முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் டெங்கு அதிகம் இல்லை: சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 17 அக்டோபர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

வத்தலக்குண்டு  தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகம் இல்லை என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கொடைக்கானல் அரசு மருத்துவமனையை தமிழக சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கூறியதாவது.  

கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள இருபத்தி ஆறு பழங்குடியின கிராமத்தில் உள்ள ஆதிவாசி பழங்குடியின மக்கள் 3,363 பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு விட்டது.

கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள 15 கிராம ஊராட்சிகளில் 10 கிராம ஊராட்சிகளில் 100சதவீத தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றும் மீதி உள்ள 5 கிராம ஊராட்சியில் உள்ள பொதுமக்களுக்கு முதல் தவணையாக 5 ஆயிரத்து தொள்ளாயிரம் பேர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. 

இதேபோல 2936 பேர்களுக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மூன்றாவது அலை தமிழகத்தில் இல்லை இருந்தபோதும் ஒவ்வொருவரும் இந்த நேரத்தில் மிக எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் கூட்டம் கூடும் இடங்களில் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும் என கூறினார்.

தமிழகத்தில் 5 மெகா கேம்ப் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது, இதனால் மூன்றாம் அலை ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து