எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருமங்கலம்.-மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.6 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டு திட்டங்களுக்கு நடைபெற்ற பூமிபூஜை விழாவில் தமிழக வருவாய்,பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு சாலைகளை உறுதிப்படுத்திடும் பணிகளை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு வதிகளை மேம்படுத்திடும் வகையில் சிரமமில்லா போக்குவரத்திற்கு வசதியாக ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.6 கோடி மதிப்பீட்டில் சாலைகளை உறுதிப்படுத்தி மேம்படுத்திடும் பணிகளுக்கான பூமிபூஜை விழா நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது.அதன்படி வாரணாசி-கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் 3.8கி.மீ தூரத்திற்கு சாலைகளை ரூ.4.22கோடியில் உறுதிப்படுத்துதல்,நெடுஞ்குளம்-கூடக்கோவில் சாலையை ரூ.1.23கோடியில் அகலப்படுத்தி உறுதிப்படுத்துதல்,பாப்புநாயக்கன்பட்டி சாலையை ரூ.57லட்சத்தில் மேற்பரப்பு மேம்படுத்துதல் ஆகிய பணிகளுக்கு ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.6கோடி செலவில் நடைபெறவுள்ள சாலை உறுதிப்படுத்தும் பணிகளுக்கான பூமிபூஜை விழாக்களில் தமிழக வருவாய்,பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.பின்னர் நெடுங்குளம்,பாப்புநாயக்கன்பட்டி, திருமங்கலம்- மறவன்குளம் பகுதிகளில் சுற்றுச்சூழலை மேம்படுத்திடும் வகையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சாலையோரத்தில் மரக்கன்றுகளை நடவுசெய்ததுடன்,சாலையோர மரக்கன்றுகளை சிறப்பான முறையில் பராமரித்திடுமாறு நெடுஞ்சாலைத்துறை பணியாளர்களை கேட்டுக்கொண்டார்.
இதனிடையே நெடுங்குளம் கிராமத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில்: நாட்டில் சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு துறைகளை சிறப்பாக பராமரித்து நாட்டின் முதன்மையான மாநிலம் தமிழகம் என்ற அங்கீகாரத்தை பெற்று தமிழக முதல்வர் சத்தமின்றி சாதனை படைத்து வருகிறார்.இதனை பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்கட்சிகள் ஒரு பழத்திற்காக ஏங்கி,கடைசியில் அந்த பழம் கிடைக்கவில்லை என்றால் சீச்சி இந்த பழம் புளிக்கும் என்பது போல 5முறை ஆட்சியில் இருந்தும் எந்தவிதமான விருதுகளையும்,அங்கீகாரங்களையும்,மக்கள் செல்வாக்கையும் பெற்றிட முடியவில்லை. இன்றைக்கு தமிழகத்திற்கு கிடைத்துள்ள விருது தமிழ் இனத்திற்காக கிடைத்த மாபெரும் சிறப்பினை பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் அரசியல் நாகரீகம் கடந்து பேசுகிறார்.இது அவருடைய இயலாமையை காட்டுகிறது.ஆகவே விருது கொடுத்தவர்களை அடிக்க வேண்டும் என்று சொல்கிறார் என்றால் அவர்களது ஆட்சிக்காலத்தில் இந்த அங்கீகாரத்தை அவர்களால் ஏன் பெற முடியவில்லை.
இன்றைக்கு தமிழக அரசுக்கு கொடுக்கப்பட்டுள்ள விருது ஏதோ எடுத்தோம் கவிழ்த்தோம் என்று கொடுக்கப்படவில்லை.முழமையாக ஆராய்ந்து பார்த்து முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் அவர்களின் பிறந்தநாளன்று நல்லாட்சி நடத்துகிற நாடு என தமிழகத்தை அடையாளப்படுத்தி இருக்கிறார்கள்.இதனை பொறுத்துக் கொள்ள முடியாமல் பல்வேறு அவதூறு பிரச்சாரங்களை பரப்பினார்கள்.அது மக்களிடம் எடுபடவில்லை என்பதால் தற்போது விருது கொடுத்தவர்களை அடிப்போம் என்கிறார்கள்.இதனை தமிழக மக்கள் நன்கு புரிந்து கொண்டு வரும் தேர்தலில் அவர்களுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள். தமிழினத்திற்கு துரோகியாக உள்ளோரே தமிழினத்திற்கு கிடைத்த பெருமையை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள் என மக்கள் பேசுவதை எங்களால் கேட்கமுடிகிறது.இந்த விருது ஒட்டுமொத்த தமிழினத்திற்கு கிடைத்த அடையாளம்.இதனை மத்திய அரசு நமக்கு கொடுத்துள்ளது என்றால் இது தமிழினத்திற்கு கிடைத்த பெருமை.இந்த பெருமையை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அதில் களங்கம் கற்பிப்பது,குற்றம் கண்டுபிடிப்பது,விவாதம் செய்வது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத நிலை என்பதை எதிர்கட்சித் தலைவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சிகளில் முன்னாள் எம்.எல்.ஏ.,கே.தமிழரசன்,மதுரை புறநகர் மாவட்ட கழக துணைச் செயலாளர் அய்யப்பன்,கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தமிழ்ச்செல்வம்,மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் திருப்பதி,திருமங்கலம் நகர் கழகச் செயலாளர் ஜே.டி.விஜயன்,ஒன்றிய செயலாளர்கள் வக்கீல்அன்பழகன்,மகாலிங்கம்,ராமசாமி,யூனியன் சேர்மன்கள் திருமங்கலம் லதாஜெகன்,கள்ளிக்குடி மீனாட்சிமகாலிங்கம்,டி.கல்லுப்பட்டி சண்முகப் பிரியா பாவடியன்,துணை சேர்மன்கள் வளர்மதி,கலையரசி,முனியம்மாள்,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி,நகர் அவைத்தலைவர் ஜஹாங்கீர்,முன்னாள் துணை சேர்மன் சதீஸ்சண்முகம்,நெடுஞ்சாலைத்துறை டிவிசனல் இன்ஜினியர் பிரசன்னவெங்கடேஷ்,துணை செயற்பொறியாளர் சுகுமார்,உதவி பொறியாளர் ராஜேஸ்வரி மற்றும் ஏராளமான பொதுமக்கள்,கட்சி நிர்வாகிகள்,ஒன்றிய கவுன்சிலர்கள்,அரசு அலுவலர்கள்,அரசு ஒப்பந்தகாரர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-12-2025.
19 Dec 2025 -
எஸ்.ஐ.ஆர். வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை பார்ப்பது எப்படி?
19 Dec 2025சென்னை, எஸ்.ஐ.ஆர். வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை பார்ப்பது எப்படி என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
-
100 நாள் வேலை திட்ட விவகாரம்: வரும் 24-ம் தேதி தி.மு.க. கூட்டணி கட்சிகள் மாபெரும் ஆர்ப்பாட்டம்
19 Dec 2025சென்னை, 100 நாள் வேலை திட்ட விவகாரத்தில் வரும் 24-ம் தேதி மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” மாநிலத்தில் உள்ள அனைத்து கழக ஒன்றியங
-
அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து சங்க நிர்வாகிகளுடன் டிச.22-ல் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
19 Dec 2025சென்னை, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் வரும் 22ம் தேதி அமைச்சர்கள
-
ரோடு ஷோ, அரசியல் கட்சி கூட்டங்களுக்கு நெறிமுறைகளை ஜனவரி 5 - க்குள் வெளியிட அரசுக்கு ஐகோர்ட் கெடு
19 Dec 2025சென்னை, ரோடு ஷோ, அரசியல் கட்சி கூட்டங்களுக்கு இறுதி வழிகாட்டு நெறிமுறைகளை வருகிற ஜனவரி 5-ம் தேதிக்குள் வெளியிட தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
கலசப்பாக்கம், அரக்கோணம் உள்ளிட்ட 3 தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
19 Dec 2025சென்னை, கலசப்பாக்கம், அரக்கோணம் உள்ளிட்ட 3 தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் ஆலோசனை நடத்தினார்.
-
சென்னையில் மட்டும் வரைவு வாக்காளர் பட்டியலில் மூன்றில் ஒருவரது பெயர் நீக்கம்
19 Dec 2025சென்னை, சென்னையில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் மூன்றில் ஒருவரது பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
-
குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு: பாராளுமன்ற இரு அவைகளும் காலவரையின்றி ஒத்திவைப்பு
19 Dec 2025புதுடெல்லி, பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், இரு அவைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டன.
-
காந்தி பெயர் நீக்கத்திற்கு எதிர்ப்பு: பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் 2-வது நாளாக போராட்டம்
19 Dec 2025புதுடெல்லி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரிலிருந்து மகாத்மா காந்தியின் பெயர் நீக்கப்பட்டதற்கும், புதிய திட்டத்தில் ஏழைகளுக்கு பாதகமாக உள்ள அம்சங
-
அடுத்த 2 ஆண்டுகளில் உக்ரைனுக்கு 90 பி. யூரோ நிதியுதவி வழங்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல்
19 Dec 2025பிரசல்ஸ், அடுத்த 2 ஆண்டுகளில் உக்ரைனுக்கு 90 பி. யூரோ நிதியுதவி வழங்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.
-
சேலத்தில் டிசம்பர் 30-ம் தேதி த.வெ.க.வின் பொதுக்கூட்டம்? விரைவில் அறிவிப்பு வெளியாகிறது
19 Dec 2025சேலம், ஈரோட்டில் த.வெ.க.
-
43.53 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 125 புதிய மின்சாரப் பேருந்துகள்: துணை முதல்வர் உதயநிதி துவக்கி வைத்தார்
19 Dec 2025பூந்தமல்லி மின்சாரப் பேருந்து பணிமனை மற்றும் புதிதாக 125 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகளின் சேவையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (வெள்ளிக்கிழமை) கொடியசைத்து த
-
பீகார் ஹிஜாப் சர்ச்சை: அரசு வேலையை உதறிய பெண்..!
19 Dec 2025பீகார் ஹிஜாப் சர்ச்சையால் அரசு வேலையை வேண்டாம் என்ற புறக்கணித்த பெண் டாக்டர், பீகாரை விட்டு வெளியேறி பெற்றோர் வசிக்கும் கொல்கத்தா நகருக்கு சென்றதாக தகவல் வெளியாகி
-
துணை ராணுவம் திடீர் தாக்குதல்: சூடானில் 16 பேர் பலி
19 Dec 2025கார்டூமின், வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள சூடானில் உள்ள தெற்கு கார்டூமின் மாகாணம் டில்லிங் பகுதியில் துணை ராணுவப்படையினர் நேற்று தாக்குதல் நடத்தினர்.
-
பனிமூட்டம் காரணமாக டெல்லியில் 152 விமானங்கள் ரத்து
19 Dec 2025புதுடெல்லி, பனிமூட்டம் காரணமாக டெல்லியில் நேற்று 79 விமானங்களின் புறப்பாடு மற்றும் 73 விமானங்களின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
தங்கம், வெள்ளி விலை சற்று சரிவு
19 Dec 2025சென்னை, தங்கம் விலை நேற்று சற்று குறைந்து விற்பனையானது. அதன்படி தங்கம் 1 கிராம் ரூ.12,380-க்கும், சவரன் ரூ.99,040-க்கும் விற்பனையானது.
-
செவிலியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
19 Dec 2025சென்னை, செவிலியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
செவிலியர் பணிக்கு காலி இடங்கள் தற்போது இல்லை: அமைச்சர் தகவல்
19 Dec 2025சென்னை, செவிலியர் பணிக்கு தற்போது காலி பணியிடங்களே இல்லாத நிலை உள்ளது. காலி இடங்கள் இருந்தால் மட்டுமே பணி வழங்க முடியும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
-
என்னை வளர்த்தெடுத்த ஆசான்: பேராசிரியர் அன்பழகனுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி
19 Dec 2025சென்னை, என்னை வளர்த்தெடுத்த கொள்கை ஆசான்களில் ஒருவர் என்று பேராசிரியர் அன்பழகன் பிறந்தநாளை முன்னிட்டு தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், கட்சியின் தொடர் வெற்றிகளை பே
-
வங்காளதேசத்தில் இந்து மதத்தை சேர்ந்த இளைஞர் அடித்த கொலை
19 Dec 2025டாக்கா, வங்காளதேசத்தில் இந்து மத இளைஞர் அடித்துக்கொலை செய்யப்பட்டு அவரது உடலை நடுரோட்டில் தீ வைத்து எரித்த கும்பலால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.
-
வி.பி.-ஜி ராம் ஜி மசோதாவுக்கு எதிர்ப்பு: பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் விடியவிடிய தர்னா
19 Dec 2025புது டெல்லி, வி.பி.-ஜி ராம் ஜி மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 12 மணி நேரம் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
சென்னையில் பிட்புல், ராட்வீலர் நாய்களுக்கு இன்று முதல் தடை மீறினால் ரூ.1 லட்சம் அபராதம்
19 Dec 2025சென்னை, சென்னை மாநகராட்சியில் பிட்புல் மற்றும் ராட்வீலர் இன வளர்ப்பு நாய்களை வளர்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது மீறி வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்
-
தமிழ்நாட்டில் வெளியானது வரைவு வாக்காளர் பட்டியல்: மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5.43 கோடி: 97.37 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் அதிரடி நீக்கம்
19 Dec 2025சென்னை, தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையர் அர்சனா பட்நாயக் நேற்று வெளியிட்டார், இதை தொடர்ந்து அந்தந்த மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் வரைவு வாக்க
-
சாந்தி மசோதா நிறைவேற்றம்: தொழில்நுட்பத்துறையில் மாபெரும் மாற்றம் ஏற்படுத்தும்: பிரதமர் மோடி
19 Dec 2025டெல்லி, இந்தியாவில் முதன்முறையாக தனியார் நிறுவனங்கள் அணுமின் நிலையங்களைத் தொடங்க அனுமதிக்கும் சாந்தி மசோதா பாராளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டதற்கு பிரதமர் மோடி ப
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நெல்லை பயணம்: 2 நாட்களில் பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்கிறார்
19 Dec 2025நெல்லை, நெல்லையில் இன்றும், நாளையும் (டிச.20, 21ல்) முதல்வர் மு.க. ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.


