முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

118-வது பிறந்த நாள்: சென்னையில் காமராஜர் திருவுருவப் படத்திற்கு அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை

புதன்கிழமை, 15 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : பெருந்தலைவர் காமராசரின் பிறந்தநாள் ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. பெருந்தலைவர் காமராசரின் 118-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில், அமைச்சர் பெருமக்கள், சென்னை, காமராசர் சாலையில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு  நேற்று (15.07.2020) காலை 10.00 மணியளவில் தனிமனித இடைவெளியைக் கடைபிடித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

அம்மாவின் நல்லாசியுடன் செயல்படும் தமிழக அரசு, தமிழ்ச் சான்றோர்கள், விடுதலைப் போராட்ட தியாகிகள் மற்றும் தலைவர்கள் ஆகியோரை பெருமைப்படுத்தும் வகையில், அன்னார்களது பிறந்தநாளன்று தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், பெருந்தலைவர் காமராசரின் பிறந்த தினமான ஜூலை 15-ம் நாள், ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. 

அதன்படி, பெருந்தலைவர் காமராசரின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில், சென்னை, காமராசர் சாலையில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு நேற்று (15.07.2020) காலை அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ, பா.பென்ஜமின், கே.பாண்டியராஜன் ஆகியோர் தனிமனித இடைவெளியைக் கடைபிடித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். 

இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் முனைவர்.பொ.சங்கர், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. சண்முகநாதன், பி.வி.ரமணா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்தன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து