எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
நெல்லை : தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு இணைப்புத் திட்ட பணிகள் விரைவில் துவங்கவிருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களின் வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா வைரஸ் நோய்த் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,
உலகில் உள்ள மக்கள் அனைவரும் அச்சத்தில் வாழ்கின்ற ஒரு சூழ்நிலையை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் என்ற தொற்று நோய் தமிழகத்திலும் பரவியுள்ளது. இதைக் கட்டுப்படுத்துவதற்கு அம்மாவின் அரசு சிறப்புத் திட்டங்களை வகுத்து, அதன்மூலம் நோய்ப் பரவல் குறைக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவிலேயே, தமிழகத்தில்தான் அதிக எண்ணிக்கையிலான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல, குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இறப்பு சதவிகிதம் குறைக்கப்பட்டிருக்கிறது.
திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய இரண்டு மாவட்டங்களுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் கையிருப்பில் உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிப்பதற்கு தேவையான படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டு, தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வித தொய்வும் இல்லாமல் உடனுக்குடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் பணிபுரிந்த வெளிமாநிலத் தொழிலாளர்கள், தங்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்ப வேண்டும் என்று விரும்பியவர்களை, அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அரசின் செலவிலேயே ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத அளவிற்கு அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இரண்டு மாவட்டங்களிலும் பல்வேறு புதிய தொழில் நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கு அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இரண்டு மாவட்டங்களிலும் சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. அதிகமான பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு இணைப்புத் திட்டத்தை நான்காகக் பிரித்து செயலாக்கத்திற்கு எடுத்து, 4-வது திட்டத்திற்கு ரூபாய் 160 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்தப் பணியும் துவங்க இருக்கின்றன.
தற்போது நில எடுப்புப் பணி முடியும் தருவாயில் இருக்கின்ற சூழ்நிலையில், 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் இந்தப் பணி நிறைவு செய்யப்பட்டு, மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஆலங்குளம் மற்றும் சங்கரன்கோவில் பகுதிகளில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இந்த ஆண்டு தொடங்க உள்ளன. சங்கரன்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கும் அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியிலுள்ள இரண்டு கல்லூரிகளுக்கு தேவையான கட்டடங்கள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
அண்மையில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி பல்நோக்கு மருத்துவமனை ரூபாய் 150 கோடி செலவில், ஏழு தளங்களுடன் 330 படுக்கை வசதியுடன் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், இந்த மருத்துவக் கல்லூரியில், ஏற்கனவே 150 மாணவர்கள் MBBS பயின்று வந்தார்கள்.
இப்பொழுது கூடுதலாக 100 இடங்கள் தோற்றுவிக்கப்பட்டு, தற்போது 250 மாணவர்கள் MBBS மருத்துவப் படிப்பு மேற்கொள்ளும் நிலையை அம்மாவின் அரசு ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறது.
அதேபோல, JICA நிதியுதவின் கீழ், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிக்கு ரூபாய் 10 கோடி செலவில் அதிநவீன மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கும், கண்டியப்பேரி அரசு மருத்துவமனைக்கு ரூபாய் 20.01 கோடி மதிப்பீட்டில் கட்டடம் கட்டுவதற்கும், அதிநவீன உபகரணங்கள் வாங்குவதற்கும், மொத்தம் ரூபாய் 51.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழை, எளியவர்கள் தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் செலுத்தி சிகிச்சை பெற முடியாத சூழலை மாற்றி, அரசு மருத்துவமனைகளில் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிப்பதற்கு தேவையான கருவிகளை நிறுவி வருகிறோம்.
அந்த வகையில், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் ரூபாய் 21 கோடி செலவில் புற்றுநோய் சிசிச்சை அளிக்க அதிநவீன Linear Accelerator கருவி வெகு விரைவில் நிறுவப்படவுள்ளது.
இந்த வகையில் எல்லாம், மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அம்மாவின் அரசு தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
இன்று திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தி.மு.க. மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரை
28 Dec 2025பல்லடம், பல்லடத்தில் இன்று தி.மு.க. மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு நடைபெறுகிறது. இதில் முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். தி.மு.க.
-
தர்மத்துக்கு சிரமம் ஏற்பட்டாலும் இறுதியில் அறம்தான் வெல்லும்: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கருத்து
28 Dec 2025மதுரை, தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் ஏற்படும் போரில், தர்மத்துக்கு சிரமம் ஏற்படத்தான் செய்யும், இறுதியில் அறம்தான் வெல்லும் என்ற செய்தியை சொல்வதுதான் கம்பராமாயணம் தேர
-
விஜயகாந்த் 2-ம் ஆண்டு நினைவு தினம்: பிரேமலதா தலைமையில் தே.மு.தி.க.வினர் பேரணி
28 Dec 2025சென்னை, தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்தின் 2-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. சென்னை கோயம்பேட்டில் தே.மு.தி.க.வினர் பேரணி நடத்தினர்.
-
கோவை ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு வரை உள்ள உயர்மட்ட மேம்பாலத்துக்கு சி.சுப்பிரமணியத்தின் பெயர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
28 Dec 2025சென்னை, கோவை ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு வரை உள்ள உயர்மட்ட மேம்பாலத்துக்கு முன்னாள் மத்திய அமைச்சர் சி.சுப்பிரமணியம் பெயர் சூட்டப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின
-
பெங்களூரு வீடுகள் இடிப்பு விவகாரம்: முதல்வர் சித்தராமையாவுக்கு காங்கிரஸ் மேலிடம் அறிவுரை
28 Dec 2025பெங்களூரு, பெங்களூருவின் பயெலஹங்கா அருகே உள்ள கோகிலு பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.
-
கேப்டன் விஜயகாந்த் நிகழ்த்திய சாதனைகளை நினைவு கூர்கிறேன்: எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி
28 Dec 2025சென்னை, கலைத்துறையிலும், பொதுவாழ்விலும் கேப்டன் விஜயகாந்த் நிகழ்த்திய சாதனைகளை நினைவு கூர்கிறேன் என்று அவரது நினைவு நாளில் அ.தி.மு.க.
-
ஸ்ரீஹரிகோட்டாவில் 3-வது ராக்கெட் ஏவுதளத்தை அமைக்கிறது இஸ்ரோ
28 Dec 2025ஸ்ரீஹரிகோட்டா, ஸ்ரீஹரிகோட்டாவில் 3-வது ராக்கெட் ஏவுதளத்தை அமைக்க இஸ்ரோ திட்டமிட்டு வருகிறது.
-
5 ஆண்டுகளுக்கு பிறகு மியான்மரில் பொதுத்தேர்தல்
28 Dec 2025மியான்மர், மியான்மரில் உள்நாட்டுப் போர் மற்றும் போராட்டங்களுக்கு மத்தியில் 5 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் பொதுத்தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று தொடங்கி நடைபெற
-
மறைந்த புரட்சிக் கலைஞர் விஜயகாந்திற்கு புகழஞ்சலி: த.வெ.க. தலைவர் விஜய் பதிவு
28 Dec 2025சென்னை, மறைந்த புரட்சிக் கலைஞர் விஜயகாந்திற்கு என் புகழஞ்சலி என்று த.வெ.க. தலைவர் விஜய் பதிவிட்டுள்ளார்.
-
சம வேலைக்கு சம ஊதியம் கோரி மூன்றாவது நாளாக போராட்டம்: இடைநிலை ஆசிரியர்கள் கைது
28 Dec 2025சென்னை, 3-வது நாளாக சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் நேற்று கைது செய்யப்ப
-
தயவுசெய்து மீண்டும் நடியுங்கள்: விஜய்க்கு நடிகர் நாசர் கோரிக்கை
28 Dec 2025சென்னை, நடிகர் விஜய் மீண்டும் நடிக்க வேண்டும் எனவும், அப்படி நடித்தால் யாரும் அவரை குறை சொல்ல மாட்டார்கள் என்றும் நடிகர் நாசர் தெரிவித்துள்ளார்.
-
அன்புமணி பின்னால் சென்றவர்கள் மீண்டும் ராமதாஸ் பக்கம் வருவார்கள்: ஜி.கே.மணி பேட்டி
28 Dec 2025சேலம், சேலத்தில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ.
-
விஜய்யின் அரசியல் பயணம்: இலங்கை முன்னாள் அதிபரின் மகன் நமல் ராஜபக்சே வாழ்த்து
28 Dec 2025கொழும்பு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் அரசியல் பயணம் வெற்றிக்கரமாக அமைய இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே வாழ்த்து தெரிவித்
-
மகாத்மா காந்தியின் பெயரை வரலாற்றிலிருந்து நீக்க முடியுமா? கர்நாடகா துணை முதல்வர் கேள்வி
28 Dec 2025பெங்களூரு, மகாத்மா காந்தியின் பெயரை வரலாற்றிலிருந்து நீக்க முடியுமா? கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
கோவையில் சர்வதேச ஹாக்கி மைதானம்: துணை முதல்வர் உதயநிதி நாளை திறந்து வைக்கிறார்
28 Dec 2025கோவை, கோவை ஆர்.எஸ்.புரத்தில் மாநகராட்சி சார்பில் ரூ.9.67 கோடியில் கட்டப்பட்ட ஹாக்கி மைதானத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நாளை (30-ம் தேதி) திறந்து வைக்கிறார்.
-
கர்நாடகா: மலையேற்றத்தின்போது தவறி விழுந்த பிரான்ஸ் சுற்றுலா பயணி மீட்பு
28 Dec 2025பெங்களூரு, கர்நாடகாவில் மலையேற்றத்தின்போது தவறி விழுந்த பிரான்ஸ் சுற்றுலா பயணி உயிருடன் மீட்கப்பட்டார்.
-
சேலத்தில் ராமதாஸ் தரப்பில் இன்று பொதுக்குழுக் கூட்டம்
28 Dec 2025சென்னை, சேலத்தில் இன்று ராமதாஸ் தரப்பில் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது.
-
துணை துணை ஜனாதிபதி இன்று புதுச்சேரி வருகை: மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு
28 Dec 2025புதுச்சேரி, புதுச்சேரியில் இன்று முக்கிய நிகழ்வுகளில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்கிறார். இதற்காக மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
சென்னையில் கைலாசநாதர் - படவேட்டம்மன் கோவில் திருப்பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்தார் அமைச்சர் சேகர்பாபு
28 Dec 2025சென்னை, சென்னையில் கைலாசநாதர் - படவேட்டம்மன் கோவில்களில் நடைபெற்று வரும் திருப்பணிகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு செய்தார்.
-
த.வெ.க.வில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ. அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம்
28 Dec 2025சென்னை, த.வெ.க.வில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.வை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கி கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
-
நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்தார் ஜனாதிபதி முர்மு
28 Dec 2025பெங்களூரு, கல்வாரி வகையை சேர்ந்த நீர்மூழ்கி கப்பலான ஐ.என்.எஸ்.
-
இலங்கை கடற்படை அட்டூழியம்: தமிழக மீனவர்கள் 3 பேர் கைது
28 Dec 2025ராமநாதபுரம், எல்லைதாண்டி மீன்பிடித்ததாக தமிழகத்தைச் சேர்ந்த 3 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
-
ரயில் 2 வினாடிகளில் 700 கி.மீ. வேகம் சீன ஆராய்சியாளர்கள் புதிய உலக சாதனை..!
28 Dec 2025பெய்ஜிங், சீன ஆராய்சியாளர்கள் 2 நொடியில் மணிக்கு 700 கிலோ மீட்டர் வேகம் எட்டக்கூடிய சோதனை வாகனத்தை இயக்கி உலக சாதனை படைத்துள்ளனர்.
-
2-ம் ஆண்டு குருபூஜை: விஜயகாந்த் நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் மரியாதை
28 Dec 2025சென்னை, மறைந்த தே.மு.தி.க.
-
வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு: அஸ்ஸாமில் 10.56 லட்சம் போ் நீக்கம்
28 Dec 2025திஸ்பூர், அஸ்ஸாமில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தத்தைத் தொடா்ந்து, அந்தப் பட்டியலில் இருந்து 10.56 லட்சம் போ் நீக்கப்பட்டுள்ளனா்.



