முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதரையில் இன்று ஜெயலலிதா பேரவை சார்பில் எஸ்.எஸ்.சரவணன் எம்.எல்.ஏ. தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன ஊர்வலம்

செவ்வாய்க்கிழமை, 4 டிசம்பர் 2018      மதுரை
Image Unavailable

   மதுரை, - மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு சரவணன் எம்.எல்.ஏ. தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன ஊர்வலம் இன்று நடக்கிறது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி இன்று காலை 10 மணிக்கு மதுரை மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை மற்றும் மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. நிர்வாகிகள் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன ஊர்வலம் நடக்கிறது. மதுரை மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சரவணன் எம்.எல்.ஏ தலைமையில் முனிச்சாலை சந்திப்பில் நடைபெறும் இந்த மவுன ஊர்வல நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி ஜெயலலிதாவுக்கு புகழஞ்சலி செலுத்துகிறார்கள்.
இதற்கான ஆலோசனை கூட்டம் தெற்கு சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு சரவணன் எம்.எல்.ஏ தலைமை வகித்தார். பேரவை மாநில துணை செயலாளர் வெற்றிவேல், பகுதி செயலாளர்கள் மாரிச்சாமி, முத்திருளாண்டி, வட்ட செயலாளர்கள் சரவணன், மணிகண்டன், கார்த்திகேயன், நிர்வாகிகள் கார்த்திக், நந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு பொதுமக்களை திரட்டி புகழ் அஞ்சலி செலுத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து