முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோலைமலை முருகன் கோவிலில் சூரசம்ஹாரவிழா

செவ்வாய்க்கிழமை, 13 நவம்பர் 2018      மதுரை
Image Unavailable

 அழகர்கோவில், - அழகர்மலை உச்சியில் முருகபெருமானின் ஆறாவது படை வீடான சோலைமலை முருகன் கோவில் உள்ளது. இன்றளவும் ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் நடைபெறும் கந்தசஷ்டி திருவிழாவின் போது  நாவல்பழம் பழுக்கும் ஸ்தலவிருட்சமான நாவல் மரம் முன்பாக சூரசம்ஹாரம் நடைபெறும் என்பது குறிப்பிடதக்கது. இங்கு நடைபெறும் திருவிழாக்களில் சூரசம்ஹாரவிழா முக்கியமானது.
இவ்விழா கடந்த 8ம் தேதி காலையில் பக்தர்களுக்கு காப்பு கட்டுதல்,  யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. இதில் அன்னம், காமதேனு, யானை, ஆட்டு கிடாய், சப்பரம் ஆகிய வாகனங்களில் தினமும் மேளதாளம் முழங்க தீவட்டி, வர்ணகுடை பரிவாரங்களுடன் சாமி புறப்பாடு நடந்தது.
நேற்று 13ம் தேதி  திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரம்ஹார விழாவையொட்டி காலையில் குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. மாலையில் 4.35 மணிக்கு வெள்ளிமயில் வாகனத்தில் சுப்பிரமணியர் புறப்பாடாகி வேல் வாங்குதல் நடைபெற்றது. பின்னர் அதே வாகனத்தில் 5.40 மணிக்கு முருகபெருமான் ஈசான திக்கில் கஜமுகாசூரனையும், அக்கினிதிக்கில் சிங்கமுகா சூரனையும் சம்ஹாரம் செய்து, ஸ்தலவிருட்சமான நாவல் மரத்தடியில் பத்மாசூரனை சம்ஹாரம் செய்யும் சூரசம்ஹார காட்சி நடைபெற்றது. தொடர்ந்து சஷ்டிமண்டபத்தில் சாந்த அபிஷேகம் நடந்தது. இந்த கோலாகல சூரசம்ஹார திருவிழாவை காண சுற்றுவட்டாரம், வெளி மாவட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்
14ம் தேதி இன்று காலையில் 10.20 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் திருக்கல்யாண உற்சவமும், மாலை 4.30 மணிக்கு ஊஞ்சல் சேவையும், மஞ்சள் நீர் உற்சவத்துடன் திருவிழா நிறைவுபெறும். விழாவையொட்டி தினமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து