முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆதார் விவரங்களை தனி நபர்களுக்கு வழங்க கூடாது மதுரை ஐகோர்ட் கிளை கருத்து

புதன்கிழமை, 4 ஆகஸ்ட் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை: ஆதார் விவரங்களை தனி நபர்களுக்கு வழங்கக் கூடாது. புலன் விசாரணை அமைப்புகளுக்கு வழங்கலாம் என ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

புதுக்கோட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் கணேசன், 2019-ல் காணாமல் போன தனது மகன் சண்முகபிரியனை கண்டுபிடித்து ஒப்படைக்கக்கோரி ஐகோர்ட் மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.  இந்த மனு நீதிபதிகள் பாரதிதாசன், நிஷாபானு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சார்பில், மனுதாரரின் மகனின் ஆதார் விவரங்கள் கிடைக்கவில்லை. இதனால் சிறுவனை கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.  மத்திய அரசுத் தரப்பில், ஆதார் விவரங்கள் தனிநபர் சம்பந்தப்பட்டவை. நீதிமன்றம் உத்தரவிட்டால் ஆதார் விவரங்களை வழங்கத் தயாராக உள்ளோம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், ஆதார் விவரங்களை தனிநபர்களுக்கு தான் வழங்கக் கூடாது. வழக்கு விசாரணைகளுக்கு உதவும் வகையில் புலன் விசாரணை அமைப்புகளுக்கு ஆதார் விவரங்களை வழங்கலாம் என்றனர். பின்னர், மனு தொடர்பாக ஆதார் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நாளை 6-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து