொத்தமாக ஊழல் சாம்ராஜ்யத்தையே நடத்தியவர்கள் தான் தி.மு.க.வினர். தமிழகத்தில் ஊழலின் காரணமாக கிட்டத்தட்ட 40 ஆயிரம் கோடி சொத்து சேர்த்தவர்கள் தி.மு.க.வினர் இந்த சொத்துக்கள் எப்படி வந்தது என்பதை ஸ்டாலின் விளக்க வேண்டும்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை சீல் வைக்கப்பட்டது சீல் வைக்கப்பட்டது தான். அது குறித்து நான்கு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு தேவையில்லை என்பது தான் தமிழக அரசின் கருத்து. ஸ்டெர்லைட் ஆலையை பொறுத்தவரை மூடப்பட்டது மூடப்பட்டதுதான். இலங்கையில் நம்முடைய தொப்புள்கொடி உறவுகளான தமிழர்கள் படுகொலை என்பது தி.மு.க.வும் காங்கிரசும் சேர்ந்து செய்தது தான் என்பதை மக்களுக்கு தெரிவிப்பதற்காக வரும் 25-ம் தேதி மாநிலம் முழுவதும் கண்டன பொதுக்கூட்டங்களை நடத்த இருக்கிறோம்.
இலங்கையில் தமிழர்கள் படுகொலை நிகழ்த்தப்பட்ட போது ஆட்சியில் இருந்தது யார். காங்கிரஸ் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இருந்தது தி.மு.க. தானே அப்போது கருணாநிதி நடத்திய உண்ணாவிரத நாடகத்தின் காரணமாக பதுங்கு குழியில் இருந்து வெளியே வந்த தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அன்றைக்கு மட்டும் தி.மு.க. மத்திய அமைச்சரவையில் இருந்து விலகியிருந்தால் அந்த படுகொலை நடந்திருக்குமா, ஒன்றரை லட்சம் தமிழர்கள் செத்து மடிந்திருப்பார்களா அது குறித்து தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இதுவரை வாய்திறக்கவில்லையே ஏன் கடப்பாரை முழுங்கி விட்டு கல்லுளிமங்கன் போல ஏமாற்றுவதில் கில்லாடி ஸ்டாலின். ஆனால் தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 6 hours ago |
மினி பான் கேக்6 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
05 May 2024சென்னை : தமிழகத்தில் நாளை தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
தமிழ்நாட்டில் 7.50 லட்சம் பேர் எழுதிய பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியீடு : முடிவுகளை குறுஞ்செய்தியாக அனுப்பவும் ஏற்பாடு
05 May 2024சென்னை : தமிழ்நாட்டில் 7.50 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதிய பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
காயத்தால் ஐ.பி.எல். தொடரில் இருந்து பதிரனா விலகினார்
05 May 2024சென்னை : காயத்திற்கு சிகிச்சை மேற்கொள்ள பதிரனா தாயகம் திரும்பி உள்ளார்.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆள் கடத்தல் வழக்கில் கைது: எச்.டி.ரேவண்ணா கோர்ட்டில் ஆஜர்
05 May 2024பெங்களுரூ ஆள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட எச்.டி. ரேவண்ணா நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
நீலகிரி செல்வோர் இ-பாஸ் பெற இணையதளம் அறிவிப்பு
05 May 2024நீலகிரி : நீலகிரி செல்லும் சுற்றுலாப்பயணிகள் இ-பாஸ் பெறும் வகையில் அதற்கான இணையதளம் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக்கோப்பை: போட்டி அட்டவணை வெளியீடு
05 May 2024துபாய் : ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக்கோப்பைக்கான குழுக்கள் மற்றும் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
வங்காளதேசத்தில்...
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.