எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் கோடை உழவு செய்து விவசாயிகள் பயன்பெறலாம் என்று வேளாண்மை அதிகாரி விவசாயிகளுக்கு ஆலோசணை தெரிவித்துள்ளார்.
கோடை மழை
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்தவாரம் முதல் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. விவசாயிகள் இதனை பயன்படுத்தி கோடை உழவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கமுதி, கடலாடி வட்டாரங்களில் சென்ற வருடம் மக்காச்சோளப் பயிர்களில் படைப்புழுவின் தாக்குதல் இருந்தது. இதனைக் கட்டுப்படுத்த வேளாண்துறை மூலம் விவசாயிகளுக்கு இனக் கவர்ச்சிபொறி, நுண் உயிர்பூஞ்சானங்கள் வழங்கப்பட்டு அதனை உபயோகப்படுத்தும் முறைகள் குறித்தும் செயல் விளக்கம் செய்துகாட்டப்பட்டது.
கோடை உழவு செய்வதன் மூலம் மழை நீரை வீணாக் காமல் சேமிக்கலாம். மண்ணின் தன்மையை அதிகரித்து, காற்றோட்டம் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் வளர்ச்சியினை அதிகரிக்கச் செய்யும் மண்ணில் புதையுண்டு கிடக்கும் பூச்சிகளின் கூட்டுப் புழுக்கள் வெளியில் கொண்டுவரப்படுவதால் அழிக்கப்படுகின்றன. படைப்புழுவின் கூட்டுப் புழுக்களும், முட்டைகளும் அழிகின்றன. களைச் செடிகள், இப்படைப்புழுவின் வாழ்வியல் சுழற்சிக்கு உறுதுணையாக உள்ளது. களைச் செடிகளின் விதைகளும் கோடை உழவினால் அழிக்கப்படுகின்றன.
ஊடுபயிர்
கோடையில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ள விவசாயிகள் வரப்புப் பயிராக செண்டுமல்லி, ஆமணக்கு ஆகிய பயிர்களை பொறிப் பயிர்களாகவும், தட்டைப் பயிரை ஊடுபயிராகவும் பயிரிடலாம்.எனவே விவசாயிகள் இந்த சூழ்நிலையினை பயன்படுத்தி கோடை உழவு செய்து பயன்பெறலாம். இந்த தகவலை வேளாண்மை இணை இயக்குனர் செல்வராஜன் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


