முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு திருமங்கலம் தேவர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலையணிவித்து மரியாதை

செவ்வாய்க்கிழமை, 30 அக்டோபர் 2018      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருமகனாரின் 111வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு திருமங்கலம் நகரிலுள்ள தேவர் திருமகனாரின் திருவுருவச் சிலைக்கு த.மா.கா.,தே.மு.தி.க., மூ.மு.க உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 111வது ஜெயந்தி விழா பசும்பென்னிலுள்ள தேவர் நினைவிடத்தில் நேற்று வெகுசிறப்பாக நடைபெற்றது.இதன் ஒருபகுதியாக பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 111வது ஜெயந்தி விழாவினை முன்னிட்டு திருமங்கலம் நகரிலுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலையணிவித்து மரியாதை செலுத்திடும் நிகழ்ச்சி வெகுசிறப்பாக நடைபெற்றது.அதன்படி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் த.மா.கா மதுரை தெற்கு மாவட்ட  தலைவரும்,பேரையூர் பேரூராட்சி முன்னாள் தலைவருமான  டாக்டர்.கே.கே.குருசாமி    திருமங்கலம் மற்றும் டி.கல்லுப்பட்டியிலுள்ள தேவர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்.அவருடன் இளைஞரணி செயலாளர் காமாட்சி மற்றும் நிர்வாகிகள் முத்துமகாலிங்கம், முத்துகிருஷ்ணன்,கண்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து தே.மு.தி.க சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மதுரை தெற்கு மாவட்டச் செயலாளர் கணபதி,திருமங்கலம் நகரச் செயலாளர் ராதாகிருஷ்ணன்,திருமங்கலம் ஒன்றியச் செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு திருமங்கலம் தேவர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.இதனை தொடர்ந்து திருமங்கலம் புதுநகர் தேவர் ஆட்டோ நிலையத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில தலைவர் ராஜபாண்டி,திருமங்கலம் தலைவர் அழகர்சாமி,தொழிலதிபர் வெற்றிச்செல்வம் உள்ளிட்ட ஏராளமானோர் தேவர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கினார்கள்.மேலும்  இவர்கள் வழியில் நாங்கள் நற்பணி இயக்க அறக்கட்டளையின் சார்;பில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  ஒருங்கிணைப்பாளர் வி.தங்கம் தலைமையில் ஏராளமானோர் தேவர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தி அன்னதானம் வழங்கினார்கள்.
முன்னதாக மூவேந்தர் முன்னேற்ற கழகம் சார்பில் மாநில மகளிரணி செயலாளர் மற்றும் ஓஎஸ்எம்ஆர் டிரஸ்ட் நிறுவன தலைவர் ஒ.சுந்தரச் செல்வி ஒச்சாத்தேவர் தலைமையில் தேவர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.அப்போது மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் சிவரக்கோட்டை செல்வம்,இளைஞரணி ராகேஷ் ஒச்சாத்தேவர், திருமங்கலம் தொகுதி செயலாளர் தென்னமநல்லூர் செந்தில்,திருமங்கலம் ஒன்றிய செயலாளர் குட்டி(எ)ஞானசீலன்,மதுரை ஏ.சி.தென்னரசு,எஸ்.பி.சுதர், ஆவல்சூரன்பட்டி ஈஸ்வரன்,பிச்சை,நிறைகுளம்,ராமராஜ்,முத்துவேல்,வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து