எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விநாயகர் சதுர்த்தி மற்றும் வேளாங்கண்ணி திருவிழாவை சீர்குலைக்க சதித் திட்டம் தீட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் இருந்து தமிழகத்துக்குள் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக உளவுத் துறை எச்சரிக்கை வெளியானதையடுத்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் நிலையில் உள்ளனர். கோவை உள்ளிட்ட மாநிலத்தின் பல நகரங்களில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை சீர்குலைக்கும் எண்ணத்தில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற லஸ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் 6 பேர் ஊடுருவி இருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த மாதம் 2-ம் தேதி விநாயகர் சதுர்த்தியாகும். ஆனால் ஒரு வாரத்துக்கு முன்னதாகவே இந்து அமைப்பினர் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்துவார்கள். இந்த ஒரு வார காலமும் சிலைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். போலீஸ் பாதுகாப்புடன் பூஜை நடத்தப்பட்டு கடைசி நாளில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படும். இப்படி கோலாகலமாக நடைபெறும் விழாவை சீர்குலைப்பதற்காகவும், வேளாங்கண்ணி திருவிழாவை சீர்குலைப்பதற்காகவும் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தீவிரவாதிகள் இலங்கை வழியாகவே தமிழகத்திற்குள் ஊடுருவி இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் மாநில போலீஸ் டி.ஜி.பி.க்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர். இரண்டு தினங்களுக்கு முன் அனுப்பப்பட்ட இந்த சுற்றறிக்கையில்தான் மேற்கண்ட தகவல்கள் இடம்பெற்றுள்ளன. சந்தேகத்திற்கு இடமாக 6 பேர் தமிழகத்தில் ஊடுருவி உள்ளதாக தெரிகிறது. உஷாராக இருங்கள் என்று தமிழக போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்திற்கு இந்த எச்சரிக்கை கடிதம் வந்துள்ளது. இதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
உளவுப் பிரிவு எச்சரிக்கையை தொடர்ந்து மாநிலம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு கூடுதல் பாதுகாப்பு போட உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் ஐ.ஜி.க்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்த டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவையடுத்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்நிலையில் உள்ளனர். குறிப்பாக கோவை நகருக்குள் தீவிரவாதிகள் ஊடுருவல் என வந்த தகவலையடுத்து கோவையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு கோவையில் உள்ள ஆலயங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநில போலீசாரும், துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரள பதிவு வாகனங்களில் தீவிர சோதனை நடைபெற்றது. கேரள எல்லையிலும் தீவிர சோதனையை போலீசார் நடத்தினர்.
இதே போல் சென்னை நகரிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தலைமை செயலகம் உள்ளிட்ட பல பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பக்தர்கள் சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள உலகப் புகழ் பெற்ற ஆண்டாள் கோவிலில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சுருக்கமாக சொன்னால் தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் நிலையில் உள்ளனர்.
மேட்டூர் அணையில் வெடிகுண்டுகள் ஏதும் வைக்கப்பட்டுள்ளனவா என்பதை கண்டறிய போலீசார் அங்கு, அங்குலம் அங்குலமாக சோதனையில் ஈடுபட்டனர். இதே போல திருப்பூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளிலும் ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டு வாகன சோதனை நடத்தினர். வெடிகுண்டுகள் கொண்டு வரப்படுகிறதா என்பதை கண்டறிய கடலோர பகுதிகளிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வழிபாட்டு தலங்கள், சுற்றுலா தளங்கள், விளையாட்டு மைதானங்கள் என ஒன்றுவிடாமல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதே போல் மக்கள் அதிகமாக கூடும் பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களிலும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பயணிகளின் உடமைகள் பலத்த சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. வணிக வளாகங்கள், விடுதிகள் ஒன்றையும் போலீசார் விட்டு வைக்கவில்லை. கோவையில் உச்சக்கட்ட உஷார்நிலையில் போலீசார் வைக்கப்பட்டுள்ளனர். இதே போல் மாநிலத்தில் சந்தேகத்திற்கிடமான அனைத்து இடங்களிலும் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கருதப்படும் பகுதிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என காவல் துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தின் போது கடந்த ஏப்ரல் மாதம் சென்னையில் பாரிமுனை, மண்ணடி, திருவல்லிக்கேணி, ஐஸ்ஹவுஸ், ராயப்பேட்டை ஆகிய பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருந்தது. இப்போதும் அந்த பகுதிகளில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: புள்ளி பட்டியல் 'ஏ' பிரிவில் முதலிடத்தில் இந்திய அணி
15 Sep 2025துபாய் : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் தற்போது வரை 6 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்த நிலைியல் புள்ளி பட்டியலில் ஏ பிரிவில் இந்திய அணியும் பி பிரிவில் ஆப்கானிஸ்தானும்
-
தலைமகன் அண்ணா நிமிர்த்திய தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
15 Sep 2025சென்னை, தலைமகன் அண்ணா நிமிர்த்திய தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம் என்று ஏ.ஐ.
-
வக்பு திருத்த சட்டத்திற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு: சில விதிகளுக்கு இடைக்காலத் தடை
15 Sep 2025புதுடெல்லி, மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு முழுவதுமாக தடை எந்த முகாந்திரமும் இல்லை என்று தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட், வக்ஃப் சட்டத் திருத்த சட்
-
வக்பு சட்டம் தொடர்பான சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு கிரண் ரிஜிஜு வரவேற்பு
15 Sep 2025டெல்லி : வக்பு சட்டம் தொடர்பான சுப்ரீம் கோர்ட் உத்தரவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வரவேற்றுள்ளார்.
-
இந்தியாவுடனான உறவை முறிக்க முடியாது: அமெரிக்காவுக்கு ரஷ்யா பதில்
15 Sep 2025மாஸ்கோ : எண்ணை வாங்கும் விவகாரம் தொடர்பாக இந்தியாவுடனான உறவை முறிக்க முடியாது என்று அமெரிக்காவுக்கு ரஷ்யா கூறியுள்ளது.
-
தமிழகத்தில் சேலம், வேலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
15 Sep 2025சென்னை, தமிழகத்தில் சேலம், வேலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
1,231 கிராம சுகாதார செவிலியர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதல்வர் வழங்க உள்ளார் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
15 Sep 2025சென்னை : 1,231 கிராம சுகாதார செவிலியர்களுக்கு பணிநியமன ஆணையை 22ம் தேதி முதல்வர் வழங்குகிறார் என மா. சுப்பிரணியன் தெரிவித்துள்ளார்.
-
மிராய் திரைவிமர்சனம்
15 Sep 2025பேரரசர் அசோகர் சாகாவரம் பெறக்கூடிய ரகசியங்களை 9 புத்தகங்களில் எழுதி அதனை ஒரு இடத்தில் மறைத்து வைக்கிறார்.
-
வக்பு திருத்த சட்டம் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு
15 Sep 2025சென்னை, வக்பு திருத்த சட்டம் தொடர்பான சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
-
இந்தியா-பாகிஸ்தான் பேட்டியை ரத்து செய்ய மறியல்: 37 பேர் கைது
15 Sep 2025கோவை : இந்தியா - பாகிஸ்தான் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை ரத்து செய்யகோரி கோவையில் ரெயில் மறியலில் ஈடுபட்ட 37 பேரை பேலீசார் கைது செய்தனர்.
-
தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் அரசு விடுமுறை விட கோரிக்கை
15 Sep 2025சென்னை, தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் அரசு விடுமுறை விட வேண்டும் என்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் இப்போதே கோரிக்கை விடுக்க தொடங்கியுள்ளனர்.
-
ஜார்க்கண்ட் மாநிலத்தில் தலைக்கு ரூ. 1 கோடி அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்டு சுட்டுக்கொலை
15 Sep 2025ராஞ்சி : தலைக்கு ரூ. 1 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்டு பாதுகாப்பு படையால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
-
ரஷ்யா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது உக்ரைன் தாக்குதல்
15 Sep 2025மாஸ்கோ : ரஷ்யாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
-
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் 'அன்புக்கரங்கள' திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்
15 Sep 2025சென்னை, பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 2000 உதவித்தொகை வழங்கிடும் அன்புக் கரங்கள் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று (செப். 15) தொடக்கி வைத்தார்.
-
எங்களுடைய அடிப்படையே பதவி அல்ல, பொறுப்புதான்: 'அன்பு கரங்கள்' திட்ட தொடக்க விழாவில் முதல்வர் பேச்சு
15 Sep 2025சென்னை, அரசியல் என்பது மக்கள் பணி. அது கடுமையான பணி.
-
மருத்துவ படிப்பை பாதியில் உதறிய மதராசி பட நடிகர்
15 Sep 2025சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான மதராசி படத்தில் துப்பாக்கியை எடுத்து சித்தார்தா சங்கரிடம் கொடுக்கும் காட்சி இருக்கும். திரையில் இந்த காட்சி வரும்போத
-
தங்கம் விலை சற்று சரிவு
15 Sep 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (செப். 15) சவரனுக்கு ரூ. 80 குறைந்து விற்பனையானது.
-
நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: மத்திய அரசு வெளியிட்டது
15 Sep 2025புதுடெல்லி, நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டு விளக்கமளித்துள்ளது.
-
பீகாரில் தொகுதி பங்கீட்டில் இழுபறி: 243 தொகுதிகளிலும் போட்டியிட தேஜஸ்வி யாதவ் அதிரடி முடிவு
15 Sep 2025பாட்னா : பீகாரில் தொகுதி பங்கீட்டில் இழுபறி 243 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்று தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.
-
பி.எட். ,எம்.எட். மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க மேலும் கால அவகாசம்: அமைச்சர் கோவி.செழியன் தகவல்
15 Sep 2025சென்னை, பி.எட். ,எம்.எட். மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.
-
விஜய் வருகையால் அனைத்து கட்சிகளின் வாக்குகள் சிதறும் : கார்த்தி சிதம்பரம் எம்.பி. கருத்து
15 Sep 2025மாானமதுரை : விஜய் வருகையால் அனைத்து கட்சிகளின் வாக்குகள் சிதறும் என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.
-
ஒரே இரவில் 245 மிமீ மழை: ஐதராபாத்தில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 3 பேர்
15 Sep 2025தெலங்கானா : தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக அந்த நகரம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
-
பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி: இந்திய ராணுவ வீரர்களுக்கு அர்பணித்த கேப்டன் சுப்மன்
15 Sep 2025துபாய் : பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி பஹல்காமில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், நம்மைப் பாதுகாக்கும் துணிச்சல்மிக்க நமது ஆயுதப் படைகளுக்கும் அர்ப்பணிக்கப்படுகிறது என்று இந்
-
நேபாள பிரதமர் சுசீலா கார்கியின் அமைச்சரவையில் 3 பேர் பதவியேற்பு
15 Sep 2025காத்மாண்டு : நேபாள பிரதமர் சுசீலா கார்கியின் புதிய அமைச்சரவையில் 3 பேர் அமைச்சர்களாக நேற்று பதவியேற்றனர்.
-
பார்லி.யில் காப்பீட்டு திருத்த மசோதா தாக்கல் செய்யப்படுவது எப்போது? - நிர்மலா சீதாராமன் பதில்
15 Sep 2025புதுடெல்லி : காப்பீட்டு திருத்த மசோதா எப்போது தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.