முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புல்வாமா தியாகிகளுக்கு அஞ்சலி- மம்தா தலைமையில் அமைதி பேரணி

சனிக்கிழமை, 16 பெப்ரவரி 2019      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா :  புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கொல்கத்தாவில்   மம்தா பானர்ஜி தலைமையில் அமைதி பேரணி நடந்தது. 

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் 40 வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக விவாதிப்பதற்காக டெல்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எல்லா வகையிலான பயங்கரவாதத்தையும் வன்மையாக கண்டிப்பதாக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இந்நிலையில், மேற்கு வங்காள மாநில முதல் மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தலைமையில் நேற்று மாலை கொல்கத்தா நகரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மெழுகுவர்த்திகளை ஏந்தியபடி, வாய்களில் கருப்புத்துணி கட்டியவாறு, நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து