எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை : மேட்டூர் அணையிலிருந்து கரூர் வரையிலுள்ள ஏரிகள், குளங்களை உபரிநீர் மூலமாக நிரப்பும் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக ரூ. 25 ஆயிரம் கோடி மதிப்பீடு செய்யப்பட்டிருக்கின்றது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி சேலம், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் பேசியதாவது,
கோதாவரி - காவேரி இணைப்புத் திட்டத்தை அரசு நிறைவேற்றியே தீரும். அதை நிறைவேற்றுகின்ற பொழுது, நமக்கு தேவையான நீர் கிடைக்கும். 125 டி.எம்.சி. தண்ணீர் கிடைப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி துவங்கி விட்டது என்ற செய்தியையும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. கோதாவரி - காவேரி இணைப்புத் திட்டம் கரூரில் இணைக்கப்படும். அதற்கு மேல் உள்ள பகுதிகள் அனைத்தும் நீரேற்று மூலமாக இரண்டு பகுதியில் இருக்கும் விவசாயப் பெருங்குடி மக்களுக்குத் தேவையான நீரை கொடுப்பதற்கு அரசால் நடவடிக்கை எடுக்கப்படும். இப்பொழுதுகூட, மேட்டூர், ஓமலூர், சங்ககிரி, சேலம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட 100 ஏரிகளுக்கு ரூபாய் 565 கோடி செலவில் மேட்டூர் உபரிநீரை தேக்கி வைக்க இருக்கிறோம்.
அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன் , கருப்பணன் சட்டமன்ற உறுப்பினர் அந்தியூர் ராஜா ஆகியோர் தங்களுடைய வறட்சியான பகுதியில் பருவமழை காலங்களில் மேட்டூரிலிருந்து வெளியேறுகின்ற உபரிநீரை எங்கள் பகுதிக்கும் திருப்பி விட வேண்டும். எங்கள் பகுதியில் இருக்கின்ற ஏரிகளிலும் நிரப்ப வேண்டுமென்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அரசு அதையெல்லாம் கவனத்தில் எடுத்துக் கொண்டு கோதாவரி - காவேரி இணைப்புத் திட்டம் வருகின்ற பொழுது, அந்தப் பகுதி மக்களுக்கும், ஈரோடு மாவட்டத்திலிருக்கின்ற பாசனம் பெறாத அந்த ஏரிகளுக்கும் மேட்டூர் உபரி நீரை தண்ணீர் கொண்டு சென்று நிரப்பப்படும் என்ற செய்தியையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல சேலம் மாவட்டத்தில் இருக்கின்ற கெங்கவள்ளி, ஆத்தூர், ஏற்காடு சட்டமன்ற தொகுதியில் இருக்கின்ற மக்களுக்கும் மேட்டூர் தண்ணீர் ஏற்றப்பட்டு அங்கு இருக்கின்ற ஏரிகள், குளங்கள் நிரப்பப்படும். அதே போல, மேட்டூர் அணையிலிருந்து கரூர் வரையிலுள்ள இரண்டு பகுதியிலும் இருக்கின்ற விவசாயப் பெருங்குடி மக்கள் பயன்பெறுகின்ற விதமாக அங்கே இருக்கின்ற ஏரிகள், குளங்கள் முழுவதும் நிரப்புகின்ற விதமாக உபரிநீரை மூலமாக நிரப்பப்படும் என்ற செய்தியையும், இதற்காக 25 ஆயிரம் கோடி மதிப்பீடு செய்யப்பட்டிருக்கின்றது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆகவே, ஒரு சொட்டுநீர் கூட வீணாகக் கூடாது என்ற அடிப்படையில் எங்களுடைய அரசால் திட்டம் தீட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதற்காக 2 ஓய்வு பெற்ற தலைமைப் பொறியாளர்கள், 3 ஓய்வு பெற்ற கண்காணிப்பு பொறியாளர்களை நியமித்து பருவமழை காலங்களில் எங்கெங்கெல்லாம் மழைநீர் வீணாக கடலில் கலக்கின்றதோ அதையெல்லாம் கணக்கிட்டு, அந்த தண்ணீரை எப்படி பயன்படுத்துவது என்று திட்டம் தீட்டி எங்களுக்கு அறிக்கையாக தர இருக்கின்றார்கள். அந்த அறிக்கையின் அடிப்படையில், அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். நீர் ஆதாரத்தை பெருக்க வேண்டும். விவசாயிகள் இருக்கின்ற நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்பதற்காக சொட்டுநீர் பாசனத் திட்டத்தை நாங்கள் அறிமுகப்படுத்தியிருக்கிறோம். சொட்டுநீர் பாசனத்திற்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்த அரசு எங்களுடைய அரசு. ஒரு ஏக்கர் முதல் 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருந்தால் 100 சதவீதம் மானியமும், அதற்கு மேல் எத்தனை ஏக்கர் நிலம் வைத்திருந்தாலும், 75 சதவீதம் மானியத்தில் சொட்டுநீர் பாசனக் கருவிகளை விவசாயிகளுக்குத் தருகிறோம். எனவே, நிலத்தடி நீர் குறைவாக இருந்தால் கூட, சொட்டுநீர் பாசனத்தின் மூலமாக வேளாண் பணிகளை மேற்கொள்கின்ற பொழுது, விவசாயிகள் குறைந்த தண்ணீரில் அதிக விளைச்சலை பெறக்கூடிய சூழ்நிலையை உருவாக்கித் தந்திருக்கின்றோம். வேளாண் பெருமக்களுக்குத் தேவையான டிராக்டர், வேளாண் கருவிகள், விதைகள், உரம் மானிய விலையில் கொடுக்கின்றோம். வட்டியில்லாத பயிர்க்கடன் கொடுக்கிறோம். இவ்வாறு அனைத்தையும் முழுமையாக கொடுக்கின்ற ஒரே அரசு அம்மாவின் அரசு என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றிற்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்பதற்காக சேலம் மாவட்டத்தில் ஓமலூரிலிருந்து தாரமங்கலம் செல்கின்ற வழியில் மிகப் பெரிய மார்க்கெட் ஏற்படுத்தும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. சேலம் மாவட்டத்தில் இருக்கின்ற விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற காய்கறிகள், பழங்களை இங்கு ஆன்-லைனில் விற்கலாம். விலை கட்டுப்படியாகாத சமயங்களில் அங்கேயுள்ள குளிர்பதனக் கிடங்குகளில் வைத்து பாதுகாத்துக் கொள்ளலாம். அதற்கு ஒரு மாதத்திற்கு வாடகை ஏதும் கிடையாது. அங்கே விவசாயிகள், வியாபாரிகள் குளிப்பதற்கு, தங்குவதற்கு தேவையான வசதிகளை செய்ய இருக்கிறோம். அதே போல, அவ்விடத்திலேயே பணம் கிடைப்பதற்கு வசதியும் செய்ய இருக்கின்றோம். இவையெல்லாம் விவசாயிகளின் நலனுக்காக எங்களுடைய அரசால் செய்யப்படுகின்றது. இங்கு மட்டுமல்லாமல், பரிட்சார்த்த முறையில் தமிழ்நாடு முழுவதும் 10 மாவட்டங்களில் விவசாயிகளின் நலன் கருதி, விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற காய்கறிகள், பழங்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டுமென்பதற்காக ஆங்காங்கே இந்தத் திட்டத்தை செயலாக்கத்தில் எடுத்துக் கொண்டிருக்கின்றோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
விவசாயிகள், நான்கு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்த கோரிக்கையினை ஏற்று, மேட்டூர் கிழக்கு கரை, மேற்கு கரை கால்வாய்கள் முழுவதையும், மேட்டூர் அணையிலிருந்து அது முடிகின்ற எல்லை வரை கான்கிரீட் கால்வாயாக அமைக்கும் திட்டம் ரூ. 600 கோடியில் அரசு உருவாக்கிக் கொடுத்திருக்கின்றது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீர் ஒரு சொட்டு கூட வீணாகாமல் பாசனத்திற்குப் பயன்படும் வகையில் இந்தத் திட்டத்தை அம்மாவின் அரசு செய்து கொண்டிருக்கின்றது. இங்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும் இது போன்று கான்கிரீட் கால்வாய்கள் உருவாக்கப்படும். டெல்டா பாசன கால்வாய்களையும் சீர் செய்வதற்கு மத்திய அரசிடமிருந்து அனுமதி கேட்டுள்ளோம். அந்த அனுமதி கிடைத்தவுடன் டெல்டா பாசன கால்வாய்கள் அனைத்தும் கான்கிரீட் கால்வாய்களாக மாற்றி அமைக்கப்படும். இதன் மூலம் சுமார் 20 சதவிகிதம் தண்ணீர் வீணாகாமல் மிச்சப்படுவதோடு ஆண்டுதோறும் தூர்வாரும் நிலையும் மாறும்.
பொள்ளாச்சி பகுதியில் பரிட்சார்த்த முறையில் ரூபாய் 500 கோடி மதிப்பீட்டில் சொட்டு நீர் பாசனம் மூலமாக சுமார் 7,500 ஏக்கர் நிலத்தை எடுத்து அதற்குத் தேவையான கருவிகளை அரசாங்கமே கொடுத்து அந்தத் திட்டத்தை உருவாக்க இருக்கின்றது. ஒரு ஏக்கருக்கு பயன்படும் நீர் சொட்டு நீர்ப் பாசனம் மூலம் பாய்ச்சுகின்ற பொழுது கிட்டத்தட்ட 7 ஏக்கர் நிலத்திற்கு பயன்படுகின்றது. இந்தத் திட்டத்தை நிறைவேற்ற அம்மாவின் அரசு திட்டமிட்டிருக்கின்றது. இவைகளெல்லாம், குறுகிய காலத்தில், நான் முதலமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து உங்களுக்காக செய்யப்பட்ட நல்ல திட்டங்கள் என்பதை தெரிவித்து ஜெயலலிதா திட்டங்களை சிந்தாமல், சிதறாமல் விவசாயிகளிடம் கொண்டு சேர்த்திருக்கின்றோம். பண்ணைத் திட்டத்தையும் செயல்படுத்தியிருக்கின்றோம். இவ்வாறு, விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை வாரி, வாரி அரசு வழங்கிக் கொண்டிருக்கின்றது என்பதை தெரிவித்து தற்போது 101 அடியை எட்டி, 66 டி.எம்.சி. தண்ணீரோடு இருக்கின்ற மேட்டூர் அணையிலிருந்து, டெல்டா பாசன விவசாயிகளின் மனம் குளிர தண்ணீர் திறந்து விட்டிருக்கின்றோம். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 1 hour ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-09-2025.
14 Sep 2025 -
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு விழா: 2,885 கோடி ரூபாயில் புதிய திட்டப்பணிகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு சார்பில் நடந்த அரசு விழாவில் ரூ.2,885 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினா
-
கிருஷ்ணகிரியில் 85,711 பேருக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அரசு விழாவில் 85,711 பேருக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
-
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கிடும் அன்புக் கரங்கள் திட்டம் : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து உதவித் தொகையினை வழங்குகிறார்
14 Sep 2025சென்னை : பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில் அக்குழந்தைகள் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர
-
ஒசூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ
14 Sep 2025ஒசூர் : ஒசூரில் முதல்வர் ஸ்டாலின் ரோடு ஷோ மேற்கொண்டார். ஒசூரில் ரோடு ஷோ சென்ற மு. க. ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
கிருஷ்ணகிரி 5 புதிய அறிவிப்புகள்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு 5 புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
-
அஸ்ஸாமில் ரூ. 5,000 கோடியில் மூங்கில் - எத்தனால் ஆலையை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்
14 Sep 2025திஸ்பூர் : அஸ்ஸாம் மாநிலத்தில் கோல்கா மாவட்டத்தில் ரூ. 5,000 கோடி மதிப்பிலான மூங்கில் - எத்தனால் ஆலையை பிரதமர் மோடி தொடக்கிவைத்தார்.
-
அபராதம் இன்றி வருமான வரியை தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் : வருமான வரித்துறை தகவல்
14 Sep 2025மும்பை : ‘2025-26 மதிப்பீட்டு ஆண்டுக்கு இதுவரை 6 கோடிக்கும் மேல் வருமான வரிக் கணக்குகள் (ஐடிஆா்) தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக’ வருமான வரித் துறை சாா்பில் சனிக்கிழமை தெரிவ
-
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட் இன்று இடைக்கால உத்தரவு
14 Sep 2025புதுடெல்லி : மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட் திங்கள்கிழமை (செப்.15) இடைக்கால உத்தரவை அளிக்க உள்ளது.
-
தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு: எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி பயணம்
14 Sep 2025சென்னை : முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சமீபத்தில் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த நிலையில் எடப்பாடி பழனிசாமி
-
வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்: பெரம்பலூர் மாவட்டத்திற்கு நிச்சயம் மீண்டும் வருவேன் த.வெ.க. தலைவர் விஜய் அறிக்கை
14 Sep 2025சென்னை : பெரம்பலூர் மக்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ள த.வெ.க.
-
பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும்: இனி ஆண்டுதோறும் இசைஞானி இளையராஜா பெயரில் விருதுகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
14 Sep 2025சென்னை : இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக இனி ஆண்டுதோறும் இசைஞானி இளையராஜா பெயரில் விருதுகள் வழங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
-
திருச்சியின் வளர்ச்சியை சரியாக பார்க்கவில்லை : விஜயக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலடி
14 Sep 2025திருச்சி : திருச்சியின் வளர்ச்சியை விஜய் சரியாக பார்க்கவில்லை என்று த.வெ.க. தலைவர் விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
-
விடுமுறை தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
14 Sep 2025திருச்செந்தூர் : விடுமுறை தினத்தை முன்னிட்டு நேற்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
-
ஜி.எஸ்.டி. சீர்திருத்தத்தால் மக்கள் மீதான வரிச்சுமை குறைந்துள்ளது : மத்திய அமைச்சர் நிர்மலா பேச்சு
14 Sep 2025சென்னை : ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் பொதுமக்கள் மீதான வரிச்சுமை குறைந்துள்ளது என்று மத்திய அமைச்சர் நிர்மலா தெரிவித்துள்ளார்.
-
நவம்பர், டிசம்பர் மாதங்களில் அடுத்தடுத்து புயல்கள் உருவாகும் : வானிலை முன்கணிப்பில் தகவல்
14 Sep 2025சென்னை : நவம்பர் பிற்பகுதி மற்றும் டிசம்பர் முற்பகுதியில் அடுத்தடுத்து புயல்கள் உருவாகக்கூடும் என்றும், புயல் சின்னங்கள் டெல்டா, வட தமிழகம், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள
-
திருச்சியில் மர்மநபர்கள் துணிகரம்: வியாபாரியை வழிமறித்து 10 கிலோ தங்கம் கொள்ளை : 4 தனிப்படைகள் அமைத்து போலீஸ் விசாரணை
14 Sep 2025திருச்சி : திருச்சியில் வியாபாரியை வழிமறித்து 10 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் மர்மநபர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து போலீஸ் தீவிர விசாரணை நடத்தி
-
இன்றைய ராசிபலன்
14 Sep 2025 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Sep 2025- சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
- மதுரை நவநீதகிருஷ்ணசுவாமி விழா தொடக்கம்.
- திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சன சேவை.
- பிரான்மலை சேக்
-
இன்றைய நாள் எப்படி?
14 Sep 2025