எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : தமிழக சட்டசபையில் நேற்று 19 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த திங்கட்கிழமையன்று சட்டசபை கூடியது. நேற்று முன்தினம் 5 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன. இந்த நிலையில் நேற்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம், கே.பி. அன்பழகன், துரை கண்ணன், கடம்பூர் ராஜூ, கே.சி. வீரமணி ஆகியோர் அவர்களது துறையின் சார்பில் இந்த மசோதாக்களை தாக்கல் செய்தனர்.
ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை சட்ட முன்வடிவு, தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் திருத்த சட்ட முன்வடிவு, மெட்ராஸ் பொருளாதார பள்ளி சட்ட முன்வடிவு, தமிழ்நாடு நகர் ஊரமைப்பு திருத்த சட்டமுன் வடிவு, சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பு திருத்த சட்ட முன்வடிவு, கூட்டுறவு சங்கங்கள் 3ம் திருத்த சட்ட முன்வடிவு, நகராட்சி சட்டங்கள் 3ம் திருத்த சட்ட முன்வடிவு, தமிழ்நாடு நீக்கறவு செய்தல் 2ம் திருத்த சட்ட முன்வடிவு, தமிழ்நாடு திருமணங்கள் பதிவு செய்தல் திருத்த சட்ட முன்வடிவு, நீதிமன்ற கட்டணங்கள் மற்றும் உரிமை வழக்குகள் மதிப்பீட்டு திருத்த சட்ட முன்வடிவு, தமிழ்நாடு வழக்குறைஞர்களுடைய எழுத்தர்கள் நலநிதிய திருத்த சட்ட முன்வடிவு, தமிழ்நாடு பொது அறக்கட்டளைகள் சட்ட முன்வடிவு, அண்ணா பல்கலைக்கழக சட்ட முன்வடிவு, தமிழ்நாடு வேளாண் விளைபொருட்கள் சந்தைபடுத்துதல் (முறைபடுத்துதல்) 2ம் சட்ட திருத்த முன்வடிவு, மதிப்பு கூட்டுவரி திருத்த சட்ட முன்வடிவு உள்பட 19 சட்ட முன்வடிவுகள் நேற்று தாக்கல் செய்யப்பட்டன.
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று 2020-2021ம் ஆண்டின் கூடுதல் செலவிற்கான முதல் துணை நிதிநிலை அறிக்கையை சட்டசபையில் தாக்கல் செய்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
சரியான நேரத்தில் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைப்போம் அமைச்சர் எஸ்.ரகுபதி தகவல்
09 Feb 2026சென்னை, சரியான நேரம் வரும்போது தேர்தல் பேச்சுவார்த்தைக் குழுவை அமைப்போம், பேச்சுவார்த்தையை ஸ்டாலின் சுமுகமாக முடிப்பார் என்று இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.
-
பா.ம.க.-வின் தலைவர் அன்புமணிதான்: டெல்லி நீதிமன்றத்தில் மீண்டும் உறுதிசெய்த தேர்தல் ஆணையம்
09 Feb 2026டெல்லி, பா.ம.க.வின் தலைவர் அன்புமணிதான் என்று டெல்லி நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதி செய்த நிலையில், இந்த நடவடிக்கை ராமதாஸ் தரப்பிற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.


