முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய பிரதேசத்தில் தேர்தல் முடிவு: தாமதமாக காரணம் என்ன? தேர்தல் அதிகாரி விளக்கம்

வெள்ளிக்கிழமை, 14 டிசம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, மத்தியப் பிரதேச சட்டசபை தேர்தல் முடிவுகள் தாமதமாக அறிவிக்கப்பட்டதன் காரணத்தை தேர்தல் மாநில தலைமை அதிகாரி வி.எல். கந்தா ராவ் விளக்கியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட கடிதத்தில், வாக்கு எண்ணிக்கைத் தொடங்கிய 8.30 மணி முதலே, அனைத்து வேட்பாளர்களும் மின்னணு வாக்கு இயந்திரத்தின் சீல், டேக், சீரியல் எண், என அனைத்தையும் ஒவ்வொருவரும் ஆய்வு செய்தனர். சில முறை, சீல், சீரியல் எண், டேக் எண், பூத் ஊழியரின் கையெழுத்து போன்றவற்றில் வேட்பாளர்கள் சந்தேகங்களை எழுப்பினர். ஒவ்வொரு முறையும் அது தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது. ஒவ்வொரு மின்னணு இயந்திரத்தையும் வாக்கு எண்ணிக்கைக்கு எடுக்கும் போது இதுபோன்ற சிக்கல்கள் ஏற்பட்டதால், வாக்கு எண்ணிக்கையில் தாமதம் ஏற்பட்டது. வாக்கு எண்ணிக்கையை ஒவ்வொரு முறையும் பதிவு செய்து அதனை அதிகாரிகளிடம் காட்டி ஒப்புதல் பெற்றுள்ளோம். இதுபோன்ற நடைமுறைகளால்தான் தேர்தல் முடிவுகள் அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டது என்று அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து