எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிகாகோ, : மகாத்மா காந்தியின் தொலைநோக்குப் பார்வைக்கு பொதுவாழ்வில் இருக்கும் ஒவ்வொருவரும் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்று சிகாகோவில் துணை முதல்வர் ஓ.பி.எஸ் பேசினார்.
சிகாகோ நகரில் நேபர்வல்லில், மெட்ரோபாலிட்டன் ஏசியா ஃபேமிலி சர்வீசஸ் மையத்தின் சார்பில் நடைபெற்ற தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் விழாவில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:
மகாத்மா காந்தியின் 150- ஆவது பிறந்த நாளை முன்னிட்டு “9ஆவது காங்கிரஸெனல் விருது கண்கவர் நிகழ்ச்சியில் உலகளாவிய சமூக ஆஸ்கர், 2019” விருது பெற்ற திருமதி.சந்தோஷ்குமார் அவர்களை முதலில் நான் பாராட்டுகிறேன்.
சிகாகோ பெருநகரத்தில் அவர் ஆற்றிய மிகச் சிறப்பான சமுதாயப் பணிகளுக்காக இப்போது திருமதி.சந்தோஷ்குமாருக்கு இன்னொரு விருது வழங்கப்பட்டிருக்கிறது.
திருமதி.சந்தோஷ்குமார் சுவாமி விவேகானந்தரின் வழியைப் பின்பற்றி சிகாகோ வந்து - இங்கே ஒரு சமுதாய அமைப்பை உருவாக்கியிருக்கிறார்.
கடந்த பல வருடங்களாக “மெட்ரோபாலிட்டன் ஏசியன் ஃபேமிலி சர்வீஸஸ்” அமைப்பு இங்கே ஆற்றும் சமுதாயத் தொண்டுகள் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. அதற்காக அவர்களை பாராட்டி, மென் மேலும் இது போன்ற சமுதாயப் பணிகளில் - எதிர்கால முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன். எனக்கும் இந்த அமைப்பின் சார்பில் இன்று “மகாத்மா காந்தி மெடலியன் ஆஃப் எக்ஸெலன்ஸ்” பதக்கம் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளேன் என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இது மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்தநாள் விழா. கடந்த சில நாட்களாக நான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் எல்லாம் அமெரிக்க வாழ் சமூகத்தின் தலைவர்கள் பலரும் எங்கள் தேச தந்தையின் பெயரை உச்சரிப்பதைக் கேட்கும் போது இந்தியன் என்ற முறையில் எனக்கு பெருமையாகவும், மனநிறைவாகவும் இருக்கிறது.
மகாத்மா காந்தி அவர்களின் தொலைநோக்குப் பார்வைக்கு பொதுவாழ்வில் இருக்கும் ஒவ்வொருவரும் தங்களை மீண்டும் மீண்டும் அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்பதை நினைவூட்டும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டிருப்பதாக எண்ணுகிறேன். இன்றைய தினம் பதக்கத்தை வழங்கி என்னை கவுரவித்துள்ளதற்கு நன்றி. இந்த பதக்கம் என் மீது மேலும் ஒரு புதிய பொறுப்பை என் மீது சுமத்தியிருக்கிறது என்பதை தெரிவித்து – அனைவருக்கும் நன்றி தெரிவித்து விடை பெறுகிறேன்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
மகளிர் உரிமை தொகையை விமர்சிக்க பா.ஜ.க.வுக்கு தகுதியில்லை: அமைச்சர்
13 Feb 2026சென்னை, மகளிர் உரிமை தொகையை விமர்சிக்க பா.ஜ.க.வுக்கு தகுதியில்லை என்றும், சூரியனை எந்த கையாலும் மறைக்க முடியாது என்றும் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
-
தங்கம், வெள்ளி விலை குறைவு
13 Feb 2026சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வெள்ளிக்கிழமை குறைந்து விற்பனையானது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை காலை சவரனுக்கு ரூ.
-
மகளிர் உரிமைத்தொகை குறித்த அரசின் அறிவிப்பால் வங்கிகளில் அலைமோதிய பெண்கள் கூட்டம்
13 Feb 2026சென்னை, தமிழக அரசு அறிவித்த மகளிர் உரிமைத் தொகை ரூ. 5 ஆயிரம் எடுக்க வங்கிகளில் நேற்று அலைமோதிய பெண்கள் கூட்டத்தால் வங்கி ஊழியர்கள் திணறினர்.
-
பல்வேறு தேர்வு வாரியங்கள் மூலம் தேர்வான 9,801 பேருக்கு புதிதாக பணிநியமன ஆணைகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
13 Feb 2026சென்னை, தமிழ்நாடு அரசின் பணியாளர் தெரிவு முகமைகளான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்ந
-
தோல்வி பயத்தால் ரூ.2000 தருவதாக முதல்வர் வாக்குறுதி அளித்துள்ளார்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு
13 Feb 2026சென்னை, வரும் சட்டசபை தேர்தலில் தோல்வி பயத்தால் முதல்வர் ஸ்டாலின் மகளிர் உரிமை தொகையை அதிகரித்துள்ளார் என்று அ.தி.மு.க.
-
விஜய் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற வடமாநிலத்தை சேர்ந்தவர் உயிரிழப்பு
13 Feb 2026சேலம், சேலத்தில் நடந்த விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் மயக்கம் அடைந்த நபர் திடீர் என்று உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இன்று காதலர் தினம்: ரோஜா பூக்களின் விலை கடும் உயர்வு
13 Feb 2026போரூர், நாடு முழுவதும் இன்று காதலர்களால் காதலர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு ரோஜா பூக்களின் விலை கடும் உயர்ந்துள்ளது.
-
திருவண்ணாமலையில் சோகம்: வீடு இடிந்து விழுந்ததில் 2 மாணவர்கள் உயிரிழப்பு
13 Feb 2026திருவண்ணாமலை, திருவண்ணாமலையில் வீடு இடிந்து விழுந்ததில் 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
முதல் மனைவி இறந்துவிட்டால் 2-வது மனைவிக்கு ஓய்வூதியம் வழங்க முடியாது: ஐகோர்ட்
13 Feb 2026சென்னை, முதல் மனைவி இறந்துவிட்டால் 2-வது மனைவிக்கு ஓய்வூதியம் வழங்க முடியாது என்று உயர் நீதமன்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் தீர்ப்பு அளித்துள்ளத
-
தமிழகத்தில் கலைஞர் உரிமை தொகை திட்டத்தில் மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணம் மற்றும் சிறப்பு தொகை ரூ.2,000 உள்பட 1.31 கோடி மகளிர் வங்கி கணக்கில் ரூ.5,000 வரவு: திராவிட மாடல் 2.0 ஆட்சிக்காலத்தில் உரிமை தொகை ரூ.2,000 ஆக மேலும் உயர்த்தப்படும்
13 Feb 2026சென்னை, மகளிர் உரிமைத் தொகையாக ரூ. 5,000 நேற்று காலை வரவு வைக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பிப்ரவரி மாதத்துக்கான ரூ.
-
மோடியின் அரசியல் வாழ்க்கை: வைரலான அதிபர் ட்ரம்ப் பேச்சு
13 Feb 2026நியூயார்க், பிரதமர் நரேந்திர மோடியின் "அரசியல் வாழ்க்கையை அழிக்க நான் விரும்பவில்லை" என கடந்தாண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ர்ம்ப் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைர
-
காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை சார்பில் ரூ. 115 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்தார்
13 Feb 2026சென்னை, காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை சார்பில் ரூ. 115 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
பாகிஸ்தானில் நிலநடுக்கம்
13 Feb 2026பலூசிஸ்தான், பாகிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம் உணரப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
13 Feb 2026- இராமேசுவரம் சுவாமி அம்பாள் முத்தங்கி சேவை, இரவு ங்க பல்லக்கில் புறப்பாடு,
- திருமயம் ஆண்டாள் திருக்கல்யாணம்
- புஷ்ப பல்லக்கில் பவனி.
- இராமநாதபுரம் செட்டிதெரு முத்தாலம்மன் பவ
-
இன்றைய நாள் எப்படி?
13 Feb 2026


