எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருமங்கலம்.-மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.6 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டு திட்டங்களுக்கு நடைபெற்ற பூமிபூஜை விழாவில் தமிழக வருவாய்,பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு சாலைகளை உறுதிப்படுத்திடும் பணிகளை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு வதிகளை மேம்படுத்திடும் வகையில் சிரமமில்லா போக்குவரத்திற்கு வசதியாக ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.6 கோடி மதிப்பீட்டில் சாலைகளை உறுதிப்படுத்தி மேம்படுத்திடும் பணிகளுக்கான பூமிபூஜை விழா நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது.அதன்படி வாரணாசி-கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் 3.8கி.மீ தூரத்திற்கு சாலைகளை ரூ.4.22கோடியில் உறுதிப்படுத்துதல்,நெடுஞ்குளம்-கூடக்கோவில் சாலையை ரூ.1.23கோடியில் அகலப்படுத்தி உறுதிப்படுத்துதல்,பாப்புநாயக்கன்பட்டி சாலையை ரூ.57லட்சத்தில் மேற்பரப்பு மேம்படுத்துதல் ஆகிய பணிகளுக்கு ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.6கோடி செலவில் நடைபெறவுள்ள சாலை உறுதிப்படுத்தும் பணிகளுக்கான பூமிபூஜை விழாக்களில் தமிழக வருவாய்,பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.பின்னர் நெடுங்குளம்,பாப்புநாயக்கன்பட்டி, திருமங்கலம்- மறவன்குளம் பகுதிகளில் சுற்றுச்சூழலை மேம்படுத்திடும் வகையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சாலையோரத்தில் மரக்கன்றுகளை நடவுசெய்ததுடன்,சாலையோர மரக்கன்றுகளை சிறப்பான முறையில் பராமரித்திடுமாறு நெடுஞ்சாலைத்துறை பணியாளர்களை கேட்டுக்கொண்டார்.
இதனிடையே நெடுங்குளம் கிராமத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில்: நாட்டில் சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு துறைகளை சிறப்பாக பராமரித்து நாட்டின் முதன்மையான மாநிலம் தமிழகம் என்ற அங்கீகாரத்தை பெற்று தமிழக முதல்வர் சத்தமின்றி சாதனை படைத்து வருகிறார்.இதனை பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்கட்சிகள் ஒரு பழத்திற்காக ஏங்கி,கடைசியில் அந்த பழம் கிடைக்கவில்லை என்றால் சீச்சி இந்த பழம் புளிக்கும் என்பது போல 5முறை ஆட்சியில் இருந்தும் எந்தவிதமான விருதுகளையும்,அங்கீகாரங்களையும்,மக்கள் செல்வாக்கையும் பெற்றிட முடியவில்லை. இன்றைக்கு தமிழகத்திற்கு கிடைத்துள்ள விருது தமிழ் இனத்திற்காக கிடைத்த மாபெரும் சிறப்பினை பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் அரசியல் நாகரீகம் கடந்து பேசுகிறார்.இது அவருடைய இயலாமையை காட்டுகிறது.ஆகவே விருது கொடுத்தவர்களை அடிக்க வேண்டும் என்று சொல்கிறார் என்றால் அவர்களது ஆட்சிக்காலத்தில் இந்த அங்கீகாரத்தை அவர்களால் ஏன் பெற முடியவில்லை.
இன்றைக்கு தமிழக அரசுக்கு கொடுக்கப்பட்டுள்ள விருது ஏதோ எடுத்தோம் கவிழ்த்தோம் என்று கொடுக்கப்படவில்லை.முழமையாக ஆராய்ந்து பார்த்து முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் அவர்களின் பிறந்தநாளன்று நல்லாட்சி நடத்துகிற நாடு என தமிழகத்தை அடையாளப்படுத்தி இருக்கிறார்கள்.இதனை பொறுத்துக் கொள்ள முடியாமல் பல்வேறு அவதூறு பிரச்சாரங்களை பரப்பினார்கள்.அது மக்களிடம் எடுபடவில்லை என்பதால் தற்போது விருது கொடுத்தவர்களை அடிப்போம் என்கிறார்கள்.இதனை தமிழக மக்கள் நன்கு புரிந்து கொண்டு வரும் தேர்தலில் அவர்களுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள். தமிழினத்திற்கு துரோகியாக உள்ளோரே தமிழினத்திற்கு கிடைத்த பெருமையை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள் என மக்கள் பேசுவதை எங்களால் கேட்கமுடிகிறது.இந்த விருது ஒட்டுமொத்த தமிழினத்திற்கு கிடைத்த அடையாளம்.இதனை மத்திய அரசு நமக்கு கொடுத்துள்ளது என்றால் இது தமிழினத்திற்கு கிடைத்த பெருமை.இந்த பெருமையை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அதில் களங்கம் கற்பிப்பது,குற்றம் கண்டுபிடிப்பது,விவாதம் செய்வது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத நிலை என்பதை எதிர்கட்சித் தலைவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சிகளில் முன்னாள் எம்.எல்.ஏ.,கே.தமிழரசன்,மதுரை புறநகர் மாவட்ட கழக துணைச் செயலாளர் அய்யப்பன்,கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தமிழ்ச்செல்வம்,மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் திருப்பதி,திருமங்கலம் நகர் கழகச் செயலாளர் ஜே.டி.விஜயன்,ஒன்றிய செயலாளர்கள் வக்கீல்அன்பழகன்,மகாலிங்கம்,ராமசாமி,யூனியன் சேர்மன்கள் திருமங்கலம் லதாஜெகன்,கள்ளிக்குடி மீனாட்சிமகாலிங்கம்,டி.கல்லுப்பட்டி சண்முகப் பிரியா பாவடியன்,துணை சேர்மன்கள் வளர்மதி,கலையரசி,முனியம்மாள்,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி,நகர் அவைத்தலைவர் ஜஹாங்கீர்,முன்னாள் துணை சேர்மன் சதீஸ்சண்முகம்,நெடுஞ்சாலைத்துறை டிவிசனல் இன்ஜினியர் பிரசன்னவெங்கடேஷ்,துணை செயற்பொறியாளர் சுகுமார்,உதவி பொறியாளர் ராஜேஸ்வரி மற்றும் ஏராளமான பொதுமக்கள்,கட்சி நிர்வாகிகள்,ஒன்றிய கவுன்சிலர்கள்,அரசு அலுவலர்கள்,அரசு ஒப்பந்தகாரர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 23 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
ஐ.சி.சி. பேட்ஸ்மேன் தரவரிசை: ஜோ ரூட் மீண்டும் முதலிடம்
16 Jul 2025லண்டன் : ஐ.சி.சி.
-
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு ஜூலை 30-ல் மருத்துவ கலந்தாய்வு தொடக்கம்
16 Jul 2025சென்னை, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 30 ஆம் தேதி தொடங்கும் என் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
-
கடலூர் மாவட்டத்தில் விவசாய பிரதிநிதிகளுடன் இ.பி.எஸ். கலந்துரையாடல்
16 Jul 2025சிதம்பரம் : கடலூர் மாவட்டத்தில் நேற்று விவசாய பிரதிநிதிகளுடன் இ.பி.எஸ். கலந்துரையாடினார்.
-
தோல்வி குறித்து சிராஜ்
16 Jul 2025லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 3 ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் இந்திய அணி.போராடித் தோற்றது.ஜடேஜா தனி ஆளாக கடைசி வரை போராடிய நிலையில் 22 ரன்கள் வித்தியாசத்தில்
-
'ஒரணியில் தமிழ்நாடு' திட்டம் மூலம் 1 கோடியே 35 லட்சம் பேர் தி.மு.க.வில் இணைந்தனர் : கட்சி தலைமை அறிவிப்பு
16 Jul 2025சென்னை : தி.மு.க.வின் ஒரணியில் தமிழ்நாடு என்ற முன்னெடுப்பு திட்டத்தில் 1 கோடியே 35 லட்சம் பேர் இணைந்துள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
-
மகளிர் டி-20 தரவரிசை: டாப் 10-ல் ஷபாலி வர்மா
16 Jul 2025லண்டன் : மகளிர் டி-20 ஐ.சி.சி.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-07-2025.
17 Jul 2025 -
ரோகித், விராட் கோலி ஓய்வு குறித்து முதல்முறையாக பி.சி.சி.ஐ. விளக்கம்
16 Jul 2025மும்பை : ரோகித், விராட் கோலி ஓய்வு குறித்து முதல்முறையாக பி.சி.சி.ஐ. விளக்கமளித்துள்ளது. பி.சி.சி.ஐ. துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா இதுகுறித்து விளக்கமளித்துள்ளார்.
-
மயிலாடுதுறையில் அரசு விழா: ரூ.113.51 கோடி மதிப்பில் 12 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டி ரூ.48.17 கோடி மதிப்பிலான 47 முடிவுற்ற பணிகள் திறந்து வைத்தார்
16 Jul 2025மயிலாடுதுறை, மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 48 கோடியே 17 லட்சம் ரூபாய் செலவில் 47 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 113 கோடியே 51 லட
-
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்பதிவை தொடங்கி வைத்தார்
17 Jul 2025சென்னை, 37 கோடி ரூபாய் மொத்த பரிசுத் தொகை கொண்ட 2025-ம் ஆண்டு முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கான முன்பதிவினை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.&nbs
-
பீகாரில் வீடுகளுக்கு மாதம் 125 யூனிட் மின்சாரம் இலவசம்: நிதிஷ் அறிவிப்பு
17 Jul 2025பாட்னா, பீகாரில் வீடுகளுக்கு மாதம் 125 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 3-வது அணி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது: வி.சி.க. தலைவர் திருமாவளவன்
17 Jul 2025சென்னை, தமிழகத்தில் 3-வது அணி என்பது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் கூறினார்.
-
2035 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிற்கென்று தனி விண்வெளி நிலையம்: அமைச்சர் ஜிதேந்திர சிங்
17 Jul 2025புதுடெல்லி, வரும் 2035 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிற்கென்று ஒரு தனி விண்வெளி நிலையம் அமைக்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவி
-
பெங்களூரு கூட்ட நெரிசலுக்கு ஆர்.சி.பி. அணியே முழு பொறுப்பு: கர்நாடக அரசு அறிக்கை தாக்கல்
17 Jul 2025பெங்களூரு, பெங்களூரு கூட்ட நெரிசலுக்கு ஆர்.சி.பி. அணியே முழு பொறுப்பு என்று கர்நாடக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
-
இந்தியா தாக்கப்பட்டால்... உலகிற்கு வலிமையான செய்தியை கொடுத்திருக்கிறோம்: அமித்ஷா பேச்சு
17 Jul 2025ஜெய்ப்பூர், இந்தியா தாக்கப்பட்டால், கடுமையான விளைவுகள் ஏற்படும் என உலகிற்கு ஒரு வலிமையான செய்தியை நாம் கொடுத்திருக்கிறோம் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.
-
த.வெ.க. கட்சிக் கொடி விவகாரம்: விஜய் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
17 Jul 2025சென்னை, த.வெ.க. கட்சிக் கொடி தொடர்பாக த.வெ.க. மற்றும் அதன் தலைவர் விஜய் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
உண்மையை திரித்து எழுத முடியாது: கீழடி ஆய்வாளர் அமர்நாத் உறுதி
17 Jul 2025சென்னை, கீழடி அறிக்கையின் உண்மையை திருத்தச் சொல்வது குற்றம், அநீதியானது.
-
தி.மு.க.-வின் வரலாற்றுத் திரிப்புக்கு அளவே இல்லையா? எடப்பாடி பழனிசாமி கண்டனம்
17 Jul 2025சென்னை, தி.மு.க.-வின் வரலாற்றுத் திரிப்புக்கு ஒரு அளவே இல்லையா? என திருச்சி சிவாவுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
தூய்மையான நகரங்களின் பட்டியலில் 8-வது முறையாக இந்தூர் முதல் இடம்
17 Jul 2025புதுடெல்லி, தூய்மையான நகரங்களின் பட்டியலில் 8-வது முறையாக மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரம் முதல் இடம் பிடித்துள்ளது.
-
மதுராந்தகத்தில் 23-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்: இ.பி.எஸ். அறிவிப்பு
17 Jul 2025சென்னை, நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, செங்கல்பட்டு கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் மதுராந்தகத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி
-
ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு
17 Jul 2025திருவனந்தபுரம், ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது.
-
மதுவிலக்கு டி.எஸ்.பி. கார் முன்னறிவிப்பின்றி திரும்ப பெறப்பட்டதா? காவல் துறை விளக்கம்
17 Jul 2025சென்னை, மயிலாடுதுறையில் மதுவிலக்கு டி.எஸ்.பி. வாகனம் இன்றி நடந்து சென்றதாக வெளியான செய்திக்கு மாவட்ட காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
-
ஆனைமலை சாலை விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி அறிவிப்பு
17 Jul 2025சென்னை, ஆனைமலை சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பு சோதனை வெற்றி
17 Jul 2025கார்கில், முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது.
-
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் 8 புதிய மசோதாக்கள் அறிமுகம்
17 Jul 2025புதுடெல்லி, நாடாளுமன்ற கூட்டத்தொடரில் 8 புதிய மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.