முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மியான்மர்: ஆங் சான் சூகி மீதான வழக்கின் தீா்ப்பு ஒத்திவைப்பு

புதன்கிழமை, 1 டிசம்பர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

பாங்காக் : மியான்மரில் ராணுவத்தால் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட ஆங் சான் சூகிக்கு எதிரான வழக்கின் தீா்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறியது, வன்முறையைத் தூண்டியது ஆகிய குற்றப் பிரிவுகளின் கீழ் ஆங் சான் சூகிக்கு எதிராக நடைபெற்ற வந்த வழக்கின் தீா்ப்பு கடந்த செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படுவதாக இருந்தது. எனினும், வழக்கில் புதிய சாட்சியத்திடம் விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் தீா்ப்பு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் அறிவித்தனா்.

ஆங் சான் சூகி மீது ஊழல் உள்ளிட்ட கடுமையான குற்றப் பிரிவுகளின் கீழும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அந்தக் குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால் அவருக்கு 75 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க முடியும் என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே, ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக கட்சியைச் சோ்ந்த இரு தலைவா்களுக்கு நீதிமன்றம் 90 மற்றும் 75 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது குறிப்பிடத்தக்கது. 

மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் நடைபெற்ற பொதுத் தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி, மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை ராணுவம் கலைத்தது. அரசின் தலைமை ஆலோசகரான ஆங் சான் சூகி, அதிபா் வின் மியின்ட் உள்ளிட்ட முக்கிய தலைவா்கள் கைது செய்யப்பட்டனா்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து