எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆண்டிபட்டி .- தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் கிஸ்மிஸ், முந்திரிப்பருப்பு , ஏலக்காய் , 2 அடிகரும்பு தொகுப்புடன் ரூ 1000 ரொக்கம் வழங்கவும் உத்தரவிட்டது.
அதன்படி தேனி மாவட்டம் ஆண்டிபட்டி கூட்டுறவு பண்டக சாலையில் உள்ள 9 முழு நேரக் கடைகள், 6 பகுதி நேர கடைகளில் உள்ள 17 ஆயிரத்து முந்நூற்றி 96 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ 1000 ரொக்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு மாவட்ட வழங்கல் அலுவலர் கார்த்தியாயினி தலைமை தாங்கினார். தாசில்தார் அர்ச்சுணன் முன்னிலை வகித்தார். பண்டகசாலை தலைவர் முத்து வெங்கட்ராமன் வரவேற்றார். நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் லோகிராசன் பரிசு தொகுப்பு வழங்கி தொடங்கி வைத்தார்.ஏராளமான பெண்கள் வரிசையில் நின்று பொருட்களை மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர்.நிகழ்ச்சியில் பண்டகசாலை துணைத் தலைவர் பாரத், மேலாளர் கோட்டைச் சாமி, அதிமுக மகளிரணி கொடியம்மாள், கூட்டுறவு சங்க தலைவர் வெள்ளைப் பாண்டி, மாவட்ட பிரதிநிதி கவிராசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் ரெங்கசமுத்திரம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம், முல்லையம்பட்டி சங்கத்திற்கு உள்ளிட்ட ரேசன் கடைகளிலும் வழங்கப்பட்டு வருகிறது
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


