முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகாரில் அருண் ஜெட்லிக்கு சிலை - நிதிஷ் குமார் அறிவிப்பு

சனிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

பாட்னா : மத்திய முன்னாள் நிதி அமைச்சர் மறைந்த அருண் ஜெட்லிக்கு பீகாரில் சிலை அமைக்கப்படும். ஆண்டுதோறும் அவரது பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.  

முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஆகஸ்ட் 24ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்பட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், மத்திய முன்னாள் நிதி மந்திரி மறைந்த அருண் ஜெட்லிக்கு பீகாரில் சிலை அமைக்கப்படும் என முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மறைந்த முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு பீகார் மாநிலத்தில் சிலை அமைக்கப்படும். மேலும், ஆண்டுதோறும் அவரது பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து