எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம்,- ராமநாதபுரம்பெரியகண்மாயில் தேக்கிவைக்கப்பட்டுள்ள வைகை தண்ணீரை நகரில் உள்ள ஊருணிகளில் நிரப்புவது தொடர்பாக அரசு அலுவலர்களுக்கு அமைச்சர் டாக்டர்மணிகண்டன் ஆலோசணை வழங்கினார்.
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் நடைபெற்ற ஆலோசணை கூட்டத்தில் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன் ராமநாதபுரம் பெரிய கண்மாயில் தேக்கி வைக்கப்பட்டுள்ள வைகை தண்ணீரை ராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அந்தந்த பகுதிகளில் உள்ள ஊரணிகளில் பாதுகாப்பாக நிரப்புவது தொடர்பாக அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:- ராமநாதபுரம் மாவட்ட மக்களின் குடிநீர்; தேவையினை பூர்த்தி செய்திட ஏதுவாக கடந்த ஆண்டு வைகை ஆறு பூர்வீக ஆயக்கட்டு பாசன கணக்கீட்டின்படி வைகை அணையிலிருந்து, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உரிய தண்ணீரை திறந்து விட வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடத்தில் கோரிக்கை வைத்தேன். அதன்படி, வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு ராமநாதபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 64 ஊரணிகளில் தண்ணீர்; நிரப்பப்பட்டு பொதுமக்கள் பயனடைந்தனர். அதேபோல இந்த ஆண்டிலும் வைகை அணையிலிருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கான தண்ணீரை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் எனது சொந்த முயற்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஆகியோரிடத்தில் நேரடியாக கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு, தற்போது ராமநாதபுரம் பெரிய கண்மாயில் 1.12 மீட்டர் (3.75 அடி) அளவில் சுமார் 221 மில்லியன் கனஅடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இத்தண்ணீரை வீணாகாமல் கடந்த ஆண்டைப் போல இந்தாண்டிலும் உரிய முறையில் ராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஊரணிகளில் நிரப்பிட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இதற்கு ராமநாதபுரம் பெரிய கண்மாயில் உள்ள 8 பாசன மடைகளின் வாயிலாக ராமநாதபுரம் நகராட்சி மற்றும் ராமநாதபுரம், திருப்புல்லாணி, போகலூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட ஊரகப்பகுதிகளில் உள்ள ஊரணிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்கு உரிய வரத்துக்கால்வாய்கள், சாலைகளின் கீழ் அமைக்கப்பட்டுள்ள வாய்க்கால் பாலங்கள் ஆகியவை சீரான முறையில் உள்ளதை வருவாய் கோட்டாட்சியர், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் மற்றும் நகராட்சி ஆணையாளர்கள் ஆகியோர் கள ஆய்வு செய்து உறுதி செய்திட வேண்டும். வரத்துக் கால்வாய்களில் உடைப்பு, தனிநபர்கள் மோட்டார்களைப் பயன்படுத்தி முறைகேடாக தண்ணீரைப் பயன்படுத்துவது போன்ற நிகழ்வுகளை நூறு சதவீதம் தவிர்த்திட வேண்டும் . இதனை தொடர்ந்து கண்காணிப்பதற்கு அலுவலர் குழு அமைத்திட வேண்டும். மாவட்டத்தில் தற்போது பரவலாக மழை பெய்து வரும் காரணத்தினாலும், தொடர்ந்து மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக வானிலை கணிப்புகள் உள்ளதாலும், ஒவ்வொரு ஊரணியிலும் தண்ணீர் நிரப்பிடும் பொழுது சம்பந்தப்பட்ட ஊரணியின் கொள்ளளவில் ஏறத்தாழ 70 சதவீதம் அளவிற்கு மட்டும் நிரப்பிட வேண்டும். இதனால் திடீர் மழை போன்ற நேர்வுகளில் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுத்திட முடியும். முதலில் ராமநாதபுரம் நகரின் பிரதான ஊரணிகளான முகவை ஊரணி, நீலகண்டி ஊரணி, லட்சுமிபுரம் ஊரணி, சிதம்பரம்பிள்ளை ஊரணி, அள்ளிக்கண்மாய் ஊரணி, நொச்சிவயல் ஊரணி போன்ற ஊரணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து தண்ணீரை நிரப்பிட வேண்டும். அதேவேளையில் கடந்த ஆண்டை விட இவ்வாண்டில் கூடுதலான ஊரணிகளில் தண்ணீர் நிரப்பிடும் வகையில் அலுவலர்கள் பணிகளை முறையாக ஒருங்கிணைத்து மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு பேசினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் த.ஹெட்சி லீமா அமாலினி, ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் டாக்டர்.ஆர்.சுமன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (நீர்வள ஆதார அமைப்பு) வெங்கிடகிருஷ்ணன், ராமநாதபுரம் காவல் துணைக்கண்காணிப்பாளர் நடராஜன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் மாரி, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் ஆ.செல்லத்துரை உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 4 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை1 day 12 hours ago |
ஆனியன்ப்ரை4 days 11 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 1 day ago |
-
கோடை விடுமுறை எதிரொலி: பத்மநாபபுரம் அரண்மனையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
12 May 2024திருவனந்தபுரம் : கோடை விடுமுறை காணமாக பத்மநாபபுரம் அரண்மனை சுற்றுலா பயணிகளால் திணறியது.
-
வெஸ்ட் நைல் காய்ச்சல்: தமிழக, எல்லையில் கண்காணிப்பு தீவிரம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
12 May 2024சென்னை : வெஸ்ட் நைல் வைரஸ் காரணமாக கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் 13 வழித்தடங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.&
-
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
12 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கொளுத்தும் வெயில்: சென்னை பஸ்களில் ஓட்டுநர்களுக்கு மின்விசிறி பொருத்தம்
12 May 2024சென்னை : வெயில் பாதுகாப்பில் இருந்து ஓட்டுநர்களை பாதுகாக்கும் விதமாக சென்னை மாநகராட்சி பேருந்துகளில் மின்விசிறியை பொருத்த மாநகர் போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.&n
-
பூர்வகுடி மக்கள் அமைதியாக வாழும் சூழலை ஏற்படுத்த வேண்டும்: எடப்பாடி
12 May 2024சென்னை : பூர்வகுடி மக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி தங்கள் இருப்பிடத்தில் அமைதியாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று அரசுக்கு அ.தி.மு.க.
-
எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள்: அண்ணாமலை, நடிகர் விஜய் வாழ்த்து
12 May 2024சென்னை : தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் ஆகியோர் அ.தி.மு.க.
-
முத்திரை கட்டணங்கள் உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் : எடப்பாடி வலியுறுத்தல்
12 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் முத்திரை கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
வீட்டு வாசலில் தூங்கியவர்கள் மீது காரை ஏற்றிய பெண் கைது
12 May 2024சென்னை : சென்னையில் வீட்டு வாசலில் உறங்கியவர்களின் மீது காரை ஏற்றி விபத்தை ஏற்படுத்திய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
நெல்லை காங்.நிர்வாகி மரணம்: சோதனையில் சிக்கிய டார்ச் லைட்
12 May 2024நெல்லை : நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் உடல் கிடந்த இடத்திற்கு அருகே எரிந்த நிலையில் டார்ச் லைட் ஒன்று போலீசாரின் தேடுதல் வேட்டையில் சிக்கியுள்ளது.
-
குழந்தைகளுடன் அன்னையர் தினத்தை கொண்டாடிய நடிகை நயன்தாரா
12 May 2024சென்னை : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுல் ஒருவர் நயன்தாரா. அவர் கடந்த ஆண்டு அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படத்தில் நடித்தார்.
-
தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் : ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
12 May 2024சென்னை : தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் என்று தெரிவித்துள்ள ஓ.பி.எஸ். மூன்று ஆண்டு கால தி.மு.க.
-
சாலை விபத்தில் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் காயம்
12 May 2024திருவண்ணாமலை : அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.வே. கம்பன் சாலை விபத்தில் காயமடைந்தார்
-
மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேட்டி
12 May 2024மதுரை : மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.தெரிவித்த
-
எத்தனை வழக்குகள் பாய்ந்தாலும் பேசுவதை நிறுத்த மாட்டேன் : அண்ணாமலை திட்டவட்டம்
12 May 2024சென்னை : அண்ணாதுரை, முத்துராமலிங்க தேவரை பற்றி அவதுறாக பேசிய புகாரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
-
நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியர் கைது
12 May 2024ஒட்டாவா : காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியரை கனடா போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் போராட்டம் தீவிரம் : சுதந்திரம் கேட்டு கோஷம்
12 May 2024ஸ்ரீநகர் : பணவீக்கம், அதிகவரி, மின்சார பற்றாக்குறை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
எடப்பாடி 70-வது பிறந்தநாள்: கவர்னர் ஆர்.என். ரவி வாழ்த்து
12 May 2024சென்னை : அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
நிக்கி ஹாலே துணை அதிபர் வேட்பாளரா? - டொனால்ட் டிரம்ப் மறுப்பு
12 May 2024வாஷிங்டன் : வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலேயை துணை அதிபர் வேட்பாாளராக நிறுத்த பரிசீலனை செய்யவில்லை என முன்னாள் அதிபர் டிரம்ப் கூற
-
வார இறுதி மற்றும் பிற விடுமுறை நாட்கள் உள்பட நியூயார்க்கில் இந்திய தூதரகம் ஆண்டு முழுவதும் இயங்கும்
12 May 2024நியூயார்க் : வார இறுதி நாட்கள் மற்றும் பிற விடுமுறை நாட்கள் உள்பட ஆண்டு முழுவதும் இந்திய தூதரகம் திறந்திருக்கும் என்றும், அனைத்து விடுமுறை நாட்களிலும் பிற்பகல் 2 மணி மு
-
உலக செவிலியர் தினம்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
12 May 2024சென்னை : உலக செவிலியர் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
படித்த பள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய நடிகர் அப்புக்குட்டி
12 May 2024சென்னை : தான் படித்த பள்ளிக்கு ரூ. 11 லட்சம் செலவில் மேஜை, கம்ப்யூட்டர் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை நடிகர் அப்புக்குட்டி வழங்கி உள்ளார்.
-
நவீன ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா
12 May 2024பியாங்கியாங் : கொரிய தீபகற்பத்தில் வடகொரியா நவீன ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியுள்ளது குறித்து தங்களது நாட்டை குறிவைத்து தாக்குதல் நடத்தும் வகையில் அமைந்திருப்பதாக தென்கொரி
-
குடியுரிமை சட்டத்தை யாரும் ஒழிக்க முடியாது : மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி பேச்சு
12 May 2024கொல்கத்தா : நான் இருக்கும் வரை யாரும் குடியுரிமை திருத்த சட்டத்தை ஒழிக்க முடியாது என்று மேற்கு வங்கத்தில் நடந்த பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி பேசினார்.