எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழகத்திற்கு சிறப்பு நிதியாக ரூ. 4 ஆயிரம் கோடி ஒதுக்குங்கள் என்று கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். மேலும் கொரோனாவை தடுக்கும் பொருட்டு பிரதமர் எடுத்து வரும் நடவடிக்கைகளையும் முதல்வர் எடப்பாடி பாராட்டியுள்ளார்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தமிழகம் உட்பட நாடு முழுவதும் கடந்த 22-ம் தேதி மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. அதை தொடர்ந்து கடந்த 24-ம் தேதி முதல் தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அன்று இரவு நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்திய பிரதமர் மோடி இந்த ஊரடங்கு அடுத்த 21 நாட்களுக்கு தொடரும் என்று அதிரடியாக அறிவித்தார். அதன் படி தமிழகம் உட்பட நாடு முழுவதும் ஊரடங்கு என்ற வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது,
கோவிட் 19 எனப்படும் கொரோனாவை ஒழித்துக்கட்டுவதற்காக தாங்கள் எடுத்து வரும் தீர்க்கமான துணிச்சலான நடவடிக்கைகளுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கொடிய வைரசில் இருந்து இந்தியாவையும், இந்திய மக்களையும் காக்க தாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறீர்கள். தமிழகமும் 24-ம் தேதி மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவை அமல்படுத்தி உள்ளது. அதை திறம்பட செயல்படுத்தவும் அரசு இயந்திரங்களை முடுக்கி விட்டு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதே நேரம் அத்தியாவசிய சேவைகள் தொடரவும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் கொரோனாவை ஒழித்துக்கட்ட , தனிமைப்படுத்தும் வசதிகள், வெண்டிலேட்டர் உள்ளிட்ட தடுப்பு சாதனங்களை ஏற்படுத்துதல் உள்ளிட்ட சுகாதார உள்கட்டமைப்புக்காக நீங்கள் ரூ. 15 ஆயிரம் கோடி சிறப்பு நிதியாக நாட்டுக்கு ஒதுக்கி இருக்கிறீர்கள். அதற்காக எனது நன்றி. தமிழகத்திலும் சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டியது மிக மிக அவசியமாகிறது. பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளுக்காக தமிழக அரசு 10 ஆயிரம் படுக்கைகளை ஒதுக்கி உள்ளது. இது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். சுகாதார உள்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தவும், அதை மேம்படுத்தவும் ரூ. 3 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும். அப்போதுதான் அத்தியாவசிய சாதனங்கள், மருந்துகள் மற்றும் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
21 நாட்கள் ஊரடங்கு என்பது பொதுமக்களுக்கு குறிப்பாக ஏழை மக்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் மாநிலத்தின் பொருளாதாரமும் பாதிக்கப்படும். இதனை உணர்ந்து சமீபத்தில் சில நிவாரண உதவிகளை நான் அறிவித்தேன். 144 தடை அமலில் இருப்பதால் ரூ. 3,280 கோடி சிறப்பு நிவாரண உதவிகளை நான் அறிவித்துள்ளேன். குறிப்பாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. ஆயிரம் வழங்கப்படும் என்றும், ஏப்ரல் மாதத்திற்கு அத்தியாவசியப் பொருட்களை ரேசனில் இலவசமாக வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். ஆனால் இந்த நேரத்தில் ஊரடங்கு மேலும் 2 வாரம் நீடிக்கும் என்று தங்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஏழை மக்கள் மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை பாதிக்கும். அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பார்கள். அவர்களிடம் சேமிப்பும் குறைவாக இருக்கும். எனவே அவர்களுக்கு உதவ வேண்டியது அவசியம். குறிப்பாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை பார்ப்பவர்கள் துயரங்களை சந்திக்க நேரிடும். அவர்களுக்காக தமிழகம் மாதம் ஒன்றுக்கு ரூ. 400 கோடி சம்பளம் ஒதுக்குகிறது. தற்போது ஏற்பட்டுள்ள இன்னல் கருதி இந்த ஊழியர்களுக்கு சிறப்பு நிதியாக குறைந்தபட்சம் ரூ. 500 கோடி ஒதுக்க வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 லட்சம் கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் இதர அமைப்புசாரா துறையில் 15 லட்சம் ஊழியர்கள் இங்கு உள்ளனர். இவர்கள் இந்த முழு அடைப்பால் இன்னலுக்கு ஆளாக நேரிடும். அதை கருதி அவர்களுக்கு சிறப்பு நிதியாக ரூ. ஆயிரமும், 15 கிலோ அரிசியும், ஒரு கிலோ பருப்பும் இலவசமாக வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவர்களுக்கு ஏற்படும் சம்பள இழப்பை கருத்தில் கொண்டு ரூ. 500 கோடி ஒதுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். பொதுமக்களுக்கு ரேசன் பொருட்களை வழங்க வேண்டியது அவசியம். எனவே இந்திய உணவு கழகத்தில் உணவு தானியங்களை தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டும். இந்த ஊரடங்கால் பல தொழிற்சாலைகள், வர்த்தகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சிறு, குறு வணிகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் வங்கி கடனை திருப்பி செலுத்துவதை குறைந்தபட்சம் 2 காலாண்டுக்கு மாற்றி அமைக்க வேண்டும். இந்த சிறு, குறு வியாபாரிகளுக்கான வட்டி மற்றும் அபராதத்தை 2 காலாண்டுக்கு தள்ளி வைக்க வேண்டும். கொரோனாவை தடுக்கும் பொருட்டு தமிழகத்திற்கு அவசர நிதி தேவைப்படுகிறது. ஏழை மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள இந்த துயரத்தை தீர்க்கவும், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காகவும் சிறப்பு நிதியாக தமிழகத்திற்கு ரூ. 4 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 17 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 3 days ago |
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி?: 9 மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
23 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி? என்பது குறித்து 9 மாவட்டச் செயலாளர்களுடன் அ.தி.மு.க.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது: பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
23 Apr 2024புதுடெல்லி, பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
23 Apr 2024சென்னை, மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.