முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

29, 30ம் தேதிகளில் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

செவ்வாய்க்கிழமை, 27 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை, தமிழகம், புதுச்சேரியில் வரும் 29, 30ம் தேதிகளில் கடலோர மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், பருமழையால் வலுப்பெறும் கிழக்கு திசைக் காற்றால் வரும் 29ம் தேதி தமிழகம், புதுச்சேரியின் இதர பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், 30ம் தேதி கடலோர மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரயில் மழைக்கான வாய்ப்பு இல்லை. சென்னை உட்பட அனைத்து இடங்களிலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஆனால் மழைக்கான வாய்ப்பு குறைவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து