எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லண்டன் லார்ட்சில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்தியா 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியை அடுத்து 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 2-வது இன்னிங்சில் பும்ரா 3 விக்கெட்களையும், முகமது சிராஜ் 4 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
181 ரன்கள்...
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த 12-ம் தேதி லண்டன் லார்ட்சில் தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 364 ரன்களும், இங்கிலாந்து 391 ரன்களும் குவித்தன. 27 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 4-வது நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 181 ரன்கள் எடுத்திருந்தது. விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் 14 ரன்களுடனும், இஷாந்த் ஷர்மா 4 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
209 ரன்கள்...
இந்த நிலையில் பரபரப்பான 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டத்தில் தொடர்ந்து பேட்டிங் செய்த ரிஷாப் பண்ட் 22 ரன்னில் வேகப்பந்து வீச்சாளர் ராபின்சனின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் பட்லரிடம் கேட்ச் ஆனார். இஷாந்த் ஷர்மாவும் (16 ரன்) அவரது பந்து வீச்சுக்கே வீழ்ந்தார். அப்போது இந்தியா 8 விக்கெட்டுக்கு 209 ரன்களுடன் சிக்கலில் தவித்தது. இங்கிலாந்தின் கை சற்று ஓங்கியது போல் தெரிந்தது.
ஷமி - பும்ரா அசத்தல்...
இந்த சூழலில் 9-வது விக்கெட்டுக்கு கைகோர்த்த முகமது ஷமியும், ஜஸ்பிரித் பும்ராவும் இங்கிலாந்தின் உற்சாகத்தை சீர்குலைத்தனர். இருவரும் கைதேர்ந்த பேட்ஸ்மேன்கள் போன்று விளையாடி வியக்க வைத்தனர்.
பவுன்சர் பந்து...
பும்ராவுக்கு, தொடக்கத்தில் அடுக்கடுக்கான பவுன்சர் பந்துகளை வீசி இங்கிலாந்த பவுலர்கள் குடைச்சல் கொடுத்தனர். இதில் மார்க்வுட் வீசிய ஒரு பந்து அவரது ஹெல்மெட்டை பயங்கரமாக தாக்கியது. உடனடியாக அணியின் பிசியோதெரபிஸ்ட் வந்து அவரை சோதித்து பார்த்தார். காயம் எதுவும் இல்லை என்று கூறியதையடுத்து தொடர்ந்து பேட்டிங் செய்தார்.
2-வது அரைசதம்...
இன்னொரு முறை ஆண்டர்சன் வீசிய பந்தும் அவரது ஹெல்மெட்டை பதம் பார்த்தது. மறுமுனையில் முகமது ஷமி, சிரமமின்றி இங்கிலாந்தின் பந்து வீச்சை வறுத்தெடுத்தார். இவர்கள் ஆடிய விதத்தை பார்த்து ஒரு கட்டத்தில் இங்கிலாந்து வீரர்கள் நொந்தே போனார்கள். ஷமி தனது 2-வது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.
இந்தியா டிக்ளேர்...
மதிய உணவு இடைவேளைக்கு பிறகு இந்திய அணி 2-வது இன்னிங்சில் 109.3 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 298 ரன்கள் சேர்த்து ‘டிக்ளேர்’ செய்தது. முகமது ஷமி 56 ரன்களுடனும் (70 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்), ஜஸ்பிரித் பும்ரா 34 ரன்களுடனும் (64 பந்து, 3 பவுண்டரி) களத்தில் இருந்தனர்.
272 ரன்கள் இலக்கு...
இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 272 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. டிரா செய்வதற்கு குறைந்தது 60 ஓவர்கள் தாக்குப்பிடித்தாக வேண்டும் என்ற நெருக்கடிக்கு மத்தியில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்துக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி காத்திருந்தது.
டக்-அவுட்...
தொடக்க வீரர்கள் ரோரி பர்ன்ஸ் (0), டாம் சிப்லி (0) இருவரும் இந்திய வேக தாக்குதலில் டக்-அவுட் ஆனார்கள். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் ஒன்றில் இங்கிலாந்து தொடக்க வீரர்கள் இருவரும் ரன் இன்றி சரண் அடைந்தது இதுவே முதல் முறையாகும். தொடர்ந்து 4 ரன்னில் கேட்ச் வாய்ப்பில் இருந்து தப்பித்த ஹசீப் ஹமீத் 9 ரன்னிலும், ஜானி பேர்ஸ்டோ 2 ரன்னிலும் வெளியேற்றப்பட்டார்.
ஜோ ரூட் அவுட்...
முதல் இன்னிங்சில் சதம் விளாசிய அபாயகரமான பேட்ஸ்மேன் கேப்டன் ஜோ ரூட்டை (33 ரன், 60 பந்து, 5 பவுண்டரி) இந்த முறை பும்ரா வேட்டையாடினார். அவரது பந்து வீச்சில் ஜோ ரூட் ஸ்லிப்பில் கோலிடம் பிடிபட்டார். இதனால் இந்தியாவின் பிடி மேலும் இறுகியது.
மொயீன் அலி - சாம்...
விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லரும் வந்த வேகத்தில் வெளியேறி இருக்க வேண்டியது. 2 ரன்னில் இருந்த போது அவர் கொடுத்த மிக எளிதான கேட்ச் வாய்ப்பை ஸ்லிப்பில் நின்ற கோலி வீணடித்து விட்டார். அதன் பிறகு அவர் தான் இந்தியாவின் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டையாக மாறினார். அவர் ஒரு பக்கம் போராட மறுமுனையில் மொயீன் அலி 13 ரன்னிலும், சாம் கார்ரன் ரன்இன்றியும் நடையை கட்டினார்.
பும்ரா - சிராஜ்...
ராபின்சன் 9 ரன்னில் (35 பந்து) பும்ராவின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். முதலில் நடுவர் விரலை உயர்த்தவில்லை. டி.ஆர்.எஸ்.-ன்படி கோலி அப்பீல் செய்தே சாதகமான முடிவை பெற்றார். தொடர்ந்து ஜோஸ்பட்லர் 25 ரன்களிலும் (96 பந்து, 3 பவுண்டரி), ஆண்டர்சன் ரன்இன்றியும் முகமது சிராஜியின் பந்துவீச்சுக்கு இரையானார்கள்.
இந்தியா வெற்றி...
முடிவில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 51.5 ஓவர்களில் 120 ரன்னில் சுருண்டது. இன்னும் அரைமணி நேரம் தாக்குப்பிடித்து இருந்தால் ஆட்டம் டிராவில் முடிந்திருக்கும். இதன் மூலம் இந்தியா 151 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியை ருசித்தது. இந்திய தரப்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளும், பும்ரா 3 விக்கெட்டுகளும், இஷாந்த் ஷர்மா 2 விக்கெட்டும், ஷமி ஒரு விக்கெட்டும் சாய்த்தனர். முதல் இன்னிங்சில் சதம் அடித்த இந்திய வீரர் லோகேஷ் ராகுல் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இந்தியா முன்னிலை...
5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 3-வது டெஸ்ட் வருகிற 25-ம் தேதி லீட்சில் தொடங்குகிறது.
முதல் இன்னிங்ஸ்
1) ராகுல் - 129. 2) ரோஹித் - 83. 3) கோலி - 42. 4) ஜடேஜா - 40.
இஷாந்த் சர்மா - 3 விக்கெட்டுகள், ஷமி - 2 விக்கெட்டுகள், சிராஜ் - 4 விக்கெட்டுகள், ஜடேஜா - 1 ரன் அவுட்
2-வது இன்னிங்ஸ்
1) புஜாரா - 45, 2) ரஹானே - 61, 3) ஷமி - 56* , 4) பும்ரா - 34*.
பும்ரா - 3 விக்கெட்டுகள், சிராஜ் - 4 விக்கெட்டுகள், இஷாந்த் சர்மா - 2 விக்கெட்டுகள்,
இரு இன்னிங்ஸிலும்....
1) ரிஷப் பந்த் = 4 டிஸ்மிஸல்கள், இஷாந்த் சர்மா - 5 விக்கெட்டுகள், சிராஜ் - 8 விக்கெட்டுகள்.
இந்தியா 3-வது வெற்றி
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் இதுவரை 19 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 3 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வென்றுள்ளது. 1986-ம் ஆண்டில் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தலைமையி்லான இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்தது. அதன்பின், 28 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2014-ம் ஆண்டு டோனி தலைமையிலான இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் 2-வது வெற்றியைப் பதிவு செய்தது.
இந்நிலையில், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இது லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி பெற்றுள்ள மூன்றாவது வெற்றி ஆகும். மேலும், லார்ட்ஸ் மைதானத்தில் சதமடித்த 10-வது இந்திய வீரர் கே.எல்.ராகுல் என்பது குறிப்பிடத்தக்கது.
லார்ட்ஸ் டெஸ்ட் - முக்கிய நிகழ்வுகள்
1) 1986-ல் கபில் தலைமையிலும் 2014-ல் தோனி தலைமையிலும் இந்திய அணி லார்ட்ஸ் டெஸ்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. அங்குக் கிடைத்த 3-வது வெற்றி இது. வெளிநாடுகளில் மெல்போர்னில் இந்திய அணி அதிகபட்சமாக 4 வெற்றிகளைப் பெற்றுள்ளது.
2) இந்த டெஸ்டில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் 19 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். (ஒரு விக்கெட் ரன் அவுட்டில் கிடைத்தது). 2018-ல் ஜொஹன்னஸ்பர்க்கில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராகவும் இதற்கு முன்பு டிரெண்ட்பிரிட்ஜில் நடைபெற்ற டெஸ்டிலும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.
3) முதல் இன்னிங்ஸில் பும்ராவும் ஷமியும் டக் அவுட் ஆனார்கள். 2-வது இன்னிங்ஸில் தங்களுடைய அதிகபட்ச டெஸ்ட் ரன்களை (ஷமி - 59*, பும்ரா 29*) எடுத்துள்ளார்கள்.
4) இந்த டெஸ்டில் தனது 22-வது சதத்தை அடித்தார் கேப்டன் ரூட். இதற்கு முன்பு அவர் சதமடித்தபோது இங்கிலாந்து அணி தோல்வியடைந்ததில்லை. முதல்முறையாக சதமடித்தும் தோல்வியை எதிர்கொண்டுள்ளார் ரூட். (கிரீம் ஸ்மித் 27 சதங்கள் அடித்தும் தோல்வியை எதிர்கொள்ளவில்லை.)
5) 2014-ல் இங்கிலாந்துக்கு எதிராக ஷமியும் புவனேஸ்வர் குமாரும் 10-வது விக்கெட்டுக்கு 111 ரன்கள் சேர்த்தார்கள். அதன்பிறகு 9-வது விக்கெட் மற்றும் 10-வது விக்கெட்டுக்கு இப்போதுதான் இந்திய அணி இந்தளவுக்கு அதிக ரன்களை எடுத்துள்ளது.
6) ரூட்டின் விக்கெட்டை 5 முறை வீழ்த்தியுள்ளார் பும்ரா. பேட் கம்மின்ஸூம் பும்ரா பந்துவீச்சில் 5 முறை ஆட்டமிழந்துள்ளார். டெஸ்டுகளில் பும்ராவின் 379 பந்துகளை எதிர்கொண்டு 180 ரன்கள் எடுத்து 5 முறை வீழ்ந்துள்ளார் ரூட்.
7) லார்ட்ஸ் டெஸ்டில் 7 முறை இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் டக் அவுட் ஆனார்கள். டெஸ்டில் இங்கிலாந்து அணியினர் எடுத்த அதிகபட்ச டக் அவுட்களை இது சமன் செய்துள்ளது. கடைசியாக 1999-ல் தான் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றது.
8) தேநீர் இடைவேளைக்குப் பிறகு இந்திய அணி இங்கிலாந்தின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியது. 2001 கொல்கத்தா டெஸ்டில் இந்திய அணி ஆஸி.யின் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியது. 2016 சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டிலும் இந்திய அணி கடைசி நாளின் கடைசிப் பகுதியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி வென்றது.
9) லார்ட்ஸில் இந்தியப் பந்துவீச்சாளரின் சிறந்த பந்துவீச்சு இது. சிராஜுக்குக் கிடைத்த பெருமை. இதற்கு முன்பு கபில் தேவ் 1982-ல் 168 ரன்கள் கொடுத்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
10) சொந்த மண்ணில் 4-வது இன்னிங்ஸில் இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து அணி எடுத்த குறைந்தபட்ச ரன்கள்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 2 days ago |
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
குஜராத் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி டெல்லி திரில் வெற்றி
25 Apr 2024புதுடெல்லி, டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது.
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
டி20 உலகக்கோப்பை தொடர்: பிராண்ட் அம்பாசிடராக உசைன் போல்ட் நியமனம்
25 Apr 2024வாஷிங்டன், உலகின் அதிவேக மனிதர் என்று அழைக்கப்படும் ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் டி20 உலக கோப்பை போட்டியின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
ரிஷப் பந்த் குறித்து பயிற்சியாளர்
25 Apr 2024ஐபிஎல் தொடரில் தில்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தில்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின.
-
ரஞ்சிக் கோப்பை: வீரர்களுக்கு ரூ.1 கோடி வரை சம்பளத்தை உயர்த்த பி.சி.சி.ஐ. பரிசீலனை
25 Apr 2024மும்பை, ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் வீரர்கள் விளையாடுவதை ஊக்கப்படுத்தும் விதமாக, வருடாந்திர ஊதியத்தை ஒரு கோடி ரூபாய் வரை உயர்த்த பி.சி.சி.ஐ.
-
உலக சாம்பியன்ஷிப்பில்லும் நிச்சயம் வெற்றி பெறுவேன்: சென்னை திரும்பிய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் நம்பிக்கை
25 Apr 2024சென்னை, கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் சாதனை படைத்த குகேஷூக்கு சென்னையில் அமோக வரவேற்பளிக்கப்பட்ட நிலையில், உலக சாம்பியன்ஷிப்பிலும் தான் வெற்றி பெற முடி
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம்: கோவையில் பிறந்தவர் அமெரிக்காவில் கைது
26 Apr 2024வாஷிங்டன், கோவையில் பிறந்து, அமெரிக்காவில் படித்து வரும் மாணவி ஒருவர், இஸ்ரேலை கண்டித்து போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டு உள்ளார்.
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை: நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் பேட்டி
26 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை என்று நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா தெரிவித்துள்ளார்.
-
வெயில், வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை கடுமையாக உயர்வு
26 Apr 2024சென்னை, கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்
26 Apr 2024புது டெல்லி, பாராமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றதை முன்னிட்டு டூடுலை வெளியிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பித்துள்ளது.
-
இந்தியாவின் வளர்ச்சியை பரம்பரை சொத்து வரி முறை சிதைத்து விடும்: நிர்மலா சீதாராமன் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, பரம்பரை சொத்து வரி முறை இந்தியாவின் பத்தாண்டு கால வளர்ச்சியை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் காங்கிரசை சாடியுள்ளார்.
-
உங்கள் ஓட்டு உங்கள் குரல்: பிரதமர் மோடி அழைப்பு
26 Apr 2024புதுடில்லி, 13 மாநிலங்களில் நேற்று 2ம் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற்ற நிலையில் பிரதமர் மோடி, மக்கள் அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.
-
கைது செய்ய முயன்ற போது தாக்குதல்: அமெரிக்காவில் இந்தியரை சுட்டுக்கொன்ற போலீஸ்
26 Apr 2024நியூயார்க், கைது செய்ய முயன்ற போது நடந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை அமெரிக்க போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
தேர்தலில் போட்டியிட தடை கோரி பிரதமர் மோடிக்கு எதிரான மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தது கோர்ட்
26 Apr 2024புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிடுவதற்கு 6 ஆண்டுகள் தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது.