முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

செவ்வாய்க்கிழமை, 28 செப்டம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

புதிய மருத்துவக் கல்லூரிகளில் 850 மாணவர்களை சேர்க்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

புதிய மருத்துவக் கல்லூரிகளில் 850 மாணவர்களைச் சேர்க்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. குறிப்பாக நாமக்கல், திருப்பூர், ராமநாதபுரம், திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிகளில் தலா 100 மருத்துவ இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர், கள்ளக்குறிச்சி, நீலகிரி ஆகிய மருத்துவக் கல்லூரிகளில் தலா 150 மருத்துவப் படிப்பு இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 1,650 இடங்கள் இருக்கின்றன. இதில் முதல் கட்டமாக 850 மாணவர்களைச் சேர்க்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களின் சீரமைப்புப் பணிகளைச் செய்ய ஆய்வுக் குழு பரிந்துரைத்துள்ளது. அக்டோபர் மாதத்துக்குள் அதைச் சரிசெய்தவுடன் ஆய்வுக் குழுவை மீண்டும் தமிழகத்துக்கு அழைக்க உள்ளோம். இதையடுத்து 1,650 மாணவர்களையும் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்க மத்திய அரசு அனுமதி வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம்''.

 

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து