முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுப்ரீம் கோர்ட்டில் டி.கே.சிவக்குமார் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

செவ்வாய்க்கிழமை, 23 செப்டம்பர் 2025      இந்தியா
TK-Sivakumar

Source: provided

பெங்களூரு : கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மீது சொத்து குவிப்பு வழக்கை சி.பி.ஐ. பதிவு செய்துள்ள நிலையில் இதுதொடர்பான வழக்கு விசாரணையை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.

கர்நாடக துணை துணை முதல்வர்  டி.கே.சிவக்குமார் மீது சொத்து குவிப்பு வழக்கு தொடர சி.பி.ஐ.க்கு முந்தைய பா.ஜனதா அரசு அனுமதி வழங்கியது. பின்னர் கர்நாடகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு காங்கிரஸ் அரசு அமைந்தது. இதையடுத்து டி.கே.சிவக்குமார் மீது சி.பி.ஐ. வழக்கு தொடர வழங்கிய அனுமதியை மாநில அரசு வாபஸ் பெற்றது.

இதை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில்  சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை ஐகோர்ட் ரத்து செய்து உத்தரவிட்டது. இதையடுத்து சி.பி.ஐ. தரப்பில்  சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து