எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : அம்மாவின் அரசுக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டுக்கள் குவிகின்றன என்றும் மக்கள் நம்பிக்கையை பூரணமாக பெற்று அரசு பீடு நடைபோடுகிறது என்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெருமிதத்துடன் சட்டசபையில் கூறினார்.
தமிழக சட்டசபையில் நேற்று 2020–21ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்து ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-
பொருள் வரும் வழிகளைப் பெருக்கச் செய்து, அவற்றால் வளத்தை உண்டாக்கி, வரும் இடையூறுகளை ஆராய்ந்து நீக்கி செயலாற்ற வல்லவரே, செயல் திறன் படைத்தவர் என்னும் வள்ளுவர் வாய்மொழிக்கு இலக்கணமாகி, நிதி ஆதாரங்களை வெகுவாக பெருக்கி, அனைத்து துறைகளுக்கும் அதனை ஒதுக்கி தந்து, நாடு வளம் பெறச் செய்து, எதிர்வந்த இன்னல்களையும் இடையூறுகளையும் பொடிப்பொடியாக்கி, துடைத்து தூரத் தள்ளி, மக்கள் நலன் ஒன்றே மனதில் கொண்டு செயலாற்றி தமிழ்க்குடியை மேலும் மேலும் முன்னேற்றவும், தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக நிலை நிறுத்திடவும், மறைந்த முன்னாள் முதல்வர் அம்மா, தனது வாழ்க்கையை முழுவதையும் தமிழக மக்களுக்கே ஈந்து, அரும்பாடுபட்டு, பெரும் பெருமையை பெற்றார்.
மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்னும் லட்சிய முழக்கத்தோடு மக்களுக்குத் தொண்டு செய்வதே தனது வாழ்நாள் கடமை எனக் கொண்டு இரவு பகல் பாராமல், ஓய்வென்பதே இன்றி செயலாற்றி, தமிழக மக்களின் இதயங்களில் என்றும் நீங்கா இடம் பிடித்த, அம்மாவின் உழைப்பிலும், தியாகத்திலும் பூத்த அம்மாவின் அரசை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையேற்று சிறப்பாக தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
ஏழையரிடம் அன்பு செலுத்தி, எளியவர்க்கு ஆதரவு காட்டி, தாய்க்குலத்திற்கு பெருமை தந்து, மகளிர் அதிகாரம் பெற்றிட வழி வகுத்து, தமிழக மக்கள் அனைவரும் நலமே காண தினம் உழைத்து, அவர்தம் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்று, மறைந்தும் மறையாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் அம்மாவை வணங்கி, அம்மா விண்ணின்று எங்களை வாழ்த்தி, வழி நடத்திட வேண்டும் என வேண்டி, 2020- 21ம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை இப்பேரவை முன் சமர்ப்பிக்கின்றேன். தாய்த் தமிழ்நாட்டை எவ்வாறெல்லாம் உயர்த்த வேண்டும் என்று அம்மா கனவு கண்டாரோ, அந்த விருப்பங்களையெல்லாம் நிறைவேற்ற, அம்மாவின் அரசு தணியாத சாதனை தாகத்துடன் கடமையாற்றி வருகிறது.
அம்மாவின் விசுவாசத் தொண்டர்களாகிய நாங்கள், அம்மாவின் தொலைநோக்குப் பார்வையினைத் தொடர்ந்து பின்பற்றுவதுடன் ‘அமைதி, வளம், வளர்ச்சி’ என்கிற அவரது கொள்கையினை முன்னெடுத்துச் சென்று, தமிழ்நாட்டு மக்கள் நல் ஆளுமையின் பலன்களை முழுமையாக அடைவதற்கு அயராது பாடுபட்டு வருகிறோம். அம்மா, மூன்றாண்டுகளுக்கு முன்னர் நம்மை விட்டு நீங்கிய போது, நாம் அனைவரும் திக்கற்றவர்களாக உணர்ந்தோம். எனினும், அம்மாவின் உண்மையான தாயுள்ளம், நாங்கள் செல்ல வேண்டிய பாதையை வகுத்துக் காட்டியுள்ளதுடன், மக்கள் பணியாற்றும் விடாமுயற்சியில் தளராத உறுதியையும், மக்கள் சேவையைத் தொடர்வதற்கான ஆற்றலையும் எங்கள் ஒவ்வொருவருக்கும் அளித்துச் சென்றுள்ளது. அம்மாவின் மறைவிற்குப் பின்னர், இந்த அரசின் ஆட்சி நீடிக்காது, ஆட்சி மாறி விடும் என்றெல்லாம் சிலர் கூறி வந்தனர்.
ஆனால், அம்மா காட்டிய வழியில், அவர் தம் நல்லாசிகளுடன் முதல்வரின் தலைமையில் மிகத் திறமையுடன் செயல்பட்டு வரும் அம்மாவின் அரசு, அனைத்து விமர்சகர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களின் கருத்துக்களைப் பொடிப்பொடியாக்கி தொடர்ந்து நல்லாட்சி புரிந்து வருவது மட்டுமல்லாமல், மென்மேலும் வலுவடைந்து, மக்கள் நம்பிக்கையைப் பூரணமாகப் பெற்று, பீடுநடை போட்டு வருகிறோம். உள்நாடு மட்டுமல்லாமல், உலகெங்கிலும் இருந்தும் பாராட்டுக்கள் குவியும் வண்ணம் அம்மாவின் அரசின் செயல்பாடுகள் மிளிர்கின்றன.
2019-ம் ஆண்டிற்கான சிறந்த ஆட்சிக்கான, நல் ஆளுமை விருதினை மத்திய அரசிடமிருந்து தமிழ்நாடு அரசு பெற்றுள்ளது. நாங்கள் தமிழ்நாட்டை தொடர்ந்து அமைதிப் பூங்காவாக விளங்கச் செய்து வருகிறோம். நிலையான, கணிக்கத்தக்க, அனைவருக்கும் இசைவான கொள்கைகளுடன் நாங்கள் பணியாற்றி வருகிறோம். அனைவரும் எளிதில் அணுகி, முறையீடுகள், ஆலோசனைகள் மற்றும் உண்மையான குறைகளுக்கு நியாயமான மற்றும் விரைவான பதில்கள் கிடைக்கும் வகையில் இந்த அரசு செயலாற்றி வருகிறது. நாங்கள் மக்களின் கோரிக்கைகளைக் கேட்டு அதற்கு உடனடியாகத் தீர்வு வழங்கி வருகின்றோம்.
நாங்கள் சமூகத்தில் உள்ள மிக ஏழ்மை நிலையில் உள்ளவர்களையும் பாதிப்பிற்குள்ளாகக் கூடியவர்களின் குறைகளையும் போக்கி வருகின்றோம். அறிஞர்களின் மதிநுட்ப ஆலோசனைகளுக்கு செவி சாய்த்து, அவர்களின் அறிவுரைகளின் பேரில் நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.ஆர்வம், அர்ப்பணிப்பு மற்றும் ஆய்ந்த அறிவுடன் நாங்கள் திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தி வருகிறோம். பல பன்னாட்டு நிதி நிறுவனங்களும், முதலீட்டாளர்களும் முதலீடு செய்ய மிகவும் விரும்புகின்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. மக்கள் அமைதியாக வாழ்வதற்கும், அவர்களின் இலட்சியங்களை அடைவதற்கும், எளிதில் அரசினை அணுகி, அவர்களின் தேவைகளை நிறைவு செய்யும் மாநிலமாக தமிழகத்தை உருவாக்கியுள்ளோம். நம் மாநிலத்தில், சட்டம் ஒழுங்கை தொடர்ந்து திறம்பட நிலைநாட்டி, மக்கள் பாதுகாப்பு உணர்வுடன் நல்வாழ்வு வாழ்வதை இவ்வரசு தொடர்ந்து உறுதி செய்யும்.
தொடர்ச்சியாகப் பெறப்படும் முதலீடுகளும், சிறப்பான பொருளாதார நடவடிக்கைகளும், மக்களுக்கு மேன்மேலும் வேலைவாய்ப்புகளையும் வருமானத்தையும் உருவாக்கித் தரும். ஏழை எளியோர், நலிவுற்றோர் மற்றும் அடித்தட்டு மக்கள் பாதுகாக்கப்படுவதை இந்த அரசு முனைப்புடன் உறுதி செய்யும். ‘எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்’ என்னும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும் பல்வேறு நலத் திட்டங்கள் இந்த வரவு–செலவுத் திட்ட அறிக்கையில் அடங்கியுள்ளன. இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
2 நாட்களில் முடிவுக்கு வந்த ஆஷஸ் டெஸ்ட்: ஆஸி., கிரிக்கெட் வாரியத்திறகு 60.59 கோடி ரூபாய் நஷ்டம்
28 Dec 2025மெல்போர்ன், இங்கிலாந்துக்கு எதிரான 4-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி 2 நாட்களில் முடிவுக்கு வந்ததால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு சுமார் ரூ.60.59கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது
-
கர்நாடகா: மலையேற்றத்தின்போது தவறி விழுந்த பிரான்ஸ் சுற்றுலா பயணி மீட்பு
28 Dec 2025பெங்களூரு, கர்நாடகாவில் மலையேற்றத்தின்போது தவறி விழுந்த பிரான்ஸ் சுற்றுலா பயணி உயிருடன் மீட்கப்பட்டார்.
-
சேலத்தில் ராமதாஸ் தரப்பில் இன்று பொதுக்குழுக் கூட்டம்
28 Dec 2025சென்னை, சேலத்தில் இன்று ராமதாஸ் தரப்பில் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது.
-
விஜய்யின் அரசியல் பயணம்: இலங்கை முன்னாள் அதிபரின் மகன் நமல் ராஜபக்சே வாழ்த்து
28 Dec 2025கொழும்பு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் அரசியல் பயணம் வெற்றிக்கரமாக அமைய இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே வாழ்த்து தெரிவித்
-
விஜயகாந்த் 2-ம் ஆண்டு நினைவு தினம்: பிரேமலதா தலைமையில் தே.மு.தி.க.வினர் பேரணி
28 Dec 2025சென்னை, தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்தின் 2-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. சென்னை கோயம்பேட்டில் தே.மு.தி.க.வினர் பேரணி நடத்தினர்.
-
இன்று திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தி.மு.க. மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரை
28 Dec 2025பல்லடம், பல்லடத்தில் இன்று தி.மு.க. மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு நடைபெறுகிறது. இதில் முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். தி.மு.க.
-
தர்மத்துக்கு சிரமம் ஏற்பட்டாலும் இறுதியில் அறம்தான் வெல்லும்: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கருத்து
28 Dec 2025மதுரை, தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் ஏற்படும் போரில், தர்மத்துக்கு சிரமம் ஏற்படத்தான் செய்யும், இறுதியில் அறம்தான் வெல்லும் என்ற செய்தியை சொல்வதுதான் கம்பராமாயணம் தேர
-
அன்புமணி பின்னால் சென்றவர்கள் மீண்டும் ராமதாஸ் பக்கம் வருவார்கள்: ஜி.கே.மணி பேட்டி
28 Dec 2025சேலம், சேலத்தில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ.
-
கோவை ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு வரை உள்ள உயர்மட்ட மேம்பாலத்துக்கு சி.சுப்பிரமணியத்தின் பெயர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
28 Dec 2025சென்னை, கோவை ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு வரை உள்ள உயர்மட்ட மேம்பாலத்துக்கு முன்னாள் மத்திய அமைச்சர் சி.சுப்பிரமணியம் பெயர் சூட்டப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின
-
கேப்டன் விஜயகாந்த் நிகழ்த்திய சாதனைகளை நினைவு கூர்கிறேன்: எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி
28 Dec 2025சென்னை, கலைத்துறையிலும், பொதுவாழ்விலும் கேப்டன் விஜயகாந்த் நிகழ்த்திய சாதனைகளை நினைவு கூர்கிறேன் என்று அவரது நினைவு நாளில் அ.தி.மு.க.
-
ஸ்ரீஹரிகோட்டாவில் 3-வது ராக்கெட் ஏவுதளத்தை அமைக்கிறது இஸ்ரோ
28 Dec 2025ஸ்ரீஹரிகோட்டா, ஸ்ரீஹரிகோட்டாவில் 3-வது ராக்கெட் ஏவுதளத்தை அமைக்க இஸ்ரோ திட்டமிட்டு வருகிறது.
-
5 ஆண்டுகளுக்கு பிறகு மியான்மரில் பொதுத்தேர்தல்
28 Dec 2025மியான்மர், மியான்மரில் உள்நாட்டுப் போர் மற்றும் போராட்டங்களுக்கு மத்தியில் 5 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் பொதுத்தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று தொடங்கி நடைபெற
-
மறைந்த புரட்சிக் கலைஞர் விஜயகாந்திற்கு புகழஞ்சலி: த.வெ.க. தலைவர் விஜய் பதிவு
28 Dec 2025சென்னை, மறைந்த புரட்சிக் கலைஞர் விஜயகாந்திற்கு என் புகழஞ்சலி என்று த.வெ.க. தலைவர் விஜய் பதிவிட்டுள்ளார்.
-
பெங்களூரு வீடுகள் இடிப்பு விவகாரம்: முதல்வர் சித்தராமையாவுக்கு காங்கிரஸ் மேலிடம் அறிவுரை
28 Dec 2025பெங்களூரு, பெங்களூருவின் பயெலஹங்கா அருகே உள்ள கோகிலு பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.
-
தயவுசெய்து மீண்டும் நடியுங்கள்: விஜய்க்கு நடிகர் நாசர் கோரிக்கை
28 Dec 2025சென்னை, நடிகர் விஜய் மீண்டும் நடிக்க வேண்டும் எனவும், அப்படி நடித்தால் யாரும் அவரை குறை சொல்ல மாட்டார்கள் என்றும் நடிகர் நாசர் தெரிவித்துள்ளார்.
-
நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்தார் ஜனாதிபதி முர்மு
28 Dec 2025பெங்களூரு, கல்வாரி வகையை சேர்ந்த நீர்மூழ்கி கப்பலான ஐ.என்.எஸ்.
-
துணை துணை ஜனாதிபதி இன்று புதுச்சேரி வருகை: மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு
28 Dec 2025புதுச்சேரி, புதுச்சேரியில் இன்று முக்கிய நிகழ்வுகளில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்கிறார். இதற்காக மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
சம வேலைக்கு சம ஊதியம் கோரி மூன்றாவது நாளாக போராட்டம்: இடைநிலை ஆசிரியர்கள் கைது
28 Dec 2025சென்னை, 3-வது நாளாக சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் நேற்று கைது செய்யப்ப
-
பா.ஜ.க.-விடம் உண்மை இல்லை: மல்லிகார்ஜூன கார்கே பேச்சு
28 Dec 2025டெல்லி, இன்று, பா.ஜ.க.-விடம் அதிகாரம் இருக்கிறது.
-
2-ம் ஆண்டு குருபூஜை: விஜயகாந்த் நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் மரியாதை
28 Dec 2025சென்னை, மறைந்த தே.மு.தி.க.
-
த.வெ.க.வில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ. அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம்
28 Dec 2025சென்னை, த.வெ.க.வில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.வை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கி கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
-
அரசியலில் துணிவோடு செயல்பட்டவர்: விஜயகாந்திற்கு கனிமொழி புகழஞ்சலி
28 Dec 2025சென்னை, அரசியலில் துணிவோடு செயல்பட்டவர் என்று விஜயகாந்திற்கு கனிமொழி எம்.பி. புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
-
வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு: அஸ்ஸாமில் 10.56 லட்சம் போ் நீக்கம்
28 Dec 2025திஸ்பூர், அஸ்ஸாமில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தத்தைத் தொடா்ந்து, அந்தப் பட்டியலில் இருந்து 10.56 லட்சம் போ் நீக்கப்பட்டுள்ளனா்.
-
மகாத்மா காந்தியின் பெயரை வரலாற்றிலிருந்து நீக்க முடியுமா? கர்நாடகா துணை முதல்வர் கேள்வி
28 Dec 2025பெங்களூரு, மகாத்மா காந்தியின் பெயரை வரலாற்றிலிருந்து நீக்க முடியுமா? கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
இலங்கை கடற்படை அட்டூழியம்: தமிழக மீனவர்கள் 3 பேர் கைது
28 Dec 2025ராமநாதபுரம், எல்லைதாண்டி மீன்பிடித்ததாக தமிழகத்தைச் சேர்ந்த 3 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.



