எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மதுரை : பொதுமக்கள் அனைவரும் அம்மாவின் அரசிற்கு முழுஒத்துழைப்பு தர வேண்டும் என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மதுரை மேற்குதொகுதிக்குட்பட்ட முத்துப்பட்டி,பழங்காநத்தம், மாடக்குளம், துரைச்சாமி நகர் ஆகிய பகுதிகளில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பூமிபூஜை உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
பின்னர் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-
எந்த அரசும் கடன் வாங்காமல் எந்தவொரு திட்டங்களையும் செயல்படுத்த முடியாது. எல்லா அரசும் வளர்ச்சிப் பணிகளுக்கு கடன் பெற்றுத்தான் ஆக வேண்டும்.எதிர்க்கட்சி தலைவருக்கு இது பற்றி தெரியாதா என்று புரியவில்லை. ஒருகுறிப்பட்ட அளவிற்கு தான் கடன் வாங்க முடியும். 25 சதவீதத்திற்கு மேல் வாங்கமுடியாது. வரவு செலவு திட்டத்தில் அம்மா வைத்திருந்த தொகையை பற்றாக்குறையாக ஏற்படுத்தியது எதிர்க்கட்சி அரசாகும். தற்போது 2020 என்ற திட்டத்தின் அடிப்படையில் அம்மா இந்தியாவிலேயே தமிழகத்தை முதலிடமாக மாற்றுவதற்கும், ஆசியாகண்டத்திலேயே தமிழகத்தை முதல் மாநிலமாக மாற்றுவதற்கு கட்டமைப்பு வசதிகளைஉருவாக்குவதற்கு இதுபோன்ற கடன்கள் பெறப்பட்டுள்ளது. அதை வைத்துத்தான் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடியார் தற்போது கடன் பெற்று உள்ளார். எதிர்க்கட்சி தலைவர் சொல்வது முழுவதும் தவறானது.
பொது மக்கள் பிரச்சனையை உடனுக்குடன் தீர்ப்பதற்கு வழி வகை செய்தவர் முதல்வர் எடப்பாடியார். யார் யாரெல்லாம் கூட்டுறவு வங்கியில் கடன் பெற்று உள்ளார்கள் என்ற விபரத்தை கூட்டுறவு வங்கியில் கேட்டால் அறிக்கையாக வழங்கப்படும். கூட்டுறவு வங்கியி ஆப்பிலும் தெரிந்து கொள்ளலாம். அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. 12 லட்சம் விவசாயிகள் இதன் மூலம் பயன் பெற்றுள்ளனர் விவசாயிகளுக்கு இடர்பட்ட காலங்களிலும் வறட்சி, புயல்,வெள்ளம் போன்றகாலங்களிலும் தள்ளுபடி வழங்கியது அம்மாவின் அரசு. இந்த ஆண்டு மட்டும் பயிர்க்கடன் ஏறத்தாழ ரூ.9,137 கோடி மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கி மூலம் 94 லட்சத்து 61 ஆயிரத்து 34 நபர்கள் பயிர்கடன் பெற்றுள்ளனர். இந்த ஆண்டு 1.4.2020 முதல் 31.03.2021 வரை விவசாயிகளுக்குவழங்கிய கடன் 11 லட்சத்து 90 ஆயிரத்து 711 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு 9 ஆயிரத்து 172 கோடியே 89 லட்சம் மதிப்பீட்டில் பயிர்க்கடன்தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சி பயிர்க்கடன் தள்ளுபடி செய்தது வெறும் ரூ.3,715 கோடிமட்டும் தான். மொத்தத்தில் கடந்த ஆட்சியில் தள்ளுபடி செய்தது ரூ.5,369 கோடிமட்டும் தான். இதுவும் டிராக்டர் மற்றும் லாரிகள் வாங்கியவர்கள்,நீண்டகால கடன்பெற்றவர்களுக்கும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஓரே ஆண்டில் இரண்டு முறை சிறு,குறு விவசாயிகளுக்கு தள்ளுபடி செய்தது
அம்மாவின் அரசு. நமது முதல்வர் 16 லட்சத்து 40 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.12,110 கோடி மதிப்பீட்டில் தள்ளுபடி செய்து உள்ளார்கள். 2 ஏக்கர் மற்றும் 5 ஏக்கர் வைத்துள்ளவர்கள் எனஅளவீடு செய்து பட்டியல் சரிப்பார்த்த பிறகுதான் சட்டவிதிகளுக்கு உட்பட்டு தள்ளுபடிசெய்வார்கள். அனைவருக்கும் தள்ளுபடி செய்ய முடியாது. விவசாயிகளுக்கு தானே புயல்,வறட்சி நிவாரணம், வெள்ள நிவாரணம், பயிர்க்கடன் தள்ளுபடி, குறுவை சம்பாதொகுப்பு, பயிர்க்காப்பீடு இழப்பீடு போன்ற வகையில் தமிழகம் முழுவதும் ரூ.1கோடியே 58 லட்சத்து விவசாயிகளுக்கு ரூ.32,470 கோடி மதிப்பீட்டில் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. இதிலும் ரூ.506 கோடி வழங்காமல் சென்றது எதிர்கட்சிகாரர்களின் அரசாகும். கூட்டுறவுத் துறையை பொறுத்தமட்டில் அரசியல்,கட்சி,சாதி, மதம் ஏதும் பாரபட்சம் இல்லை. தகுதியானவர்களுக்கு பயிர்க்கடன்வழங்கப்படும்.
மதுரை மாவட்டத்தில் மட்டும் பயிர்க்கடனாக விவசாயிகளுக்கு ரூ.440 கோடிதள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.பயிர்க்கடனை தள்ளுபடி செய்ததற்கு விவசாயிகளுக்கு ரசீது வழங்கியவர் வரலாற்றிலேயே ஒரே முதலமைச்சர் உழவர் மகன் நமது தமிழக முதல்வர் எடப்பாடியார் தான். தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து விவசாயிகளும் பாராட்டி வருகிறார்கள்.
குடிமராமத்து பணிகள், விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கியவர் நமது முதல்வர். இது உங்களுடைய அரசு,உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டஅரசு எனவே பொதுமக்கள் அனைவரும் என்றென்றும் அம்மாவின் அரசிற்கு முழுஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 2 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 19 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
நாகப்பட்டினம், திருவாரூரில் இன்று விஜய் சுற்றுப்பயணம் : பிரச்சார இடங்கள் அறிவிப்பு
19 Sep 2025சென்னை : நாகப்பட்டினம், திருவாரூரில் இன்று த.வெ.க. தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்யவுள்ளார்.
-
அமெரிக்காவில் தெலங்கானா இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டதில் புதிய தகவல்
19 Sep 2025ஐதராபாத் : அமெரிக்காவில் தெலங்கானா இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டதில் புதிய தகவல் வெளயாகியுள்ளது.
-
செப்டம்பர் 22 முதல் விவசாயிகளுக்கு ஜி.எஸ்.டி. குறைப்புகள் வழங்கப்படும் : மத்திய வேளாண் அமைச்சர் தகவல்
19 Sep 2025டெல்லி : முதல் விவசாயிகளுக்கு ஜி.எஸ்.டி. குறைக்கப்படும் என்று வேளாண் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
19 Sep 2025சென்னை : தமிழகத்தில் இன்றும், நாளையும் (செப்.20, 21 தேதிகளில்) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெ
-
பாதுகாப்பை மீறி த.வெ.க. தலைவர் விஜய் வீட்டிற்குள் நுழைந்த இளைஞர்: போலீஸ் விசாரணையில் புதிய தகவல்
19 Sep 2025சென்னை, பாதுகாப்பை மீறி நடிகர் விஜய் வீட்டிற்குள் நுழைந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
-
போர்ச்சுகல் செல்லும் தமிழ்நாடு வீராங்கனைகளுக்கு துணை முதல்வர் உதயநிதி உதவி
19 Sep 2025சென்னை : போர்ச்சுகல் செல்லும் தமிழ்நாடு வீராங்கனைகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிதியுதவி வழங்கினார்.
-
வாக்குத்திருட்டு நடப்பது எப்படி? - ராகுல் காந்தி பதிவால் பரபரப்பு
19 Sep 2025டெல்லி : வாக்குத் திருட்டு எப்படி நடக்கிறது என்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ள கருத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
மறைந்த நடிகர் ரோபோ சங்கர் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி, கமல்ஹாசன் நேரில் அஞ்சலி
19 Sep 2025மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் உடலுக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அதிகாலை நேரில் அஞ்சலி செலுத்தினார்.
-
ரோபோ சங்கருக்கு நடிகர் விஜய் புகழஞ்சலி
19 Sep 2025சென்னை : தன்னுடைய நகைச்சுவை உணர்வால் சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை தனக்கெனத் தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர் ரோபோ சங்கர் என்று தவெக தலைவர் விஜய் புகழஞ்சலி செலுத்தி
-
வேலூர் காவலர் பயிற்சிப்பள்ளிக்கு வீரமங்கை வேலு நாச்சியார் பெயர் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
19 Sep 2025சென்னை : வேலூரில் உள்ள காவல் பயிற்சி பள்ளிக்கு வீரமங்கை வேலுநாச்சியாரின் பெயர் சூட்டப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
கரூர் எஸ்.பி.யிடம் மீண்டும் மனு அளியுங்கள்: இ.பி.எஸ். பொதுக் கூட்டத்துக்கு அனுமதி கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு
19 Sep 2025மதுரை : கரூர் பேருந்து நிலையம் அருகே எடப்பாடி பழனிசாமி பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கோரிய வழக்கில் மாவட்ட எஸ்.பி.யிடம் மீண்டும் மனு அளிக்க அ.தி.மு.க.வுக்கு உயர் நீதிமன்றம
-
இன்று பம்பையில் நடைபெறும் அய்யப்ப பக்தர்கள் சங்கமத்தில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்பு
19 Sep 2025திருவனந்தபுரம், பம்பையில் இன்று நடைபெறவுள்ள அய்யப்ப பக்தர்கள் சங்கமத்தில் தமிழ்நாடு அமைச்சர்கள் சேகர் பாபு, பழனிவேல் தியாகராஜன் பங்கேற்கிறார்கள்.
-
உடல் நலக்குறைவால் காலமான நடிகர் ரோபோ சங்கர் உடல் தகனம்
19 Sep 2025சென்னை, நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் இரவு காலமானார். அவருக்கு வயது 46.
-
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்வோம் : மே.இ.தீவுகள் பயிற்சியாளர் நம்பிக்கை
19 Sep 2025கரீபியன் : இந்திய மண்ணில் 20 விக்கெட்டுகளைக் கைப்பற்றும் அளவுக்கு மேற்கிந்தியத் தீவுகளிடம் தரமான வேகப் பந்துவீச்சாளர்கள் இருப்பதாக அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் டேர
-
தமிழகத்தில் 42 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து
19 Sep 2025புதுடெல்லி, தமிழ்நாட்டில் 6 ஆண்டுகளாக தேர்தலில் பங்கேற்காமல் இருந்த 42 கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
அமெரிக்காவில் மனைவியை சுட்டுக்கொன்ற நீதிபதிக்கு 35 ஆண்டு சிறை தண்டனை
19 Sep 2025வாஷிங்டன், அமெரிக்காவில் மனைவியை சுட்டுக்கொன்ற நீதிபதிக்கு 35 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
-
புதிய குடியேற்ற விதியின்படி இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட முதல் இந்தியர்
19 Sep 2025லண்டன், இங்கிலாந்தில் புதிய குடியேற்ற விதிகளை கொண்ட ‘ஒன்-இன், ஒன்-அவுட்’ என்ற ஒப்பந்தம் ஆகஸ்டு முதல் அமலுக்கு வந்துள்ள நிலையல், தற்போது முதல்முறையாக இங்கிலான்தில்
-
சீனாவில் ஓட்டல் மேஜையை அசுத்தம் செய்தவர்களுக்கு 3 கோடி ரூபாய் அபராதம்
19 Sep 2025பெய்ஜிங், சீனாவில் ஓட்டல் மேஜையை அசுத்தம் செய்த வாலிபர்களுக்கு ரூ.3 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி
19 Sep 2025சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஷென்சென் நகரில் நடந்து வருகிறது.
-
பாக்.கில் 2 வெடிகுண்டு தாக்குதல் - 11 பேர் பலி
19 Sep 2025லாகூர் : பாகிஸ்தானில் ஒரே நாளில் 2 வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்துள்ளது. இதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
தீபாவளிக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்
19 Sep 2025சென்னை, தீபாவளி பண்டிகைக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கபடவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
மீண்டும் இந்திய அணிக்காக விளையாட உள்ள அஸ்வின்
19 Sep 2025சென்னை : ‘ஹாங்காங் சிக்சர்ஸ் தொடர்’ மீண்டும் இந்திய அணிக்காக அஸ்வின் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
7.5 ரிக்டர் அளவில் ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
19 Sep 2025மாஸ்கோ, 7.5 ரிக்டர் அளவில் ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர அதிபர் புதின் விரும்பவில்லை; இங்கி., உளவுத்துறை தலைவர்
19 Sep 2025இஸ்தான்புல், உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர புதின் விரும்பவில்லை என்று இங்கிலாந்து உளவுத்துறை தலைவர் ரிச்சர்ட் மோரி தெரிவித்துள்ளார்.
-
வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக முன்கூட்டியே கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட மாட்டாது : அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்
19 Sep 2025தஞ்சாவூா் : வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக முன்கூட்டியே கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படமாட்டாது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.