எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேனி - தேனி மாவட்டம், தேனியில் தேனி மாவட்ட கழக மாணவர் அணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் மாவட்ட மாணவரணி செயலாளர் கே.ஜெ.பாலமணிமார்பன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தேனி நகர்; கழக செயலாளர் கிருஷ்ணகுமார் மற்றும் மாணவரணி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாவட்ட இலக்கிய அணி செயலாளர் முருகேசன் வரவேற்புரையாற்றினார். மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான், முன்னாள் அரசவைக்கவிஞர் முத்துலிங்கம், கழக செய்தி தொடர்பாளர் மார்க்கண்டேயன், தஞ்சை சங்கர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கழக செய்தி தொடர்பாளர் மார்க்கண்டேயன் பேசும்போது இந்தியாவில் 70 சதவிகிதம் பேர் பேசுகின்ற இந்தியை தேசிய மொழியாக ஆக்குவதில் என்ன தவறு இருக்கிறது என்று நேரு கேட்டபொழுது பேரறிஞர் அண்ணா அவர்கள் அதிகமாக இருக்கின்ற காக்கை கூட்டங்களுக்கு மத்தியில் மயிலை போன்று இருக்கின்ற தமிழை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும் என்றார். தேனி, மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்காக தனது சொத்துக்களை எல்லாம் விற்று முல்லை பெரியார் அணை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுயிக்கிற்கு மணிமண்டபம் எழுப்பி, தமிழுக்காக, தமிழ் மக்களுக்காக யார் நல்லது செய்தாலும் அவருக்கு உரிய மரியாதை, அங்கீகாரம் அளித்தவர் புரட்சித்தலைவி அம்மா என்றார்.
முன்னாள் அரசவைக் கவிஞர் முத்துலிங்கம் பேசும்போது மொழிக்காக உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் போராட்டம் நடைபெற்றுள்ளது. ஆனால் தமிழகத்தில் நடைபெற்ற மொழிப் போரை நாடே திரும்பி பார்த்த வரலாற்று போராட்டமாகும். 1920ல் இருந்து 1936 வரை சென்னை மாகாணத்தை நீதிக்கட்சி தான் ஆண்டு வந்தது. பெண்கள் தேர்தலில் வாக்களிக்கவும், போட்டியிடவும் சட்டம் இயற்றியது உள்ளிட்ட நல்ல திட்டங்களை கொண்டு வந்தாலும், மக்களிடம் நேரடி தொடர்பு இல்லாததால் 1937ம் ஆண்டு தேர்தலில் தோற்றது. தேர்தலில் வென்ற காங்கிரஸ் இந்தியை கட்டாய பாடமாக கொண்டு வந்தது. இதை எதிர்த்து தமிழகம் முழுவதும் இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்றது. அதையடுத்து 1940ல் இந்தி கட்டாயப்பாடம் என்ற ஆணை ரத்து செய்யப்பட்டது. இரண்டாவது இந்தி எதிர்ப்பு போராட்டம் தான் உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த போராட்டம். 1965ம் ஆண்டு ஹிந்தி தான் ஆட்சி மொழி என்று மத்திய அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து தமிழகமெங்கும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது. தமிழ் அறிஞர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். இம்மொழிப்போரில் நடராஜன், தாளமுத்து, அரங்கநாதன், சின்னச்சாமி, தண்டபாணி, முத்து உள்ளிட்ட பலர் உயிரிழந்தனர். தமிழ் தமிழ் என்று பேசிய கருணாநிதி தமிழை விற்று வாழ்ந்தவர். இலங்கையில் இனப்படுகொலையை கண்டித்து இலங்கை தமிழர்களுக்காக தமிழக எம்.பிக்கள் 40 பேரும் ராஜினாமா செய்வார்கள் என்று அறிவிப்பு மட்டும் செய்துவிட்டு ராஜினாமா செய்யாமல் ஏமாற்றினார்களோ, இலங்கை தமிழர்களின் அழிவுக்கும், முல்லிவாய்க்கால் பிரச்னைக்கும் காரணமாக இருந்தாரோ அன்றே உலக தமிழர்கள் திமுகவை ஒதுக்கி விட்டனர். ஆனால் எம்.ஜி.ஆர் தமிழுக்கென்று ஒரு தனி பல்கலைக்கழத்தை உருவாக்கினார். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழக நலனுக்காக காவிரி பிரச்னையில் மேலாண்மை வாரியம் அமைக்க சட்டபோராட்டம் நடத்தினார். அவருடைய மறைவுக்கு பின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் மூலம் போராடியதில் தற்போது மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்று தமிழுக்காக, தமிழர்களுக்காக போராடி வரும் நமது கழகம் தான் மொழிபோர் தியாகிகளுக்காக வீரவணக்கம் செலுத்த தகுதியானவர்கள் என்றும், நமது கழகத்தை தமிழக மக்கள் தொடர்ந்து ஆதரிப்பார்கள் என்று சிறப்புரையாற்றினார். மாவட்ட மாணவரணி இணை செயலாளர் ஜெயக்குமார் நன்றி கூறினார். இக்கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் முருக்கோடைராமர், மாவட்ட இணை செயலாளர் மஞ்சுளாமுருகன், ஒன்றிய கழக செயலாளர்கள், நகர செயலாளர்கள், சார்பு அணி செயலாளர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள், இயக்குநர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மாவட்ட மாணவரணி நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 4 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை2 days 3 sec ago |
ஆனியன்ப்ரை4 days 23 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 1 day ago |
-
தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் : ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
12 May 2024சென்னை : தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் என்று தெரிவித்துள்ள ஓ.பி.எஸ். மூன்று ஆண்டு கால தி.மு.க.
-
கோடை விடுமுறை எதிரொலி: பத்மநாபபுரம் அரண்மனையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
12 May 2024திருவனந்தபுரம் : கோடை விடுமுறை காணமாக பத்மநாபபுரம் அரண்மனை சுற்றுலா பயணிகளால் திணறியது.
-
வெஸ்ட் நைல் காய்ச்சல்: தமிழக, எல்லையில் கண்காணிப்பு தீவிரம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
12 May 2024சென்னை : வெஸ்ட் நைல் வைரஸ் காரணமாக கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் 13 வழித்தடங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.&
-
கொளுத்தும் வெயில்: சென்னை பஸ்களில் ஓட்டுநர்களுக்கு மின்விசிறி பொருத்தம்
12 May 2024சென்னை : வெயில் பாதுகாப்பில் இருந்து ஓட்டுநர்களை பாதுகாக்கும் விதமாக சென்னை மாநகராட்சி பேருந்துகளில் மின்விசிறியை பொருத்த மாநகர் போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.&n
-
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
12 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
முத்திரை கட்டணங்கள் உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் : எடப்பாடி வலியுறுத்தல்
12 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் முத்திரை கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
பூர்வகுடி மக்கள் அமைதியாக வாழும் சூழலை ஏற்படுத்த வேண்டும்: எடப்பாடி
12 May 2024சென்னை : பூர்வகுடி மக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி தங்கள் இருப்பிடத்தில் அமைதியாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று அரசுக்கு அ.தி.மு.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள்: அண்ணாமலை, நடிகர் விஜய் வாழ்த்து
12 May 2024சென்னை : தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் ஆகியோர் அ.தி.மு.க.
-
வீட்டு வாசலில் தூங்கியவர்கள் மீது காரை ஏற்றிய பெண் கைது
12 May 2024சென்னை : சென்னையில் வீட்டு வாசலில் உறங்கியவர்களின் மீது காரை ஏற்றி விபத்தை ஏற்படுத்திய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
நெல்லை காங்.நிர்வாகி மரணம்: சோதனையில் சிக்கிய டார்ச் லைட்
12 May 2024நெல்லை : நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் உடல் கிடந்த இடத்திற்கு அருகே எரிந்த நிலையில் டார்ச் லைட் ஒன்று போலீசாரின் தேடுதல் வேட்டையில் சிக்கியுள்ளது.
-
குழந்தைகளுடன் அன்னையர் தினத்தை கொண்டாடிய நடிகை நயன்தாரா
12 May 2024சென்னை : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுல் ஒருவர் நயன்தாரா. அவர் கடந்த ஆண்டு அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படத்தில் நடித்தார்.
-
எத்தனை வழக்குகள் பாய்ந்தாலும் பேசுவதை நிறுத்த மாட்டேன் : அண்ணாமலை திட்டவட்டம்
12 May 2024சென்னை : அண்ணாதுரை, முத்துராமலிங்க தேவரை பற்றி அவதுறாக பேசிய புகாரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
-
சாலை விபத்தில் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் காயம்
12 May 2024திருவண்ணாமலை : அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.வே. கம்பன் சாலை விபத்தில் காயமடைந்தார்
-
நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியர் கைது
12 May 2024ஒட்டாவா : காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியரை கனடா போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-
கன்னட டி.வி. நடிகை விபத்தில் உயிரிழப்பு
12 May 2024பெங்களூரு : பிரபல தொலைக்காட்சி நடிகை பவித்ரா ஜெயராம் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
-
மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேட்டி
12 May 2024மதுரை : மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.தெரிவித்த
-
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் போராட்டம் தீவிரம் : சுதந்திரம் கேட்டு கோஷம்
12 May 2024ஸ்ரீநகர் : பணவீக்கம், அதிகவரி, மின்சார பற்றாக்குறை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
எடப்பாடி 70-வது பிறந்தநாள்: கவர்னர் ஆர்.என். ரவி வாழ்த்து
12 May 2024சென்னை : அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
குடியுரிமை சட்டத்தை யாரும் ஒழிக்க முடியாது : மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி பேச்சு
12 May 2024கொல்கத்தா : நான் இருக்கும் வரை யாரும் குடியுரிமை திருத்த சட்டத்தை ஒழிக்க முடியாது என்று மேற்கு வங்கத்தில் நடந்த பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி பேசினார்.
-
பொறியியல் படிப்பில் சேர முதல் வாரத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பம்
12 May 2024சென்னை : பொறியியல் படிப்பில் சேர முதல் வாரத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
-
நிக்கி ஹாலே துணை அதிபர் வேட்பாளரா? - டொனால்ட் டிரம்ப் மறுப்பு
12 May 2024வாஷிங்டன் : வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலேயை துணை அதிபர் வேட்பாாளராக நிறுத்த பரிசீலனை செய்யவில்லை என முன்னாள் அதிபர் டிரம்ப் கூற
-
நவீன ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா
12 May 2024பியாங்கியாங் : கொரிய தீபகற்பத்தில் வடகொரியா நவீன ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியுள்ளது குறித்து தங்களது நாட்டை குறிவைத்து தாக்குதல் நடத்தும் வகையில் அமைந்திருப்பதாக தென்கொரி
-
ராஜஸ்தானில் ரூ.107 கோடி போதைப்பொருள் பறிமுதல் : மும்பை போலீசார் நடவடிக்கை
12 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ரூ.107 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை மும்பை போலீசார் பறிமுதல் செய்தனர். 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
1,500 மீட்டர் ஓட்ட பந்தயம்: தடகள வீராங்கனை தீக்சா தேசிய சாதனை
12 May 2024லாஸ் ஏஞ்சல்ஸ் : இந்தியாவுக்காக 2021-ம் ஆண்டில் ஹார்மிலன் பெய்ன்ஸ் 4 நிமிடங்கள் 5.39 வினாடிகளில் பந்தய தொலைவை கடந்து படைத்திருந்த தேசிய சாதனையை தீக்சா முறியடித்து உள்ளார