எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொடைக்கானல் - கொடைக்கானலில் மே 18, 19 ,20, ஆகிய மூன்று நாட்கள் மலர்க்கண்காட்சி விழா.
கொடைக்கானலில் ஏப்ரல் மே ஆகிய இரண்டு மாதங்களும் குளுகுளு சீசன் காலங்களாகும். மே மாதத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிக அளவில் இருக்கும் சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில் அரசுத் துறைகள் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். கொடைக்கானல் போட் கிளப் சார்பில் படகு போட்டிகள் நடத்தப்படும். சுற்றுலாத்துறை சார்பில் கலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். விளையாட்டு துறை சார்பில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் கொடைக்கானலில் நடத்தப்படும் .இதுபோல தோட்டக்கலைத்துறை சார்பில் ஆண்டுதோறும் மலர் கண்காட்சி விழா நடத்தப்படும். இந்த ஆண்டு நடைபெற உள்ள 58 வது மலர் கண்காட்சி விழா வரும் மே மாதம் 18, 19 ,20 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. இரண்டு நாட்கள் மட்டுமே நடத்தப்படும் மலர் கண்காட்சி விழா இந்த ஆண்டு மூன்று நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது . கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா வளாகத்தில் நடைபெறும் மலர் கண்காட்சி விழாவில் மலர் கண்காட்சி அரங்கம் உருவாக்கப்பட்டு பல லட்சம் மலர்கள் காட்சிக்காக வைக்கப்படும் .இந்த மலர் கண்காட்சியில் மலர்களால் ஆன உருவங்கள், அமைப்பு ஏற்படுத்தப்படும். இதற்காக தோட்டக்கலைத்துறை சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்த தகவலை கொடைக்கானல் தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் நாராயணசாமி தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


