முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொள்ளையடித்த பணத்தை கொடுத்து விட்டு ஓடுங்கள் - சர்தாரி, நவாசுக்கு இம்ரான்கான் உத்தரவு

புதன்கிழமை, 3 ஜூலை 2019      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் : கொள்ளையடித்த பணத்தை கொடுத்து விட்டு ஓடுங்கள் என்று முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு இம்ரான்கான் உத்தரவிட்டுள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது சுமத்தப்பட்ட 3 ஊழல் குற்றச்சாட்டுகளில் ஒன்றில் அவர் குற்றவாளி என பொறுப்புடமை நீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது. இதையடுத்து, 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட அவர் லாகூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே போல், முன்னாள் அதிபர் சர்தாரி மீதும் 3 லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு தேசிய பொறுப்புடமை நீதிமன்ற காவலில் உள்ளார். இந்த நிலையில், ஷெரீப்பின் மகன், 2 நட்பு நாடுகள் உதவியுடன் தந்தையை விடுவிக்க முயற்சித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அளித்த பேட்டியில், ஊழல் வழக்கில் சிக்கியுள்ள முன்னாள் அதிபர் சர்தாரி, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆகியோருக்கு பொதுமன்னிப்பு வழங்க முடியாது. ஆனால், பொதுமன்னிப்பு வழங்க கோருவதாக இருந்தால், இருவரும் தாங்கள் கொள்ளையடித்த பாகிஸ்தான் நாட்டின் பணத்தை திருப்பி கொடுத்து விட்டு நாட்டை விட்டு வெளியேறலாம் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து