Idhayam Matrimony

குருவாயூர் கோயில் யானை பத்மநாபன் உயிரிழந்தது

வியாழக்கிழமை, 27 பெப்ரவரி 2020      இந்தியா
Image Unavailable

குருவாயூர் கிருஷ்ணர் கோயிலுக்குச் சொந்தமான 84 வயதான ஆண் யானை பத்மநாபன் உயிரிழந்தது.

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குருவாயூரில் உலகப் புகழ்பெற்ற கிருஷ்ணர் கோயில் உள்ளது. திருச்சூர் பூரம் திருவிழா, மாதந்தோறும் நடைபெறும் கோயில் திருவிழாக்கள், விசேஷங்களில் இந்த யானைதான் குருவாயூரப்பனின் சிலையை சுமந்து செல்லும். இந்த யானைக்கு கஜரத்னம் என்றும் பெயருண்டு. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக இந்த யானை நோய்வாய்ப்பட்டிருந்தது. உடலில் வீக்கம் இருந்ததால் மருத்துவர்கள் அதற்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பிற்பகல் 2.10 மணிக்கு யானை உயிரிழந்தது என்று குருவாயூர் தேவஸ்வம் போர்டு தலைவர் கே.பி.மோகன்தாஸ் தெரிவித்தார்.

1954-ம் ஆண்டு இந்த யானை, குருவாயூர் கோயிலுக்குக் கொண்டு வரப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. சுமார் 66 ஆண்டுகளாக கோயில் பராமரிப்பிலேயே இருந்தது. பத்மநாபன் யானை இறந்த செய்தியைக் கேட்டு பக்தர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து