முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனவரி 1ம் தேதி முதல் முடக்கப்படுமென பரவிடும் வதந்தியால் 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றும் முயற்சியில் மக்கள் தீவிரம்

வியாழக்கிழமை, 22 நவம்பர் 2018      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- ஜனவரி 1ம் தேதி முதல் புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களை மத்திய அரசு முடக்கப் போவதாக பரவிடும் வதந்தியால் தங்களிடம் உள்ள இரண்டாயிரம் ருபாய் நோட்டுக்களை மாற்றிடும் முயற்சியில் பொதுமக்கள் ஈடுபட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த காலத்தில் கருப்புபண மதிப்பிழப்பு என்ற பெயரில் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் நாட்டு மக்களின் மனதில் நீங்காத வடுக்களை ஏற்படுத்தியுள்ளது.அப்போது புழக்கத்தில் விடப்பட்ட இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் நாட்டில் மீண்டும் கருப்புபண நடமாட்டத்தை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஒரு சில தென் மாநிலங்களை தவிர அனைத்து வட மாநிலங்களிலும் உள்ள ஏடிஎம் மையங்களில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் வைக்கப்படாததால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.பெரிய அளவிலான தொகை வங்கியிலிருந்து எடுத்திடும் போது இரண்டாயிரம் ரூபாய் தவிர்த்து 500,200 மற்றும் 100 ரூபாய் நோட்டுக்களையே வங்கிகள் வழங்குகின்றன. இவ்வாறாக வழங்கப்படும் சில்லறை ரூபாய் நோட்டுக்களை சுமந்து செல்ல முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.விரைவில் நிலைமை சீரடைந்திடும் என்று மத்திய அரசு அறிவிப்பு செய்திருந்தாலும் இன்று வரை புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களை   ஏடிஎம்-களில் காணமுடியாத நிலை உள்ளது.
தற்போது தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் உள்ள ஏடிஎம் களில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளின் புழக்கம் சிறிது சிறிதாக குறைந்து வருகிறது.அதற்கு பதிலாக 500ரூபாய் நோட்டுகளின் வரத்து அதிகமாக காணப்படுகிறது.குறிப்பாக மதுரை மாவட்டம் மற்றும் திருமங்கலம் நகரிலுள்ள முக்கிய வங்களின் ஏடிஎம்களில் கடந்த சில வாரங்களாக இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளின் வரத்து குறைவாக உள்ளது.இதனால் கருப்புபண ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் ஜனவரி 1ம் தேதி முதல் புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களை மத்திய அரசு முடக்கிவிடப் போவதாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு வதந்திகள் வேகமாக பரவி வருகிறது.காற்றை விட வேகமாக பரவிடும் இந்த வதந்திகளால் பொதுமக்கள் தாங்கள் வைத்துள்ள இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் திடீரென்று செல்லாமல் போய்விடும் என்று அஞ்சி அவற்றை வங்கிகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பரிவர்த்தனைகளுக்கு கொடுத்து மாற்றிட ஆரம்பித்துள்ளனர்.
திடீரென்று கறுப்புபண ஒழிப்பு என்று தொலக்காட்சியில் அறிவிப்பு வரும் அப்போது இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாமல் போய்விடும் புதிய 1000ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்படும் என்ற பேச்சுக்கள் மதுரை மாவட்டத்தில் பரவலாக அதிகரித்து வருவது மீண்டும் ஒரு பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஏற்பட வாய்ப்பிருப்பது போன்ற மாயத் தோற்றம் உருவாக்கி வருகிறது.எனவே இந்த விஷயத்தில் மத்திய அரசும் அதன் நிதி அமைச்சகமும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் குறித்து மக்களிடம் ஏற்பட்டுள்ள அச்சத்தை நீக்கிடும் வகையில் உரிய அறிவிப்பினை  வெளியிட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.மத்திய அரசு துரித நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் மதிப்பிழப்பு விவகாரம் விரைவில் விஸ்வரூபம் எடுத்திடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து