எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருமங்கலம்.-மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.6 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டு திட்டங்களுக்கு நடைபெற்ற பூமிபூஜை விழாவில் தமிழக வருவாய்,பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு சாலைகளை உறுதிப்படுத்திடும் பணிகளை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு வதிகளை மேம்படுத்திடும் வகையில் சிரமமில்லா போக்குவரத்திற்கு வசதியாக ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.6 கோடி மதிப்பீட்டில் சாலைகளை உறுதிப்படுத்தி மேம்படுத்திடும் பணிகளுக்கான பூமிபூஜை விழா நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது.அதன்படி வாரணாசி-கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் 3.8கி.மீ தூரத்திற்கு சாலைகளை ரூ.4.22கோடியில் உறுதிப்படுத்துதல்,நெடுஞ்குளம்-கூடக்கோவில் சாலையை ரூ.1.23கோடியில் அகலப்படுத்தி உறுதிப்படுத்துதல்,பாப்புநாயக்கன்பட்டி சாலையை ரூ.57லட்சத்தில் மேற்பரப்பு மேம்படுத்துதல் ஆகிய பணிகளுக்கு ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.6கோடி செலவில் நடைபெறவுள்ள சாலை உறுதிப்படுத்தும் பணிகளுக்கான பூமிபூஜை விழாக்களில் தமிழக வருவாய்,பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.பின்னர் நெடுங்குளம்,பாப்புநாயக்கன்பட்டி, திருமங்கலம்- மறவன்குளம் பகுதிகளில் சுற்றுச்சூழலை மேம்படுத்திடும் வகையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சாலையோரத்தில் மரக்கன்றுகளை நடவுசெய்ததுடன்,சாலையோர மரக்கன்றுகளை சிறப்பான முறையில் பராமரித்திடுமாறு நெடுஞ்சாலைத்துறை பணியாளர்களை கேட்டுக்கொண்டார்.
இதனிடையே நெடுங்குளம் கிராமத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில்: நாட்டில் சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு துறைகளை சிறப்பாக பராமரித்து நாட்டின் முதன்மையான மாநிலம் தமிழகம் என்ற அங்கீகாரத்தை பெற்று தமிழக முதல்வர் சத்தமின்றி சாதனை படைத்து வருகிறார்.இதனை பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்கட்சிகள் ஒரு பழத்திற்காக ஏங்கி,கடைசியில் அந்த பழம் கிடைக்கவில்லை என்றால் சீச்சி இந்த பழம் புளிக்கும் என்பது போல 5முறை ஆட்சியில் இருந்தும் எந்தவிதமான விருதுகளையும்,அங்கீகாரங்களையும்,மக்கள் செல்வாக்கையும் பெற்றிட முடியவில்லை. இன்றைக்கு தமிழகத்திற்கு கிடைத்துள்ள விருது தமிழ் இனத்திற்காக கிடைத்த மாபெரும் சிறப்பினை பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் அரசியல் நாகரீகம் கடந்து பேசுகிறார்.இது அவருடைய இயலாமையை காட்டுகிறது.ஆகவே விருது கொடுத்தவர்களை அடிக்க வேண்டும் என்று சொல்கிறார் என்றால் அவர்களது ஆட்சிக்காலத்தில் இந்த அங்கீகாரத்தை அவர்களால் ஏன் பெற முடியவில்லை.
இன்றைக்கு தமிழக அரசுக்கு கொடுக்கப்பட்டுள்ள விருது ஏதோ எடுத்தோம் கவிழ்த்தோம் என்று கொடுக்கப்படவில்லை.முழமையாக ஆராய்ந்து பார்த்து முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் அவர்களின் பிறந்தநாளன்று நல்லாட்சி நடத்துகிற நாடு என தமிழகத்தை அடையாளப்படுத்தி இருக்கிறார்கள்.இதனை பொறுத்துக் கொள்ள முடியாமல் பல்வேறு அவதூறு பிரச்சாரங்களை பரப்பினார்கள்.அது மக்களிடம் எடுபடவில்லை என்பதால் தற்போது விருது கொடுத்தவர்களை அடிப்போம் என்கிறார்கள்.இதனை தமிழக மக்கள் நன்கு புரிந்து கொண்டு வரும் தேர்தலில் அவர்களுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள். தமிழினத்திற்கு துரோகியாக உள்ளோரே தமிழினத்திற்கு கிடைத்த பெருமையை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள் என மக்கள் பேசுவதை எங்களால் கேட்கமுடிகிறது.இந்த விருது ஒட்டுமொத்த தமிழினத்திற்கு கிடைத்த அடையாளம்.இதனை மத்திய அரசு நமக்கு கொடுத்துள்ளது என்றால் இது தமிழினத்திற்கு கிடைத்த பெருமை.இந்த பெருமையை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அதில் களங்கம் கற்பிப்பது,குற்றம் கண்டுபிடிப்பது,விவாதம் செய்வது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத நிலை என்பதை எதிர்கட்சித் தலைவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சிகளில் முன்னாள் எம்.எல்.ஏ.,கே.தமிழரசன்,மதுரை புறநகர் மாவட்ட கழக துணைச் செயலாளர் அய்யப்பன்,கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தமிழ்ச்செல்வம்,மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் திருப்பதி,திருமங்கலம் நகர் கழகச் செயலாளர் ஜே.டி.விஜயன்,ஒன்றிய செயலாளர்கள் வக்கீல்அன்பழகன்,மகாலிங்கம்,ராமசாமி,யூனியன் சேர்மன்கள் திருமங்கலம் லதாஜெகன்,கள்ளிக்குடி மீனாட்சிமகாலிங்கம்,டி.கல்லுப்பட்டி சண்முகப் பிரியா பாவடியன்,துணை சேர்மன்கள் வளர்மதி,கலையரசி,முனியம்மாள்,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி,நகர் அவைத்தலைவர் ஜஹாங்கீர்,முன்னாள் துணை சேர்மன் சதீஸ்சண்முகம்,நெடுஞ்சாலைத்துறை டிவிசனல் இன்ஜினியர் பிரசன்னவெங்கடேஷ்,துணை செயற்பொறியாளர் சுகுமார்,உதவி பொறியாளர் ராஜேஸ்வரி மற்றும் ஏராளமான பொதுமக்கள்,கட்சி நிர்வாகிகள்,ஒன்றிய கவுன்சிலர்கள்,அரசு அலுவலர்கள்,அரசு ஒப்பந்தகாரர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
காலையில் குறைந்து, மாலையில் உயர்ந்த ஒரு பவுன் தங்கம் விலை
18 Oct 2025சென்னை, தங்கம் விலை நேற்று காலையில் குறைந்த நிலையில், மாலையில் அதிகரித்தது.
-
வைகையில் கடும் வெள்ளப்பெருக்கு : விவசாய நிலங்கள் கடும் பாதிப்பு
18 Oct 2025தேனி : தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
-
விஜய் தலைமையில் புதிய கூட்டணி அமையும்: டி.டி.வி.தினகரன் தகவல்
18 Oct 2025சென்னை : விஜய் தலைமையில் புதிய கூட்டணி அமையும் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
-
விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் : வாகன ஓட்டிகள் அவதி
18 Oct 2025சென்னை : விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
-
மத்திய அமைச்சர் அமித்ஷா 25-ம் தேதி கோவை வருகை
18 Oct 2025கோவை, ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகாசிவராத்திரி விழாவில் பங்கேற்க கோவைக்கு வருகிற 25-ம் தேதி மத்திய அமைச்சர் அமித்ஷா வருகிறார்.
-
நாடு முழுவதும் அதிகரித்துள்ள டிஜிட்டல் கைது சம்பவங்கள்: சுப்ரீம் கோர்ட் கவலை
18 Oct 2025புதுடெல்லி, நாடு முழுவதும் டிஜிட்டல் கைது சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கவலை தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட், டிஜிட்டல் கைது விவகாரத்தில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்
-
பீகார் துணை முதல்வரின் வயது, கல்வித்தகுதி குறித்து சர்ச்சை
18 Oct 2025பாட்னா, பீகார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி கல்வித்தகுதி குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.
-
கள்ளக்குறிச்சியில் வீடு தீப்பிடித்து விபத்து: உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி
18 Oct 2025சென்னை : எரிவாயு கசிவு காரணமாக வீடு தீப்பிடித்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிதியுதவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
ஜி.எஸ்.டி. குறைப்பால் நுகர்வோருக்கு பலன் : நிர்மலா சீதாராமன் பெருமிதம்
18 Oct 2025சென்னை : ஜி.எஸ்.டி. வரி குறைப்பின் பலன் மக்களுக்கு நேரடியாக சென்றுள்ளது என்றும், ஜி.எஸ்.டி.
-
தீவிரமாகும் வடகிழக்கு பருவமழை: பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் வெளியீடு
18 Oct 2025சென்னை, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை முன்னிட்டு பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகளை தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்
-
காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்ற தமிழக பக்தர்கள் கும்பமேளாவில் புனித நீராடினர்
18 Oct 2025வாரணாசி, காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்ற தமிழக பக்தர்கள் கும்பமேளாவில் புனித நீராடினர்.
-
ஒருதலை காதலால் விபரீதம்: கல்லூரி மாணவியை கொன்ற வாலிபர்
18 Oct 2025ஸ்ரீராமபுரம் : ஒருதலை காதலால் விபரீதம்.. கல்லூரி மாணவியை கொன்ற வாலிபர் போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.
-
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்காது: அதிபர் ட்ரம்ப் மீண்டும் பேச்சு
18 Oct 2025வாஷிங்டன், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்காது என்று அதிபர் ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழிபட இன்று முன்பதிவு தொடக்கம் : தரிசன டோக்கன்கள் ஆன்லைனில் ஒதுக்கீடு
18 Oct 2025திருமலை : தீருப்பதி கோவிலில் வழிபட தரிசன டோக்கன்கள் இன்று முதல் ஆன்லைனில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
-
பெரம்பூரில் ரூ.34.9 லட்சம் மதிப்பில் பல்நோக்கு மையக் கட்டிடம் திறப்பு
18 Oct 2025சென்னை : பெரம்பூரில் ரூ.34.9 லட்சம் மதிப்பில் பல்நோக்கு மையக் கட்டிடத்தை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்.
-
கூடுதல் கட்டணம் வசூல் புகார்: ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.43.50 லட்சம் அபராதம்
18 Oct 2025சென்னை, ஆம்னி பஸ்களுக்கு ரூ.43.50 லட்சம் அபராதம், விதித்து வரி வசூத்த போக்குவரத்து ஆணையர் தெரிவித்துள்ளார்.
-
தீபாவளியை முன்னிட்டு வரும் 22-ம் தேதி வரை 110 சிறப்பு ரயில்கள் இயக்கம்
18 Oct 2025சென்னை, தீபாவளியை முன்னிட்டு இன்று முதல் 22-ம் தேதி வரையில் 110 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
-
முற்றிலும் உள்நாட்டில் தயாரான பிரமோஸ் ஏவுகணைகள் ராணுவத்திடம் ஒப்படைப்பு
18 Oct 2025லக்னோ : பிரமோஸ் ஏவுகணைகளின் முதல் தொகுப்பு தயாரிக்கப்பட்டு இந்திய பாதுகாப்புப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
-
தீபாவளி வாழ்த்து சொல்லுங்கள் என்று கேட்கக்கூட அனுமதி மறுக்கிறார்கள் : வானதி சீனிவாசன் விமர்சனம்
18 Oct 2025கோவை : தீபாவளி வாழ்த்து சொல்லுங்கள்" என்று கேட்கக்கூட அனுமதி மறுக்கிறார்கள் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
-
ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை மீண்டும் அதிகரித்தது இந்தியா..!
18 Oct 2025புதுடெல்லி, அதிபர் ட்ரம்ப் கருத்து கூறிய நிலையில் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை மீண்டும் அதிகரித்ததுள்ளது இந்தியா.
-
சபரிமலை கோவிலுக்கு புதிய மேல்சாந்தி தேர்வு
18 Oct 2025திருவனந்தபுரம் : சபரிமலை கோவிலில் புதிய மேல்சாந்தி தேர்வு செய்யப்பட்டார்.
-
பஞ்சாப்பில் பயணிகள் ரயிலில் தீ விபத்து: பயணிகள் அதிர்ச்சி
18 Oct 2025அமிர்தசரஸ், பஞ்சாப் மாநிலத்தில் பயணிகள் ரயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதையடுத்து பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
-
கரூர் சம்பவத்தில் நீதிபதி குறித்து அவதூறு: ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிக்கு ஜாமீன் மறுப்பு
18 Oct 2025கரூர் : கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் வழக்கில் நீதிபதி குறித்து அவதூராக பேசியதையடுத்து ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.
-
திருச்சியில் அமையும் பெரியார் உலகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.1.70 கோடி நிதியை கி.வீரமணியிடம் வழங்கினார்
18 Oct 2025திருச்சி, திருச்சி அருகே சிறுகனூரில் அமையும் 'பெரியார் உலக'த்துக்கு ரூ. 1.70 கோடி நிதியை திராவிடக் கழகத் தலைவர் கி. வீரமணியிடம் முதல்வர் மு.க.
-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் 18 ஆயிரம் போலீசார் குவிப்பு
18 Oct 2025சென்னை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் பாதுகாப்பு பணிக்கு 18 ஆயிரம் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.