எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
							
						Source: provided
சென்னை : நீரிழிவு ரத்த அழுத்தம், புற்றுநோய் உள்ளிட்ட இணை நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு சிறப்பு சிகிச்சை முகாம்கள் நடத்தி கொரோனா உயிரிழப்பு சதவீதத்தை தவிர்க்க வேண்டும் என்று மணலி மண்டல அலுவலக அதிகாரிகளுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உத்தரவிட்டார்.
சென்னை மாநகராட்சியின் மணலி மண்டலத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அதிகாரிகளுடன் நேற்று ஆய்வு நடத்தினார், அப்போது அவர் பேசுகையில்,
சென்னை மாநகராட்சியின் மண்டலமான மணலி, நோய்தொற்று பாதிப்பில் கடைசி மண்டலமாக கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்த மண்டலத்தில் 1419 பேர் நோய்ததொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது 1135 பேர் பூரண குணமடைந்திருக்கிறார்கள் என்று நமக்கு ஆறுதல் அளிக்கும் செய்தியாகவும் நம்பிக்கை அளிக்கும் தகவலாகவும் இருக்கிறது.
இந்த மண்டலத்தில் இறப்பு சதவீதமும் ஜீரோவாக இருக்க வேண்டும் மாறாக நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமையாலும் இணை நோய்களின் காரணமாகவும் 18 பேர் உயிரிழந்திருப்பது கவலையளிக்கிறது, பொதுமுடக்கத்தில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கில் எப்படி மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தார்களோ அதே போல பொது ஊரடங்கின்போதும் மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், அதற்கான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் முழு அளவில் உருவாக்க வேண்டும், அதற்கான நடவடிக்கைகளில் மாநகராட்சி அதிகாரிகள் கவனம் செலுத்தி மேற்கொள்ள வேண்டும்.
மணலி மண்டலத்தில் கிட்ட தட்ட ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 868 பேர் வாழ்கிறார்கள், இந்த மக்களை பாதுகாக்கும் பணியில் இரவு பகலாக மாநகராட்சி அதிகாரிகள் பாடுபட்டு வருகிறார்கள். எனவே மக்கள் முழு ஊரடங்கு உத்தரவின் போது கொடுத்த ஒத்துழைப்பை பொது ஊரடங்கின் போதும் தர வேண்டும்,
மக்கள் கூடும் இடங்களான மீன் மார்க்கெட் காய்கறி மார்க்கெட் மற்றும் உள்ள பகுதிகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முகக்கவசம் அணிய செய்வதில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதில் மக்களை கண்காணித்து அதிகாரிகள் அறிவுரை வழங்க வேண்டும், இல்லையேல் அபராதம் விதிக்க வேண்டும்.
இந்த நடவடிக்கைகளை துரிதப்படுத்த பறக்கும் படைகளை அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்வர் அறிவித்த காய்ச்சல் சிகிச்சை முகாம்கள் நல்ல பயனை தந்துக்கொண்டிருக்கிறது. அதனை தொற்று எங்கெங்கே இருக்கிறதோ அங்கெல்லாம் காய்ச்சல் சிகிச்சை முகாம்களை நடத்த வேண்டும்.
அதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும், அதிகாரிகளான நீங்களும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் ஏனெனில் தடுப்பு மருந்துகள் இந்த நோய்க்கு கிடையாது
இருப்பின் நோயால் பாதிக்கப்பட்ட மக்களை அதிகாரிகளான நீங்கள் குணப்படுத்தி வருகிறீர்கள். இருந்தாலும் சவாலான காலக்கட்டத்தில் நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியமாகும்.
திருவொற்றியூர் மண்டலத்தில் 3 லட்சத்து 30 ஆயிரம் மக்கள் தொகை இருக்கிறது, அங்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி வர்கீஸ் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக 15 ஆயிரம் பேர் நீரிழிவு நோய், புற்றுநோய், இதயநோய் மற்றும் உள்ள இணை நோய்கள் உள்ளவர்களை கண்டறிந்து ஆரம்ப நிலையிலேயே அவர்களுக்கு பரிசோதனை நடத்தி சிறப்பு மருத்துவமுகாம்களை நடத்தி வருகிறார்கள்.
அதே போன்ற சிறப்பு மருத்துவ சிகிச்சை முகாம்களை நடத்த வேண்டும். அதன் மூலம் உயிரிழப்பு சதவீதத்தை முழுமையாக குறைக்க முடியும் என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்,
இந்த நிகழ்ச்சியில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி அமர், மாவட்ட செயலாளர் வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., கே.குப்பன், மண்டல அலுவலர் ராஜசேகர், அ.தி.மு.க. நிர்வாகிகள் கிருஷ்ணன், தங்கசிவம், ராகவா சாக்ரட்டீஸ், ஜோசப்;, ராஜேஷ்சேகர், சாரதிபார்த்தீபன், காமராஜ், ஜெய்சங்கர், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
| கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்  1 year 1 month ago | வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்  1 year 1 month ago | மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.  1 year 2 months ago | 
-   
          63-வது குருபூஜை - 118-வது ஜெயந்தி விழா: பசும்பொன் தேவர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை30 Oct 2025மதுரை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (30.10.2025) ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில், முத்துராமலிங்கத் தேவரின் 118-வது பிறந்த நாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு 
-   
          வாக்குகளுக்காக பீகாரை சுரண்டுகிறார்கள்: தே.ஜ.க. கூட்டணி மீது தேஜஸ்வி தாக்கு30 Oct 2025பாட்னா, பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, தொழில்களை எல்லாம் குஜராத்தில் அமைத்துவிட்டு, பீகார் மாநிலத்தை வாக்குகளுக்காக சுரண்டி வருகிறது என ஆர்.ஜே.டி. 
-   
          தேசியத் தலைவர்கள் விழாவை எல்லா சமூகத்தினரும் கொண்டாட வேண்டும்: துணை ஜனாதிபதி வேண்டுகோள்30 Oct 2025ராமநாதபுரம், வருகின்ற காலத்திலாவது எல்லா தேசியத் தலைவர்களுடைய விழாவையும் எல்லா சமூகத்தினரும் கொண்டாடுகின்ற விழாவாக மாற்ற வேண்டும் என பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மரியா 
-   
          மதுரையில் தேவர் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மரியாதை30 Oct 2025மதுரை, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 
-   
          பி.எம்.ஸ்ரீ திட்ட ஒப்பந்தத்தில் இருந்து விலகுகிறது கேரள அரசு30 Oct 2025திருவனந்தபுரம், பி.எம்.ஸ்ரீ திட்ட ஒப்பந்தத்தில் இருந்து விலக கேரள அரசு முடிவு செய்துள்ளது. 
-   
          கேரளாவில் திருமண விழாவில் ருசிகரம்: ‘கியூ ஆர்’ கோடு மூலம் ‘மொய்’ வசூல்30 Oct 2025எர்ணாகுளம், கேரளாவில் நடந்த திருமண விழாவில் ‘கியூ ஆர்’ கோடு மூலம் ‘மொய்’ வசூலிக்கப்பட்டது. 
-   
          ஐ.பி.எல். கொல்கத்தா அணியின் புதிய பயிற்சியாளரானார் அபிஷேக்30 Oct 2025கொல்கத்தா, ஐ.பி.எல். டி20 கிரிக்கெட்டில் விளையாடும் முன்னணி அணிகளில் ஒன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ். 
-   
          ஜப்பான் பிரதமருக்கு பிரதமர் மோடி வாழ்த்து30 Oct 2025புதுடெல்லி, ஜப்பான் பெண் பிரதமருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். 
-   
          சென்னையில் நாய், பூனை வளர்க்க உரிமம் பெறாவிட்டால் அபராதம்30 Oct 2025சென்னை, சென்னையில் நாய், பூனை வளர்க்க உரிமம் பெறாவிட்டால் இனி ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி எச்சரித்துள்ளது. 
-   
          சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் 150 சிக்சர் அடித்த 2வது வீரர்: சூர்யகுமார் புதிய மைல் கல்30 Oct 2025கான்பெர்ரா, சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக இந்த மைகல்லை (150 சிக்சர்கள்) எட்டிய 2-வது வீரர் என்ற மாபெரும் சாதனையை அவர் படைத்துள்ளார். 
-   
          தமிழ் உணர்வை ஊட்டி வளர்த்தவர்: சீமானுக்கு வைகோ திடீர் புகழாரம்30 Oct 2025ராமநாதபுரம், தமிழ் உணர்வை ஊட்டி வளர்த்தவர் சீமான் என்று வைகோ தெரிவித்துள்ளார். 
-   
          டெஸ்ட் வரலாற்றில் முதல் முறை: உணவு இடைவேளைக்கு முன் தேநீர் இடைவேளை: இந்தியா - தெ.ஆப்பிரிக்க போட்டியில் அறிமுகம்30 Oct 2025மும்பை, டெஸ்ட் வரலாற்றில் முதல் முறையாக உணவு இடைவேளைக்கு முன் தேநீர் இடைவேளை நடைமுறைக்கு வருகிறது. 
-   
          பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு 'பாரத ரத்னா' வழங்க பரிந்துரை செய்வோம்: நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி30 Oct 2025மதுரை, பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு 'பாரத ரத்னா' வழங்க பரிந்துரை செய்வோம் என்று நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
-   
          தமிழகத்தில் வரும் 5-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு30 Oct 2025சென்னை, கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக வரும் 5-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய 
-   
          திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியீடு: தேவஸ்தான தலைவர் தகவல்30 Oct 2025திருப்பதி, திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு அளித்த பேட்டியில் கூறியதாவது:- முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவின்படி எஸ். சி. மற்றும் எஸ்.டி. 
-   
          விஜயுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? மத்திய அமைச்சர் அமித்ஷா விளக்கம்30 Oct 2025மும்பை, விஜயுடன் கூட்டணி பேச்சுவார்த்தை என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, கூட்டணி கட்சியுடன் ஆலோசனை செய்தே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார். 
-   
          வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்: த.வெ.க எதிர்ப்பு30 Oct 2025சென்னை, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை நாங்கள் எதிர்க்கிறோம் - த.வெ.க கொள்கை பரப்பு செயலாளர் அருண்ராஜ் கூறினார். 
-   
          தங்கம் விலை உயர்வு30 Oct 2025சென்னை, தங்கம் விலை நேற்று காலை கிராமுக்கு 225 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.11,100-க்கும், சவரனுக்கு 1,800 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.88,800-க்கும் விற்பனையானது. 
-   
          பனையூர் த.வெ.க. அலுவலகத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் படத்திற்கு விஜய் மலர்தூவி மரியாதை30 Oct 2025சென்னை, பனையூரில் அமைந்துள்ள த.வெ.க. அலுவலகத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் உருவ படத்திற்கு அக்கட்சியின் தலைவர் விஜய் மலர்தூவி மரியாதை செலுத்தினார். 
-   
          நெல் கொள்முதல் விவகாரம்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு30 Oct 2025மதுரை, நெல் கொள்முதல் விவகாரத்தில் தி.மு.க. அரசு பச்சை பொய் கூறுகிறது என்ற எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார். மேலும், அ.தி.மு.க. 
-   
          தமிழக வீராங்கனைக்கு ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார்: துணை முதல்வர் உதயநிதி30 Oct 2025சென்னை, தடகளத்தில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைக்கு ரூ.25 லட்சம் ஊக்கத்தொகையை துணை முதல்வர் உதயநிதி வழங்கி பாராட்டினார். 
-   
          பசும்பொன்னில் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், தினகரன் சந்திப்பு30 Oct 2025சென்னை, பசும்பொன்னில் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், டி.டி.வி.தினகரன் ஒன்றாக சந்தித்துக் கொண்டனர். 
-   
          பணி அனுமதியை புதுப்பிக்கும் விவகாரம்: அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம்30 Oct 2025நியூயார்க், அமெரிக்காவில் பணி அனுமதியை புதுப்பிக்கும் விவகாரத்தில் நடைமுறைபடுத்தப்பட்டுள்ஏள புதிய முடிவால் அங்கு பணிபுரியும் ஏராளமான இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயத்தை 
-   
          33 ஆண்டுகளுக்கு பிறகு அணு ஆயுத சோதனை நடத்துகிறது அமெரிக்கா..!30 Oct 2025நியூயார்க், அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து பிற நாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். 
-   
          சுப்ரீம் கோர்ட்டின் 53-வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் யாதவ் நியமனம்30 Oct 2025புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட்டின் 53-வது தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்யகாந்த் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 























































