முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பரமக்குடியில் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி - மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமையில் ஏற்பு.

திங்கட்கிழமை, 25 மார்ச் 2019      ராமநாதபுரம்
Image Unavailable

 பரமக்குடி - பரமக்குடி ஐந்து முனை சந்திப்பில் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமையில் ஏற்கப் பட்டது.
 முன்னதாக ராமநாதபுரம் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் பரமக்குடி சட்டமன்ற ( தனி) இடைத் தேர்தலில் வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், தேர்தலில் வாக்காளர்கள் நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நடந்த நிகழ்ச்சியில் திரளான பெண்கள் உள்பட பொதுமக்கள் அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
 மேலும் அனைவரும் நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும், வாக்கிற்காக பணம் வாங்க மாட்டோம் என
மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமையில் அனைவரும் ஈறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
 முன்னதாக இந்நிகழ்ச்சிக்கு, ஊரக வளர்ச்சி மாவட்ட திட்ட இயக்குநர் கெட்சி லீமா அமலினி, பரமக்குடி உதவி தேர்தல் அலுவலர் ராமன், வட்டாட்சியர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாத்துரை, பரமக்குடி வட்டாட்சியர் அலுவலக தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் சாந்தி, பரமக்குடி நகராட்சி இளநிலை பொறியாளர் லெட்சுமி, வருவாய் ஆய்வாளர் ராஜேஸ்வரி  உள்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து