முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அண்ணா பல்கலை. விடுதி மாணவர்கள் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி

வியாழக்கிழமை, 9 டிசம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

அண்ணா பல்கலைக்கழக விடுதி மாணவர்கள் 13 பேருக்கு கொரோனாத்தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து கல்லூரி மாணவர்கள் தனிமனித இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார். 

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் விடுதி வளாகத்தில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கல்லூரி மாணவர்கள் தனிமனித இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழக விடுதியில் உள்ள 300 மாணவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் விமானநிலையத்தில் தொற்று உறுதி செய்யப்பட்ட 13 பேரில் ஒருவருக்கு கூட ஒமைக்ரான் பரவல் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தான்சானியா, கனடா போன்ற நாடுகளும் அதிக பாதிப்புள்ள ஒமைக்ரான் பரவல் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதால் இனி அந்நாட்டிலிருந்து வருபவர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து