முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விபத்தில் சிக்கி செயல்பட முடியாத நிலையிலும் ஆம்புலன்ஸில் வந்து தனது வாக்கை பதிவு செய்த அரசு போக்குவரத்து கழக நடத்துனர்

வியாழக்கிழமை, 18 ஏப்ரல் 2019      தேனி
Image Unavailable

தேனி - தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்தவர் முபாரக் அலி. இவர் அரசு போக்குவரத்து கழக நடத்துனராக பணியாற்றி வருகிறார்.  கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு   சாலையில் நடந்து செல்லும் பொழுது எதிரே வந்த இரு சக்கர வாகனம் மோதியதில் இவருடைய கால் முறிந்தது, இதனையடுத்து சிகிச்சைக்காக தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மேலும் நேற்று அவருடைய கால் முறிவிற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற வாக்கு பதிவில் தனது ஜனநாயக கடமையை ஆற்ற  வேண்டும் என முடிவு செய்து தேனி தனியார் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் பெரியகுளத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்கு சாவடிக்கு வந்து தனது வாக்கை பதிவு செய்தார். ஜனநாயக கடமையாற்றியது தனக்கு மகிழ்ச்சியை தருவதாக முபாரக் அலி தெரிவித்தார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து