எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உலகிலேயே குறைந்த விலையாக வெனிசுலா நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 1.48 க்கு விற்கப்படுகிறது என்றால் ஆச்சர்யமாக உள்ளது.
உலகிலேயே அதிகபட்சமாக ஹாங்காங்கில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சுமார் ரூ. 200-க்கு விற்கப்படுகிறது . நெதர்லாந்தில் ரூ . 172 ஆகவும் , நார்வேவில் ரூ .170 ஆகவும் , டென்மார்க்கில் ரூ .162 ஆகவும் விற்பனையாகிறது.
ஆசிய அளவில் பார்த்தால் , இந்தியாவுக்கு அடுத்தபடியாக ஜப்பானில் ரூ . 93 ஆகவும் , சீனாவில் ரூ . 84 ஆகவும் , வங்கதேசத்தில் ரூ . 77 ஆகவும் , இந்தோனேஷியாவில் ரூ . 60 ஆகவும் , இலங்கையில் ரூ . 68 ஆகவும் , பாகிஸ்தானில் ரூ . 59 ஆகவும் , மலேசியாவில் ரூ . 37 ஆகவும் உள்ளது.
அதே வேளையில் உலகிலேயே மிக குறைவாக 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ 1.48 க்கு வெனிசுலா நாட்டில் விற்கப்படுகிறது . ஈரானில் 5 ரூபாய்க்கும் சிரியாவில் 17 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது . மேலும் 21 நாடுகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.50 க்கும் கீழே உள்ளது.
விமானத்தில் பயணித்தவர் நடுவானில் திடீர் உயிரிழப்பு
இரண்டு டோஸ்களை செலுத்திக் கொண்ட நபர் விமானத்தில் பயணித்த போது நடுவானில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நகரில் இருந்து பிஹசூஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பயணிகள் விமானம் கடந்த 25-ம் தேதி ஜெர்மனி நாட்டின் ஹம்பர்க் நகருக்கு புறப்பட்டது. ஹம்பர்க் புறப்பட்ட அந்த விமானத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். அந்த விமானத்தில் 51 வயதுடைய நபர் பயணம் செய்துள்ளார். விமானம் ஹம்பர்க் விமான நிலையம் வந்தடைந்த போது அந்த 51 வயது முதியவர் தனது இருக்கையில் உறங்கியவாறு இருந்துள்ளார். அவரை விமான ஊழியர்கள் எழுப்பியுள்ளனர். ஆனால், அந்த நபர் கண் விழிக்கவில்லை.
இதனால், சந்தேகமடைந்த விமான ஊழியர்கள் விமானத்தில் பணியில் இருந்த மருத்துவ ஊழியருக்கு தெரிவித்தனர். பரிசோதனையில் அந்த பயணி உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து உயிரிழந்த அந்த 51 வயது பயணியின் உடல் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்த பரிசோதனையில் உயிரிழந்த பயணிக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை உறுதியானது. கொரோனாவால் அந்த பயணி உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிலி நாட்டில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவு
சிலி நாடு தென் அமெரிக்காவில் அமைந்துள்ளது. இந்நிலையில், அந்நாட்டின் லாஸ் அண்டீஸ் நகரில் நேற்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. லாஸ் அண்டீஸ் நகரில் இருந்து மேற்கே 35 கிலோமீட்டர் தொலைவை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டு நேரப்படி நள்ளிரவு 12.30 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால், தூங்கிக் கொண்டிருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. மேலும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று சிலி உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சீனாவில் இருந்து வெளியேறியது அமெரிக்க மைக்ரோ சாப்ட் நிறுவனம்
கடந்த மாதம் சீனாவில் இருந்து அமெரிக்காவின் மைக்ரோ சாப்ட் நிறுவனம் தனது லிங்க்ட் இன் சேவையை நிறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல பன்னாட்டு நிறுவனமான யாகூ சீனாவில் இருந்து முற்றிலுமாக வெளியேறி உள்ளது. சீனா அரசு தற்போது பெரும் நிறுவனங்களுக்கு பல்வேறு சட்டங்களை விதித்துள்ளது. இதனால் பல வெளிநாட்டு நிறுவனங்கள் அதிருப்தி அடைந்துள்ளன. அந்நாட்டு அரசின் நடவடிக்கைகள் பெரும் நிறுவனங்களுக்கு எதிராக உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த யாகூ நிறுவனம் சீனாவில் தற்போது நிலவும் சட்ட ரீதியிலான நெருக்கடி காரணமாக அந்த நாட்டில் இருந்து முற்றிலும் வெளியேறுவதாக அறிவித்தது.
அதன்படி யாகூ நிறுவனம் தனது சேவையை சீனாவில் உள்ள பயனாளர்களுக்கு நிறுத்தி விட்டது. கடந்த மாதம் சீனாவில் இருந்து அமெரிக்காவின் மைக்ரோ சாப்ட் நிறுவனம் தனது லிங்க்ட் இன் சேவையை நிறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 2-வது நிறுவனமாக யாகூ சீனாவில் இருந்து வெளியேறி உள்ளது.
தீபாவளிக்கு பொது விடுமுறை: மசோதா தாக்கல் செய்தார் அமெரிக்க எம்.பி.
தீபாவளி பண்டிகைக்கு அமெரிக்காவில் பொது விடுமுறை அளிப்பதற்கான மசோதாவை அமெரிக்க பாராளுமன்றத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த எம்.பி.யான கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்தார்.
அமெரிக்காவில் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் வசித்து வருகிறார்கள். இந்தியா வம்சாவளியை சேர்ந்தவர்கள் எம்.பி.களாகவும் உள்ளனர். இந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்கு அமெரிக்காவில் பொது விடுமுறை அளிப்பதற்கான மசோதாவை அமெரிக்க பாராளுமன்றத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த எம்.பி.யான கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்தார்.
அப்போது அவர் பேசும்போது, தீபாவளியின் மகத்தான மத, கலாச்சார மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதற்காக இந்த தீர்மானத்தை அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறேன் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
வரும் 16, 17-ம் தேதிகளில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
13 Jul 2025சென்னை: தமிழகத்தில் வரும் 16, 17 தேதிகளில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-07-2025.
13 Jul 2025 -
ராணிப்பேட்டை அருகே சோகம்: குட்டையில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி
13 Jul 2025ராணிப்பேட்டை: குட்டையில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் ராணிப்பேட்டையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
புதுச்சேரி: புதிய அமைச்சராக ஜான்குமார் இன்று பதவியேற்பு
13 Jul 2025புதுச்சேரி : புதுச்சேரியில் புதிய அமைச்சராக பா.ஜ.க.வின் ஜான்குமார் இன்று பதவியேற்கிறார்.
-
இன்று கோலாகலமாக நடக்கிறது திருப்பரங்குன்றம் கோவில் கும்பாபிஷேகம்
13 Jul 2025திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று (ஜூலை 14) அதிகாலை 5:25 மணி முதல் காலை 6:10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது.
-
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் 7 மீனவர்கள் கைது
13 Jul 2025ராமேசுவரம் : எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும், அவர்கள் சென்ற படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.
-
குற்றச்செயலில் ஈடுபட்டதாக அமெரிக்காவில் காலிஸ்தான் பயங்கரவாதி உட்பட 8 பேர் கைது
13 Jul 2025வாஷிங்டன்: அமெரிக்காவில் குற்றச்செயலில் ஈடுபட்ட காலிஸ்தான் பயங்கரவாதி உட்பட 8 பேர் புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர்.
-
உபரிநீர் வெளியேற்றம் நிறுத்தம்: மேட்டூர் அணையில் பாசனத்துக்கு நீர் திறப்பு
13 Jul 2025மேட்டூர்: மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றம் நேற்று காலை முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
-
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 7 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
13 Jul 2025சென்னை: மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவிக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.;
-
உத்திரமேரூர் பேரூராட்சியை கண்டித்து ஜூலை 17-ல் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
13 Jul 2025சென்னை : உத்திரமேரூர் பேரூராட்சியை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் வரும் ஜூலை 17-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
-
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: 9-வது முறையாக 2 அணிகளும் ஒரே ஸ்கோர்: இந்தியா சாதனை
13 Jul 2025லண்டன்: இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான லார்ட்ஸ் டெஸ்டில் முதல் இன்னிங்சில் இரு அணிகளும் 387 ரன் குவித்தது.
-
விமானம் 10 மணிநேரம் தாமதம்; மும்பை விமான நிலையத்தில் பயணிகள் திடீர் போராட்டம்
13 Jul 2025மும்பை: துபாய்க்கு செல்லவிருந்த ஸ்பைஸ்ஜெட் விமானம் 10 மணிநேரத்திற்கும் மேலாக தாமதமானதால் மும்பை விமன நிலையத்தில் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
-
'சாமி' பட வில்லன் கோட்டா சீனிவாச ராவ் காலமானார் பிரதமர் மோடி இரங்கல்
13 Jul 2025ஐதராபாத்: நடிகர் கோட்டா சீனிவாச ராவ் (83) உடல் நலக்குறைவால் காலமானார். சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று அதிகாலை உயிர் பிரிந்தது.
-
காவலாளி மரணத்துக்கு நீதி கேட்டு சென்னையில் த.வெ.க. ஆர்ப்பாட்டம் - விஜய் பங்கேற்பு
13 Jul 2025சென்னை : திருப்புவனம் காவலாளி மரணத்துக்கு நீதி கேட்டு சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்றார்
-
இந்திய மாணவர் சேர்க்கை குறைவால் கனடா பல்கலை, கல்லுாரிகளில் வேலை இழந்த 10 ஆயிரம் பேர்..!
13 Jul 2025ஒன்டாரியோ: கனடா பல்கலை மற்றும் கல்லூரிகளில் இந்திய மாணவர்களின் சேர்க்கை வெகுவாக குறைந்ததால் நிதி நெருக்கடியில் சிக்கிய கல்வி நிறுவனங்கள் பேராசிரியர்கள், நிர்வாக பணியாளர
-
குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
13 Jul 2025தென்காசி: வார விடுமுறை என்பதால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்தனர்.
-
மாணவர்கள் போராட்டம்: ட்ரம்ப் மிரட்டலுக்கு அடிபணிந்த கொலம்பியா பல்கலைக்கழகம்..!
13 Jul 2025நியூயார்க்: பாலஸ்தீனத்தின் காசா முனை மீதான இஸ்ரேலின் போர் தாக்குதலை கண்டித்து அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர்.
-
மத்திய அமைச்சருக்கு கொலை மிரட்டல்
13 Jul 2025பாட்னா: மத்திய மந்திரி சிராக் பஸ்வானுக்கு சமூக வலைதளம் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
சுபான்ஷு சுக்லா இன்று பூமிக்கு திரும்புகிறார்..!
13 Jul 2025புதுடெல்லி: சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து இன்று பூமிக்கு திரும்புகிறார் சுபான்ஷு சுக்லா.
-
நியமன எம்.பி. உஜ்வால் நிகாமுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
13 Jul 2025புதுடெல்லி : மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள உஜ்வால் நிகாமின் பணி பாராட்டத்தக்கது என பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்தி உள்ளார் .
-
அதிக சிக்சர்: விவியன் ரிச்சர்ட்ஸ் சாதனையை தகர்த்த ரிஷப் பண்ட்
13 Jul 2025லண்டன்: டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 36 சிக்சர்கள் அடித்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்துக்கு எதிராக அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற விவியன் ரிச்சர்
-
2-ம் கட்ட பிரச்சார சுற்றுப்பயணத்தை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி
13 Jul 2025சென்னை : மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம் பிரச்சார சுற்றுப்பயணத்தின் 2-ம் கட்ட சுற்றுப்பயண அட்டவணையை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
-
சரக்கு ரெயிலில் தீ விபத்து: உயர்மட்ட விசாரணைக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
13 Jul 2025சென்னை: சரக்கு ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்து: உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
யாராலும் பிடிக்க முடியாத தூரத்தில் தி.மு.க.: உதயநிதி பெருமிதம்
13 Jul 2025திருவண்ணாமலை : தேர்தல் ரேசில் யாராலும் பிடிக்க முடியாத தூரத்தில் முதலிடத்தில் சென்று கொண்டு இருக்கிறோம் என்று துணை முதல்வர் உதயநிதி கூறி உள்ளார்.
-
இந்தியாவுக்கு எதிராக பாக்., அணு அயுதங்களை பயன்படுத்த திட்டமா? - பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மறுப்பு
13 Jul 2025இஸ்லாமாபாத் : இந்தியா உடனான அண்மைய மோதலில் அணு ஆயுதத்தை பயன்படுத்தும் திட்டம் தங்களுக்கு அறவே இல்லை என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.