எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி : விளையாட்டு துறையில் சாதனை படைத்த மாற்றுத் திறனாளி தடகள வீராங்கனை தீபா மாலிக் கேல் ரத்னா விருது பெறுகிறார். கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா உள்பட 19 பேர் அர்ஜுனா விருதுக்கு தேர்வாகியுள்ளனர்
இந்திய விளையாட்டுத் துறையில் சாதிக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜுனா விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி முகுந்தகம் ஷர்மா தலைமையில் குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம், முன்னாள் நீளம் தாண்டுதல் வீராங்கனை அஞ்சு ஜார்ஜ், பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஞ்சும் சோப்ரா உள்பட 12 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி கடந்த 2 நாட்களாக டெல்லியில் கூடி ஆலோசித்தது. இதில் இந்தியாவின் ‘நம்பர் ஒன்’ மல்யுத்த வீரரும், ஆசிய, காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனுமான பஜ்ரங் பூனியாவுக்கு மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்க பரிந்துரைப்பது என்று ஏற்கனவே ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டு கேல் ரத்னா விருதுக்கு 2016-ம் ஆண்டு ரியோ பாரா ஒலிம்பிக்கில் குண்டு எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாற்றுத் திறனாளி வீராங்கனையான தீபா மாலிக்குக்கு வழங்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
அரியானாவைச் சேர்ந்த 48 வயதான தீபா மாலிக் பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் கைப்பற்றிய முதல் இந்திய வீராங்கனை என்ற மகத்தான சாதனைக்கு சொந்தக்காரர். தொடர்ச்சியாக மூன்று பாரா ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற ஒரே இந்திய வீராங்கனையும் இவர் தான். இதேபோல், அர்ஜுனா விருதுக்கு 19 பேர் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதில் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, பெண்கள் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் பூனம் யாதவ், தடகள நட்சத்திரங்கள் தஜிந்தர் பால் சிங் தூர், முகமது அனாஸ், ஸ்வப்னா பர்மன், தமிழ் தலைவாஸ் கபடி அணியின் கேப்டன் அஜய் தாகூர் ஆகியோரும் அடங்குவர். மேலும், சிறந்த பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சார்யா விருதுக்கு விமல்குமார் (பேட்மிண்டன்), சந்தீப் குப்தா (டேபிள் டென்னிஸ்), மொகிந்தர் சிங் தில்லான் (தடகளம்) ஆகியோர் தேர்வாகினர். சிறந்த பயிற்சியாளருக்கான துரோணாச்சார்யா வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு மெஸ்பன் பட்டேல் (ஹாக்கி), ராம்பிர் சிங் கோகர் (கபடி), சஞ்சய் பரத்வாஜ் (கிரிக்கெட்) ஆகியோரும் தேர்வாகினர். வாழ்நாள் சாதனையாளருக்கான தயான்சந்த் விருதுக்கு மானுல் பிரெட்ரிக்ஸ் (ஹாக்கி), ஆருப் பசாக் (டேபிள் டென்னிஸ்), மனோஜ்குமார் (மல்யுத்தம்), நிட்டேன் கிர்டான் (டென்னிஸ்), லால்ரெம்சங்கா (வில்வித்தை) ஆகியோரும் தேர்வாகினர். இந்த பட்டியலுக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் ஒப்புதல் வழங்கி ஓரிரு நாட்களில் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிடும். கேல் ரத்னா விருதுக்கு ரூ.7½ லட்சமும், மற்ற விருதுகளுக்கு ரூ.5 லட்சமும் பாராட்டு பட்டயத்துடன் ஊக்கத்தொகையும் வழங்கப்படும்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-03/12/2025
03 Dec 2025 -
முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. சின்னசாமி தி.மு.க.வில் இணைந்தார்
03 Dec 2025சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. சின்னசாமி தி.மு.க.வில் இணைந்தார்.
-
எஸ்.ஐ.ஆர். விவகாரம்: அமித்ஷா மீது மம்தா குற்றச்சாட்டு
03 Dec 2025கொல்கத்தா, வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணிக்கு அமித்ஷா தான் காரணம் என்று மம்தா பானர்ஜி கூறினார்.
-
சஞ்சார் சாதி செயலி: ஆப்பிள், கூகுள் நிறுவனங்கள் எதிர்ப்பு
03 Dec 2025டெல்லி : சஞ்சார் சாதி செயலியால் மத்திய அரசுக்கு ஆப்பிள், கூகுள் நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
-
கார்த்திகை தீபத்திருவிழா: சுவாமிமலையில் தேரோட்டம்
03 Dec 2025சுவாமிமலை : கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு சுவாமிமலையில் தேரோட்டம் நடைபெற்றது.
-
தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய ஓ.டி.பி சரிபார்ப்பு இனி கட்டாயம் : விரைவில் அமல்படுத்த ரயில்வே முடிவு
03 Dec 2025புதுடெல்லி : தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு ஓ.டி.பி சரிபார்ப்பு கட்டாயம் அமல்படுத்த உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
வங்காளதேசத்தை சேர்ந்த கர்ப்பிணிப்பெண் இந்தியாவுக்குள் நுழைய மனிதாபிமான அடிப்படையில் சுப்ரீம் கோர்ட் அனுமதி
03 Dec 2025புதுடெல்லி, வங்காளதேசத்தில் இருந்து கர்ப்பிணிப்பெண்கள் இந்தியாவுக்குள் நுழைய மனிதாபிமான அடிப்படை வழங்கப்பட்டுள்ளதாக சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
பாகிஸ்தானில் எச்.ஐ.வி அதிகரிப்பு
03 Dec 2025இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் 80 சதவீதம் பேர் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
வெனிசுலா மீது விரைவில் அமெரிக்கா தாக்குதல் நடத்தும்: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு
03 Dec 2025வாஷிங்டன் வெனிசுலாவுக்குள் புகுந்து விரைவில் அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என்று ட்ரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.
-
2 நாள் பயணமாக ரஷ்ய அதிபர் இன்று இந்தியா வருகிறார்: டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு
03 Dec 2025புதுடெல்லி, டெல்லியில் நடைபெற உள்ள இந்தியா-ரஷ்யா மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 2 நாள் பயணமாக ரஷ்யா அதிபர் புதின், இன்று இந்தியா வருகிறார்.
-
கார்த்திகை தீபத்திருவிழா: பழனி முருகன் கோவிலில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு
03 Dec 2025பழனி : கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி பழனி முருகன் கோவிலில் பரணி தீபம் ஏற்றி வழிபாடு நடந்தது
-
மாயமான மலேசிய விமானம்: 10 ஆண்டுகளுக்கு பிறகு தேடும் பணி வரும் 30-ம் தேதி மீண்டும் தொடக்கம்
03 Dec 2025கோலாலம்பூர் : 10 ஆண்டுகளுக்கு முன் மாயமான மலேசிய விமானத்தை மீண்டும் தேடும் பணி வரும் 30-ம் தேதி தொடங்குகிறது.
-
என்னை கொல்ல முயற்சி: பாக்., ராணுவம் மீது இம்ரான்கான் குற்றச்சாட்டு
03 Dec 2025இஸ்லாமாபாத், என்னை கொல்ல பாகிஸ்தான் ராணுவம் முயல்வதாக முன்னாள் பிரதமர் இம்ரான்கான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
டி-20 தொடருக்கு கில் ரெடி?
03 Dec 2025மும்பை : காயம் காரணமாக சுப்மன் கில் அணியில் இடம் பெறுவாரா இல்லையா என சந்தேகம் எழுந்த நிலையில் அவர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாட தயாராக உள்ளதாக தகவ
-
கம்ப்யூட்டரை ‘ஆன்' செய்யாமல் துணை முதல்வர் ஆய்வு செய்தாரா? - தமிழக அரசு விளக்கம்
03 Dec 2025சென்னை : மழை பாதிப்பு புகார் மீதான நடவடிக்கைக்கு கம்ப்யூட்டரை ஆன் செய்யாமல் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு நடத்தினார்.
-
மும்பை விமான நிலையத்தில் ரூ.94 லட்சம் மதிப்பிலான உயர்ரக கஞ்சா பறிமுதல்
03 Dec 2025மும்பை : மும்பை விமான நிலையத்தில் உயரக கஞ்சாவை அதிகாரிகள் பறிமுதல் செய்து வாலிபரை கைது செய்தனர்.
-
கடும் பனிப்புயல் காரணமாக அமெரிக்காவில் 5.5 கோடி பேர் பாதிப்பு
03 Dec 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் தற்போது 3-வது பனிப்புயல் காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
இன்டியா கூட்டணி வலிமையாக இருக்கிறது: செல்வப்பெருந்தகை
03 Dec 2025சென்னை : இன்டியா கூட்டணி வலிமையாக இருக்கிறது என்று செல்வப்பெருந்தகை கூறினார்.
-
15 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் ஹசாரே தொடரில் கோலி
03 Dec 2025மும்பை : 15 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் விஜய் ஹசாரே தொடரில் விளையாட விராட் கோலி விருப்பம் தெரிவித்துள்ளதாக தில்லி கிரிக்கெட் சங்கம் உறுதிபடுத்தியுள்ளது.
-
மாலியில் கடத்தப்பட்ட ஐந்து இந்தியர்களை மீட்க வேண்டும்: கனிமொழி எம்.பி. கோரிக்கை
03 Dec 2025புதுடெல்லி, ஆப்பிரிக்காவில் கடத்தப்பட்ட 5 இந்தியர்களை மீட்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் கனிமொழி எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.
-
தாழ்வுப்பகுதியாக வலுவிழந்து மண்டலம்: இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
03 Dec 2025சென்னை : காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவிழந்துள்ளதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், இன்று ராமநாதபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனம
-
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நலமாக உள்ளார்: சகோதரி உஸ்மா தகவல்
03 Dec 2025இஸ்லாமாபாத், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நலமாக உள்ளதாக அவரது சகோதரி உஸ்மா தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணிகளின் எண்ணிக்கை சரிவு
03 Dec 2025சென்னை : சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணிகளின் எண்ணிக்கை சரிவடைந்துள்ளது.
-
போரால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனத்தில் ஒரே நேரத்தில் 54 ஜோடிகளுக்கு திருமணம்
03 Dec 2025காசா : போரால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனத்தில் 54 ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம் நடைபெற்றது.
-
பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மாற்றியமைப்பு
03 Dec 2025டெல்லி : பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மாற்றியமைக்கப்பட்டு புதிய உறுப்பினர்களின் பெயர்களை பட்டியலிட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


