முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டோக்கியோ 'பாராலிம்பிக்' போட்டி இன்று தொடக்கம்: இந்திய அணிக்கு தலைமை தாங்குகிறார் மாரியப்பன் தங்கவேலு

திங்கட்கிழமை, 23 ஆகஸ்ட் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

டோக்கியோ : 160 நாடுகளில் இருந்து 4,500 மாற்றுத் திறனாளி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் டோக்கியோ 'பாராலிம்பிக்' போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று கோலாகலமாக தொடங்குகின்றன. துவக்க விழாவில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்திச் செல்கிறார்.

4,400 வீரர்கள்...

மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாராலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று கோலாகலமாக தொடங்கி செப்டம்பர் 5-ம் தேதி வரை நடக்கிறது. இதில் ஏறக்குறைய 160 நாடுகளைச் சேர்ந்த 4, 400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். கொரோனா தொற்று காரணமாக பாராஒலிம்பிக் துவக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்கும் நாடுகளுக்கு நிறைய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெறவுள்ள டோக்கியோ பாராஒலிம்பிக் துவக்க விழாவில் மாரியப்பன் உட்பட 5 வீரர் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு, தொடக்க விழா அணிவகுப்பில் தேசியக் கொடியை ஏந்திச் செல்கிறார்.

பாராலிம்பிக் போட்டி...

உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் முடிந்தவுடன் பாராலிம்பிக் போட்டிகள் நடத்தப்படும். கடந்த 1948 ஒலிம்பிக் போட்டியில் அதிகளவு மாற்றுத் திறனாளிகள் பங்கேற்றனர். அதற்கு அடுத்து 1960-ல் 23 நாடுகளில் இருந்து 400-க்கு மேற்பட்டோர் பங்கேற்றனர். இதன் தொடர்ச்சியாக 2012 லண்டன் ஒலிம்பிக்கில் 100 நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கோனர் பங்கேற்றனர்.

ஓராண்டு தள்ளி... 

ஒவ்வொரு மாற்றுத்திறனாளியின் உடல்பாதிப்புக்கு ஏற்ப அவர்கள் விளையாட்டுகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 2020-ம் ஆண்டே பாராலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக ஒலிம்பிக் போட்டிகளைப் போலவே பாராலிம்பிக் போட்டியும் ஓராண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது. டோக்கியோவில் ஏற்கெனவே 1964-ல் பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன. புதிதாக தற்போது பாட்மிண்டன், டேக்வாண்டோ போன்ற விளையாட்டு போட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

ரசிகர்கள் இன்றி...

கொரோனா பரவல் அச்சம் காரணமாக ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. துவக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்கும் நாடுகளுக்கு நிறைய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாடுகளின் சார்பில் 6 அதிகாரிகள் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வீரர், வீராங்கனைகளின் எண்ணிக்கையில் வரம்பு கிடையாது.

540 போட்டிகள்... 

வில்வித்தை, தடகளம், பாட்மிண்டன், சைக்கிளிங், குதிரையேற்றம், 5 பேர் கால்பந்து, கோல்பால், ஜூடோ, பாராகனோ, பவர்லிஃப்டிங், ரோயிங், துப்பாக்கி சுடுதல், சிட்டிங் வாலிபால், நீச்சல், டேபிள் டென்னிஸ், வீல்சேர் கூடைப்பந்து, வாள்சண்டை, ரக்பி, டென்னிஸ் உள்ளிட்ட 22 விளையாட்டுகளில் 540 போட்டிகள் நடக்க உள்ளன.

54 வீரர்கள்...

இந்தியா சார்பில் அதிகபட்ச எண்ணிக்கையாக இந்த முறை 54 வீரர், வீராங்கனைகள் தடகளம், வில்வித்தை, பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ் உள்பட 9 வகையான விளையாட்டுகளில் களம் இறங்குகிறார்கள். தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு, தொடக்க விழா அணிவகுப்பில் தேசியக் கொடியை ஏந்திச் செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளார். கடந்த 2016 ரியோ பாராலிம்பிக்கில் 2 தங்கம், தலா 1 வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை இந்திய அணியினர் வென்றிருந்தனர். டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் இந்திய அணி வெல்லும் பதக்கங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் எனக் கருதப்படுகிறது.

மாரியப்பன் தங்கவேலு... 

கடந்த 2016 ரியோ பாராலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் தேவேந்திரா ஜஹாரியாவும், உயரம் தாண்டுதலில் தமிழகத்தின் மாரியப்பன் தங்கவேலு தங்கப் பதக்கம் வென்றனர். தற்போது இந்திய அணியில் உலக சாதனையாளர்கள் சந்தீப் சௌதரி, சுமித் ஆகியோர் தடகள அணியில் உள்ளனர். பாட்மிண்டனில் 4 முறை உலக சாம்பியன் பிரமோத் பகத், சுஹாஸ் யதிராஜ் ஆகியோர் பதக்கம் வெல்லும் வாய்ப்புள்ளது. 

துப்பாக்கி சுடுதல்... 

டேக்வாண்டோ மகளிர் பிரிவில் உலகப் போட்டியில்  வெண்கலம் வென்ற வீராங்கனை அருணா தன்வர் டோக்கியோவில் பதக்கம் வெல்லவார் என நம்பப்படுகிறது. துப்பாக்கி சுடுதலில் 2021 உலகப் போட்டியில் தங்கம் வென்ற ரூபினா பிரான்ஸிஸ் பதக்கம் பட்டியலில் இடம்பெறுவார் என தெரிகிறது. மேலும் எப்-46 ஈட்டி எறிதலில் ரஞ்சித் பாட்டி, சந்தீப் சஞ்சய் சர்க்கார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

குண்டு எறிதல்... 

உயரம் தாண்டுதலில் மாரியப்பன் தங்கவேலு, சரத்குமார், வருண் சிங்கும், டி-47 உயரம் தாண்டுதலில் நிஷாத் குமார், ராம்பால், டி-64-ல் பிரவீண்குமார், எப்-51 கிளப் த்ரோவில் அமீத்குமார், தரம்பீர், எப்-57 குண்டு எறிதலில் சோனம் ராணா, எப் 35-இல் அரவிந்த், எப்-56 வட்டு எறிதலில் யோகேஷ் கதுனியா, எப்-56-இல் வினோத்குமார் ஆகியோர் இடம் பெறுகின்றனர்.

வில்வித்தை...

மகளிர் பிரிவில் எப்-51 கிளப் த்ரோவில் ஏக்தா பயன், கஷிஷ் லக்ரா, டி13 100 மீட்டரில் சிம்ரன், எப்-34 குண்டு எறிதலில் பாக்யஸ்ரீ ஜாதவ் இடம் பெறுகின்றனர். வில்வித்தையில் ஹர்விந்தர் சிங், விவேக் சிகாரா, ராகேஷ் குமார், ஷியாம் சுந்தர் ஆடவர் பிரிவிலும், ஜோதி பாலியான் மகளிர் பிரிவிலும் கலந்து கொள்கின்றனர்.

பாட்மிண்டன்...

பாட்மிண்டன் ஆடவர் பிரிவில் பிரமோத் பகத், மனோஜ் சர்க்கார், தருண் தில்லான், சுஹாஸ் யதிராஜ், கிருஷ்ணாவும், மகளிர் பிரிவில் பால் பார்மர், பலாக் கோலி (இரட்டையர்) பங்கேற்கின்றனர். முதன் முதலாக இந்தியா சார்பில் பாரா கனோயிங்கில் பிரச்சி யாதவ் பங்கேற்கிறார்.

பவர் லிஃப்டிங்...

பவர் லிஃப்டிங்கில் மகளிர் பிரிவில் சகீனா கதுன், ஆடவர் பிரிவில் ஜெய்தீப் தேஸ்வால் பவர் லிஃப்டிங்கில் பங்கேற்கின்றனர். துப்பாக்கிச் சுடுதலில் ஆகாஷ், மணிஷ் நர்வால், தீபிந்தர் சிங், ராகுல் ஜாக்கர், சிங்ராஜ், சித்தார்த்த பாபு, ஸ்வரூப் உஹால்கர், தீபக் சைனி ஆடவர் பிரிவிலும், ரூபினா பிரான்ஸிஸ், அவனி லேக்ரா மகளிர் பிரிவிலும் கலந்து கொள்கின்றனர்.

டேபிள் டென்னிஸ்...

நீச்சல் ஆடவர் பிரிவில் நிரஞ்சன் முகுந்தன், சுயாஷ் ஜாதவ் கலந்து கொள்கின்றனர். டேபிள் டென்னிஸ், மகளிர் பிரிவில் சோனல்பென் பட்டேல், பவீனா பட்டேல் ஆகியோர் ஒற்றையர் பிரிவில் தங்கள் திறமையை வெளிப்படுத்த உள்ளனர்.

கொரோனா தொற்று...

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பு ஜப்பானில் நாளுக்கு நாள் எகிறி வருவது போட்டி அமைப்பாளர்களை கவலை அடையச் செய்துள்ளது. தற்போது பாதிப்பு எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டி விட்டது. இதில் டோக்கியோவில் மட்டும் 5,074 பேர் தொற்றுக்குள்ளாகி உள்ளனர். பாராஒலிம்பிக் தொடர்புடையவர்கள் இதுவரை 131 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

கடும் கட்டுப்பாடு...

இதனால் கொரோனா கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக போட்டி அமைப்பு குழுவின் தலைமை செயல் அதிகாரி டோஷிரோ முட்டோ தெரிவித்துள்ளார். பாராஒலிம்பிக் கிராமத்தில் உள்ள பணியாளர்களுக்கு 4 நாட்களுக்கு ஒரு முறை கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இனி வீரர், வீராங்கனைகளை போல் அவர்களுக்கும் தினந்தோறும் பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார். மேலும் அங்கு அனைவரும் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு...

இதற்கிடையே ரசிகர்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் பாராஒலிம்பிக் போட்டியை பார்க்க ஸ்டேடியங்களுக்கு 10 ஆயிரம் பள்ளி மாணவர்களை அனுமதிக்க திட்டமிட்டுள்ளதாக டோக்கியோ கவர்னர் யுரிகோ கோய்கே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து