முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் ஜூன் மாத முன்பதிவு தரிசன டிக்கெட்டுகள் ரத்து

திங்கட்கிழமை, 25 மே 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

திருப்பதி : திருப்பதியில் ஜூன் 30-ந் தேதி வரை பக்தர்கள் முன்பதிவு செய்த தரிசன டிக்கெட் உள்ளிட்டவற்றை ரத்து செய்து பணத்தை திருப்பி அளிப்பதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

ஊரடங்கையொட்டி திருப்பதி கோவிலில் மார்ச் 20-ந் தேதி முதல் தரிசனம் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் ஏழுமலையானுக்கு நடைபெறக்கூடிய பூஜைகள் எவ்வித தொய்வுமின்றி நடந்து வருகிறது. இந்த நிலையில் முன்பதிவு தரிசன டிக்கெட்டுகளை ஜூன் 30-ந் தேதி வரை ரத்து செய்து தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

ஊரடங்கு நீட்டிக்கப் பட்டுள்ளதால் திருப்பதி கோவிலில் மே 31- ந் தேதி வரை சாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மார்ச் 13 - ந் தேதி முதல் மே 31- ந் தேதி வரை பக்தர்கள் முன்பதிவு செய்திருந்த ஆர்ஜித சேவைகள், விரைவு தரிசனம், வாடகை அறை உள்ளிட்டவற்றுக்கான கட்டணத்தை பக்தர்களின் வங்கிக் கணக்குகளுக்கு திருப்பதி தேவஸ்தானம் திருப்பி செலுத்தியது.

இந்த நிலையில் ஜூன் 1-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை தேவஸ்தானம் பக்தர்கள் முன்பதிவு செய்த சேவா டிக்கெட், வாடகை அறை, விரைவு தரிசனம் உள்ளிட்டவற்றை ரத்து செய்து பணத்தை பக்தர்களுக்கு திருப்பி அளிக்க முடிவு செய்துள்ளது.ஜூன் மாதம் ஊரடங்கு விலக்கப்பட்டால் சமூக இடைவெளியுடன் தினமும் குறைந்த அளவிலான பக்தர்களை தரிசனத்துக்கு அனுப்ப தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து