எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மதுரை : பொதுமக்கள் அனைவரும் அம்மாவின் அரசிற்கு முழுஒத்துழைப்பு தர வேண்டும் என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மதுரை மேற்குதொகுதிக்குட்பட்ட முத்துப்பட்டி,பழங்காநத்தம், மாடக்குளம், துரைச்சாமி நகர் ஆகிய பகுதிகளில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பூமிபூஜை உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
பின்னர் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-
எந்த அரசும் கடன் வாங்காமல் எந்தவொரு திட்டங்களையும் செயல்படுத்த முடியாது. எல்லா அரசும் வளர்ச்சிப் பணிகளுக்கு கடன் பெற்றுத்தான் ஆக வேண்டும்.எதிர்க்கட்சி தலைவருக்கு இது பற்றி தெரியாதா என்று புரியவில்லை. ஒருகுறிப்பட்ட அளவிற்கு தான் கடன் வாங்க முடியும். 25 சதவீதத்திற்கு மேல் வாங்கமுடியாது. வரவு செலவு திட்டத்தில் அம்மா வைத்திருந்த தொகையை பற்றாக்குறையாக ஏற்படுத்தியது எதிர்க்கட்சி அரசாகும். தற்போது 2020 என்ற திட்டத்தின் அடிப்படையில் அம்மா இந்தியாவிலேயே தமிழகத்தை முதலிடமாக மாற்றுவதற்கும், ஆசியாகண்டத்திலேயே தமிழகத்தை முதல் மாநிலமாக மாற்றுவதற்கு கட்டமைப்பு வசதிகளைஉருவாக்குவதற்கு இதுபோன்ற கடன்கள் பெறப்பட்டுள்ளது. அதை வைத்துத்தான் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடியார் தற்போது கடன் பெற்று உள்ளார். எதிர்க்கட்சி தலைவர் சொல்வது முழுவதும் தவறானது.
பொது மக்கள் பிரச்சனையை உடனுக்குடன் தீர்ப்பதற்கு வழி வகை செய்தவர் முதல்வர் எடப்பாடியார். யார் யாரெல்லாம் கூட்டுறவு வங்கியில் கடன் பெற்று உள்ளார்கள் என்ற விபரத்தை கூட்டுறவு வங்கியில் கேட்டால் அறிக்கையாக வழங்கப்படும். கூட்டுறவு வங்கியி ஆப்பிலும் தெரிந்து கொள்ளலாம். அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. 12 லட்சம் விவசாயிகள் இதன் மூலம் பயன் பெற்றுள்ளனர் விவசாயிகளுக்கு இடர்பட்ட காலங்களிலும் வறட்சி, புயல்,வெள்ளம் போன்றகாலங்களிலும் தள்ளுபடி வழங்கியது அம்மாவின் அரசு. இந்த ஆண்டு மட்டும் பயிர்க்கடன் ஏறத்தாழ ரூ.9,137 கோடி மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கி மூலம் 94 லட்சத்து 61 ஆயிரத்து 34 நபர்கள் பயிர்கடன் பெற்றுள்ளனர். இந்த ஆண்டு 1.4.2020 முதல் 31.03.2021 வரை விவசாயிகளுக்குவழங்கிய கடன் 11 லட்சத்து 90 ஆயிரத்து 711 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு 9 ஆயிரத்து 172 கோடியே 89 லட்சம் மதிப்பீட்டில் பயிர்க்கடன்தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சி பயிர்க்கடன் தள்ளுபடி செய்தது வெறும் ரூ.3,715 கோடிமட்டும் தான். மொத்தத்தில் கடந்த ஆட்சியில் தள்ளுபடி செய்தது ரூ.5,369 கோடிமட்டும் தான். இதுவும் டிராக்டர் மற்றும் லாரிகள் வாங்கியவர்கள்,நீண்டகால கடன்பெற்றவர்களுக்கும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஓரே ஆண்டில் இரண்டு முறை சிறு,குறு விவசாயிகளுக்கு தள்ளுபடி செய்தது
அம்மாவின் அரசு. நமது முதல்வர் 16 லட்சத்து 40 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.12,110 கோடி மதிப்பீட்டில் தள்ளுபடி செய்து உள்ளார்கள். 2 ஏக்கர் மற்றும் 5 ஏக்கர் வைத்துள்ளவர்கள் எனஅளவீடு செய்து பட்டியல் சரிப்பார்த்த பிறகுதான் சட்டவிதிகளுக்கு உட்பட்டு தள்ளுபடிசெய்வார்கள். அனைவருக்கும் தள்ளுபடி செய்ய முடியாது. விவசாயிகளுக்கு தானே புயல்,வறட்சி நிவாரணம், வெள்ள நிவாரணம், பயிர்க்கடன் தள்ளுபடி, குறுவை சம்பாதொகுப்பு, பயிர்க்காப்பீடு இழப்பீடு போன்ற வகையில் தமிழகம் முழுவதும் ரூ.1கோடியே 58 லட்சத்து விவசாயிகளுக்கு ரூ.32,470 கோடி மதிப்பீட்டில் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. இதிலும் ரூ.506 கோடி வழங்காமல் சென்றது எதிர்கட்சிகாரர்களின் அரசாகும். கூட்டுறவுத் துறையை பொறுத்தமட்டில் அரசியல்,கட்சி,சாதி, மதம் ஏதும் பாரபட்சம் இல்லை. தகுதியானவர்களுக்கு பயிர்க்கடன்வழங்கப்படும்.
மதுரை மாவட்டத்தில் மட்டும் பயிர்க்கடனாக விவசாயிகளுக்கு ரூ.440 கோடிதள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.பயிர்க்கடனை தள்ளுபடி செய்ததற்கு விவசாயிகளுக்கு ரசீது வழங்கியவர் வரலாற்றிலேயே ஒரே முதலமைச்சர் உழவர் மகன் நமது தமிழக முதல்வர் எடப்பாடியார் தான். தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து விவசாயிகளும் பாராட்டி வருகிறார்கள்.
குடிமராமத்து பணிகள், விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கியவர் நமது முதல்வர். இது உங்களுடைய அரசு,உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டஅரசு எனவே பொதுமக்கள் அனைவரும் என்றென்றும் அம்மாவின் அரசிற்கு முழுஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
பழம்பெரும் நடிகை சரோஜாதேவி உடல்நலக்குறைவால் காலமானார்
14 Jul 2025பெங்களூரு : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவால் நேற்று (ஜூலை 14) காலையில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 87.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-07-2025.
14 Jul 2025 -
40 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்: டி.ஜி.பி. சங்கர் ஜிவால்
14 Jul 2025சென்னை, டி.எஸ்.பி., உதவி ஆணையர் பொறுப்பிலுள்ள 40 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி. சங்கர் ஜிவால் நடவடிக்கை எடுத்துள்ளார்.
-
கோவா, அரியானா உள்ளிட்ட 3 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமனம்
14 Jul 2025புதுடெல்லி, கோவா உள்பட 3 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமனம் செய்து ஜனாதிபதி திரெளபதி முர்மு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
மாயக்கூத்து திரை விமர்சனம்
14 Jul 2025எழுத்தாளர் நாகராஜன் கண்ணன், ஒரு கதை எழுதுகிறார்.
-
சூர்யா சேதுபதிக்கு இயக்குநர் அனல் அரசு புகழாரம்
14 Jul 2025சண்டை இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய்சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை 4 அன்று திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
-
தமிழக எம்.பி, எம்.எல்.ஏ.-க்கள் மீதான ஊழல் வழக்கு விவரங்களை வழங்க உத்தரவிடக்கோரி த.வெ.க. மனு
14 Jul 2025சென்னை : தமிழகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான ஊழல் வழக்கு குறித்த விவரங்களை வெளியிட மாநில தகவல் ஆணையருக்கு உத்தரவிடக் கோரி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் உயர்
-
கைமேரா இசை வெளியீட்டு விழா
14 Jul 2025மாணிக் ஜெய். என் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கைமேரா’. இத்திரைப்படத்தில் அறிமுக நாயகனாக LNT எத்திஷ் நடிக்கிறார்.
-
அரசியலில் அப்பா- மகன் உறவு மிக மிக முக்கியம் : துணை முதல்வர் உதயநிதி பேச்சு
14 Jul 2025திருச்சி : 'அரசியலில் அப்பா- மகன் உறவு மிக மிக முக்கியம்' என தி.மு.க. நிர்வாகி இல்லத் திருமண விழாவில் துணை முதல்வர் உதயநிதி பேசுகையில் தெரிவித்தார்.
-
உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்கள் மீது 45 நாளில் தீர்வு : கூடுதல் தலைமை செயலாளர் உறுதி
14 Jul 2025சென்னை : ''உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது 45 நாட்களில் தீர்வு காணப்படும் என அரசு கூடுதல் தலைமை செயலாளரான ஐ.ஏ.எஸ்., அதிகாரி அமுதா தெரிவித்
-
முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம் : லட்சக்கணக்கானோர் பங்கேற்பு
14 Jul 2025மதுரை : முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று (ஜூலை 14) அதிகாலை 5.31 மணியளவில் கும்பங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபி
-
சரோஜா தேவி மறைவு: பிரதமர் மோடி இரங்கல்
14 Jul 2025புதுடெல்லி : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
பழனி முருகன் கோவிலில் ஹெலிகாப்டரில் வந்து சாமி தரிசனம் செய்த சிங்கப்பூர் மந்திரி
14 Jul 2025பழனி : பழனி முருகன் கோவிலில் ஹெலிகாப்டரில் வந்து சாமி தரிசனம் செய்தார் சிங்கப்பூர் மந்திரி சண்முகம்.
-
ஓடும் ரெயிலில் கர்ப்பிணியை கீழே தள்ளிய வழக்கு: குற்றவாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து கோர்ட் உத்தரவு
14 Jul 2025திருப்பத்தூர் : ஓடும் ரெயிலில் கர்ப்பிணியை கீழே தள்ளிய வழக்கில் குற்றவாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
விமான விபத்துக்கு பராமரிப்பு பிரச்சினைகள் காரணமில்லை : ஏர் இந்தியா சி.இ.ஓ. தகவல்
14 Jul 2025புதுடெல்லி : அகமதாபாத் விமான விபத்துக்கு இயந்திரவியல் (மெக்கானிக்கல்), பராமரிப்பு சார்ந்த (மெயின்டனன்ஸ்) பிரச்சினைகள் காரணமாக இருக்கவில்லை என ஏர் இந்தியா சி.இ.ஓ.
-
நடிகை சரோஜாதேவி மறைவு: அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்
14 Jul 2025சென்னை, நடிகை சரோஜாதேவி மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.;
-
நான் துரோகியா? - மல்லை சத்யா ஆவேசம்
14 Jul 2025சென்னை : ம.தி.மு.க.விற்கு நான் நன்றி கடன் பட்டவனாக இருப்பேன் நான் துரோகி அல்ல என்று மல்லை சத்யா கூறினார்.
-
2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்கும்: இ.பி.எஸ். மீண்டும் திட்டவட்டம்
14 Jul 2025சேலம், 2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
அமர்நாத்தில் பனி லிங்கத்தை 2 லட்சம் பக்தர்கள் தரிசித்தனர்
14 Jul 2025ஸ்ரீநகர், அமர்நாத் யாத்திரை தொடங்கியதில் இருந்து இதுவரை 2 லட்சம் பக்தர்கள் பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர்.
-
உள்ளே செல்ல அனுமதி மறுப்பு: தியாகிகள் கல்லறைக்கு சுவர் ஏறி சென்று முதல்வர் உமர் அஞ்சலி
14 Jul 2025ஸ்ரீநகர் : தியாகிகளின் கல்லறைக்குச் செல்ல முதல்வர் உமர் அப்துல்லாவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அவர் சுவர் ஏறி குறித்துச் சென்று அஞ்சலி செலுத்தினார்.
-
படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் பலி: இயக்குனர் பா.ரஞ்சித் வழக்கு பதிவு
14 Jul 2025நாகை : படப்பிடிப்பு தளத்தில் ஸ்டன்ட் காட்சியின் போது ஸ்டண்ட் மாஸ்டர் ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில் இயக்குனர் பா.ரஞ்சித் உள்ளிட்ட நான்கு பேர் மீது போலீசார் வழக்கு
-
புதின் அழகாக பேசுகிறார்; ஆனால் குண்டுகளையும் வீசி விடுகிறார்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தாக்கு
14 Jul 2025வாஷிங்டன், புதின் அழகாக பேசுகிறார் . ஆனால் அனைவர் மீதும் குண்டுகளை போடுகிறார் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
பயணத்தை தொடங்கியது டிராகன்: சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர் இன்று பூமிக்கு திரும்புகின்றனர்
14 Jul 2025நியூயார்க், சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேருடன் பூமியை நோக்கி தனது பயணத்தை டிராகன் விண்கலம் தொடங்கியது. இன்று மாலை அவர்கள் பூமிக்கு திரும்புகின்றனர் .
-
தமிழகத்தில் பள்ளிக்கூடங்களில் நடைமுறைக்கு வந்தது 'ப; வடிவ வகுப்பறைகள்
14 Jul 2025சென்னை, தமிழகத்தில் பள்ளிக்கூடங்களில் "ப" வடிவ வகுப்பறைகள் நேற்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
-
மிசஸ் & மிஸ்டர் திரை விமர்சனம்
14 Jul 2025வனிதா விஜயகுமாரும், ராபர்ட்டும் காதல் திருமணம் செய்து கொண்டு பாங்காக்கில் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். 40 வயதை எட்டும் வனிதா குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படுகிறார்.