முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறை பிடிக்கப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் உடனடியாக விடுவிப்பு

செவ்வாய்க்கிழமை, 24 நவம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : மினிகாய் தீவு கடலோரக் காவல் படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் வட்டம், தருவைக்குளம் மீன்பிடி இறங்குதளத்தை தங்குதளமாகக் கொண்ட மரிய குணசேகரன் என்பவருக்கு சொந்தமான மீன்பிடி விசைப்படகு மூலம் தருவைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 10 மீனவர்களுடன் 18.11.2020 அன்று மினிகாய் தீவு கடற்பகுதியில் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்த பொழுது, மினிகாய் தீவு கடலோரக் காவல் படையினரால் 10 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்டுத் தரவேண்டுமென அவர்களின் குடும்பத்தினர் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். 

அமைச்சர் கடம்பூர் ராஜு, மாவட்ட கலெக்டர் ஆகியோர் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை உடனடியாக மீட்பது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டுமென சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டதன் அடிப்படையில், சிறைபிடிக்கப்பட்ட 10 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து