முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரபேல் விவகாரம்: பிரதமர் மோடியின் பங்கு குறித்து விசாரணை தேவை - ராகுல் வலியுறுத்தல்

வியாழக்கிழமை, 11 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : ரபேல் போர் விமான கொள்முதல் ஒப்பந்தத்தில் பிரதமர் மோடியின் பங்கு குறித்து விசாரணை நடத்த வேண்டும். அவர் ஒரு ஊழல்வாதி என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

ரபேல் போர் விமானம் ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு மீது காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது. பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ஹோலாண்டேவும், மத்திய அரசு ரிலையன்ஸ் நிறுவனத்தைத் தவிர வேறுஎந்த நிறுவனத்தையும் தேர்வு செய்ய அதிகாரம் அளிக்கவில்லை என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், பிரான்ஸில் இருந்து வெளிவரும் மீடியாபார்ட் புலனாய்வு பத்திரிகையும் ரபேல் ஒப்பந்தத்தை உறுதி செய்ய வேண்டுமெனில் ரிலையன்ஸ் நிறுவனத்தைப் பங்குதாரராகச் சேர்க்க மத்திய அரசு வலியுறுத்தி வந்ததாக ஆவணத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது என்று செய்தி வெளியிட்டது. இதனால், ரபேல் விவகாரம் மேலும் பரபரப்பு அடைந்துள்ளது.

இதற்கிடையே பிரான்ஸ் நாட்டுக்கு 3 நாட்கள் பயணம் மேற்கொண்ட மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாரராமன், பிரதமர் மோடி ஆகியோரை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாகச் சாடியுள்ளார்.

இது தொடர்பாக டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் ராகுல் காந்தி கூறுகையில், ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் பிரதமர் மோடியின் பங்கு என்ன என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும். 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதில், அனில் அம்பானிக்கு ரூ.30 ஆயிரம் கோடி கிடைக்கப் பிரதமர் மோடி உதவியுள்ளார்.

மோடி ஒரு ஊழல்வாதி.

ரபேல் போர் விமானத்தில் நடந்துள்ள ஊழல்களை மூடி மறைப்பதற்காகத்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரான்ஸ் நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். பிரான்ஸ் நாட்டுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் திடீரென பயணம் செய்ய காரணம் என்ன?, அதற்கான அவசரம் என்ன இப்போது இருக்கிறது?

ஆட்சிக்கு வரும் போது ஊழலை எதிர்த்துப் போரிடுவேன் என்று மோடி பேசினார், இன்று அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு இருப்பதால், நாட்டின் இளைஞர்களிடம் அவர் குறித்த விவரங்களையும், ஊழலில் ஈடுபட்டுள்ளதையும் நான் கூறுகிறேன் என்று ராகுல் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து