முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜம்மு எல்லையில் ஊடுருவிய 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

புதன்கிழமை, 20 ஜனவரி 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

ஜம்மு : ஜம்மு எல்லையில் ஊடுருவிய 3 தீவிரவாதிகள் நேற்று முன்தினம் இரவு பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

பாகிஸ்தான் ராணுவம் தரப்பில் நேற்று முன்தினம் மாலை எல்லைக் கட்டுப்பாட்டு கோடான அக்னூர் கோர் பகுதியில் ஊடுருவல்கள் இருந்தன. இதையறிந்த இந்திய பாதுகாப்பு வீரர்கள், பாகிஸ்தான் ஆதரவில் ஊடுருவிய தீவிரவாதிகளை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர்.

இருதரப்பிலும் நேற்று முன்தினம் மாலை முதல் நள்ளிரவு வரை தாக்குதல்கள் தொடர்ந்தன. இந்நிலையில், இந்திய பாதுகாப்பு படை நடத்திய தாக்குதலில், 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்திய தரப்பில் 4 வீரர்கள் காயமடைந்தனர். 

இதுகுறித்து ராணுவ வட்டாரங்கள் கூறுகையில், பாகிஸ்தான் தரப்பில் நடத்தப்பட்ட ஊடுருவல் தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்திய தரப்பில் நான்கு ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். இந்தியா தரப்பில் சரியான பதிலடி கொடுக்கப்பட்டது. ஊடுருவல் முறியடிக்கப்பட்டது. சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் உடல்கள் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் பாகிஸ்தான் பக்கத்தில் கிடக்கின்றன. இந்த உடல்களை பாகிஸ்தான் படைகளால் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து