ஆவின் நிறுவனத்தில் உள்ள 'கால்நடை ஆலோசகர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டிசம்பர் முதல் வாரத்தில், பிசிசிஐ அவரை ஒருநாள் தொடருக்கான அணியின் கேப்டன்சியில் இருந்தும் நீக்கியது. என்றாலும், இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு டெஸ்ட் கேப்டனாக நீடிப்பார் என்று பலர் எதிர்பார்த்தபோது சில தினங்கள் முன் அதிலிருந்தும் விலகினார். விராட் கோலி இந்த முடிவு எடுப்பதற்கு முன் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்திருக்கலாம் என்கிறார் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அதுல் வாசன்.
இது தொடர்பாக அதுல் வாசன் கூறுகையில், "ஆஸ்திரேலியத் தொடருக்கு இடையே, டோனி ஓய்வு முடிவை அறிவித்தபோது எனக்கு அது அதிர்ச்சியை உண்டாக்கியது. ஆனால், விராட் கோலியின் முடிவு எனக்கு எந்த அதிர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை. காரணம், டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி சந்தித்த தோல்விக்குப் பிறகு கடந்த சில மாதங்களாக கோலி மீது அழுத்தம் இருந்தது என்று நினைக்கிறேன். அவர் பெரிய ஸ்கோர் எடுக்கவில்லை. அணியின் தோல்விக்கு அவர் மற்ற வீரர்களைச் சுட்டிக்காட்டினார். இந்தப் போக்கு இதற்கு முன்பு அவரிடம் கிடையாது என்றார்.
ரோகித் - அஸ்வினுக்கு வெங்சர்க்கார் ஆதரவு
இந்திய கிரிக்கெட்டுக்கு 3 வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக இருந்த விராட் கோலி முதலில் 20 ஓவரில் இருந்து விலகினார். இதைத் தொடர்ந்து ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், ரிஷப்பண்ட் ஆகியோரில் ஒருவர் டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் டெஸ்ட் அணிக்கு ரோகித் சர்மா அல்லது அஸ்வினை கேப்டனாக்கலாம் என்று முன்னாள் கேப்டனும், முன்னாள் தேர்வுக்குழு தலைவருமான திலீப் வெங்சர்க்கார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது., டிராவிட் இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகியபோது இருந்த நிலைதான் தற்போது ஏற்பட்டுள்ளது. அப்போது நான் தேர்வுக்குழு தலைவராக இருந்தேன். எல்லோரும் டோனிக்கு கேப்டன் பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்த்தனர். குறுகிய காலத்துக்காக நாங்கள் கும்ப்ளேவை தேர்வு செய்தோம். அவரும் கேப்டன் பதவியில் சிறப்பாக செயல்பட்டார். அதே மாதிரி தற்போது ரோகித் சர்மா அல்லது அஸ்வின் ஆகியோரில் ஒரு வரை டெஸ்ட் கேப்டனாக நியமிக்கலாம். இவ்வாறு திலீப் வெங்சர்க்கார் கூறியுள்ளார்.
கொரோனா பாதிப்பு எதிரொலி: ஆஸி.-நியூசி. தொடர் ஒத்திவைப்பு
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி சமீபத்தில் இங்கிலாந்துடன் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடியது. 5 போட்டி கொண்ட இந்த தொடரை ஆஸ்திரேலியா 4-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா- நியூசிலாந்து இடையேயான ஒருநாள் தொடர் நடைபெறும் போட்டி அட்டவணை அறிவிக்கப்பட்டு உள்ளது. நியூசிலாந்து கிரிக்கெட் அணி வருகிற 24-ம் தேதி முதல் பிப்ரவரி 9-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் ஒரே ஒரு 20 ஓவர் ஆட்டத்தில் விளையாட திட்டமிட்டு இருந்தது.
முதல் போட்டி 30-ம் தேதி பெர்த்திலும், 2-வது ஒருநாள் போட்டி பிப்ரவரி 2-ந் தேதி ஹோபர்ட்டிலும், கடைசி ஒருநாள் போட்டி 5-ந் தேதி சிட்னியிலும், 20 ஓவர் ஆட்டம் பிப்ரவரி 8-ந் தேதி கான்பராவிலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து இடையேயான ஒருநாள் தொடர் மற்றும் 20 ஓவர் போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் விவாதித்து, முடிவெடுத்து இந்த தகவலை நேற்று தெரிவித்தன. இந்த போட்டி தொடர் எப்போது நடைபெறும் என்ற விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.
விண்டேஜ் லேண்ட் ரோவர் காரை வாங்கியுள்ள மகேந்திர சிங் டோனி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனிக்கு கிரிக்கெட் விளையாட்டை தாண்டி மிகவும் பிடித்த விஷயம் என்றால் அது வாகனங்கள்தான். அவரது ராஞ்சி பண்ணை வீட்டில் அமைந்துள்ள கராஜில் பழங்கால விண்டேஜ் கார்கள் தொடங்கி பிராண்ட் நியூ கார்கள், பைக்குகள் என ரகம் ரகமாக வாகனங்கள் அலங்கரித்து நிற்கின்றன.
அதில் புது வரவாக இணைக்கிறது விண்டேஜ் லேண்ட் ரோவர் 3 ஸ்டேஷன் வேகன் கார். இந்த கார் கடந்த 1971-இல் உருவாக்கப்பட்டது. இதனை ஆன்லைன் மூலம் நடைபெற்ற ஏலத்தில் டோனி வாங்கியுள்ளார். 1971 முதல் 1985 வரையிலான காலகட்டத்தில் வெளியான லேண்ட் ரோவர் கார்களில் இந்த 3 ஸ்டேஷன் வேகன் கார் மிகவும் பிரபலம் என சொல்லப்பட்டுள்ளது. ஹம்மர் எச்2, ஜிஎம்சி சியரா பிக்-அப் டிரக், போர்ஸ் பாக்ஸர், ஃபெராரி 500 ஜிடிஓ, ஆடி க்யூ7, மஹிந்திரா ஸ்கார்பியோ, ரோல்ஸ் ராய்ஸ் சில்வர் ஷேடோ சீரிஸ், கிராண்ட் செரோகி ட்ராக்ஹாக் மற்றும் நிசான் ஜோங்கா கார்களை டோனி தற்போது வைத்துள்ளார்.
ஆஸ்திரேலிய மண்ணில் சாதனை படைத்த டோனி
கடந்த 2019-இல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மொத்தம் 193 ரன்கள் எடுத்திருந்தார் டோனி. அதனால் அந்த தொடரில் தொடர் நாயகன் விருதையும் வென்றார். அப்போது டோனியின் வயது 37 வயது 195 நாட்கள். அதன் மூலம் ஒருநாள் தொடரில் தொடர் நாயகன் விருதை வென்ற மூத்த வயது வீரர் என்ற சாதனையை படைத்தார்.
சிட்னியில் 51 ரன்கள், அடிலெய்டில் 55* ரன்கள் மற்றும் மெல்பேர்னில் 87* ரன்கள் எடுத்தார் டோனி. அதன் மூலம் இந்தியா தொடரையும் 2 - 1 என்ற கணக்கில் வென்றது. டோனி அவுட்டான முதல் போட்டியில் மட்டுமே இந்தியா தோல்வியை தழுவியது. அந்த தொடருக்கு பின்னர் டோனி 13 ஒருநாள் கிரிக்கெட் இன்னிங்ஸ் விளையாடி இருந்தார். அதில் நான்கு போட்டிகளில் நாட் அவுட். நியூசிலாந்து அணிக்கு எதிரான 50 ஓவர் உலகக் கோப்பை அரையிறுதியில் 50 ரன்கள் எடுத்து அவுட்டானார். அதுவே சர்வதேச கிரிக்கெட்டில் அவரது கடைசி போட்டியாக அமைந்தது.
இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்த அஸ்வின் !
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என வென்று அசத்தியுள்ளது தென்னாப்பிரிக்க அணி. இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் நேற்று முதல் தொடங்கியது. இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக கே.எல். ராகுலும் துணை கேப்டனாக பும்ராவும் செயல்படுகிறார்கள்.
பார்ல் பகுதியில் நடைபெறும் முதல் ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. தென்னாப்பிரிக்கச் சுற்றுப்பயணத்தில் இந்திய அணி முதல்முறையாக டாஸில் தோற்றுள்ளது. இந்திய அணியில் வெங்கடேஷ் ஐயர் அறிமுகமாகியுள்ளார். 4-ம் நிலை வீரராக ஷ்ரேயஸ் ஐயர் விளையாடுவார் என கேப்டன் ராகுல் தெரிவித்தார். இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் மீண்டும் இடம்பெற்றுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
-
பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை குறித்து சட்ட வல்லுனர்களுடன் முதல்வர் ஆலோசனை
21 May 2022ஊட்டி : பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து நளினி உள்ளிட்ட மற்ற 6 பேர் விடுதலை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 21-05-2022
21 May 2022 -
ரூ. 20 லட்சத்தில் உதகையை கண்டறிந்த ஜான் சல்லீவனுக்கு வெண்கல சிலை : முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
21 May 2022உதகை : நீலகிரி மாவட்டம், உதகை அரசு தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில், 200 ஆண்டுகளுக்கு முன்பு உதகை நகரினை கண்டறிந்து கட்டமைத்த ஜான் சல்லிவனுக்கு 20 ல
-
ஆட்சியில் இல்லாத போதும் மக்களுக்காக பணியாற்றும் இயக்கம் தி.மு.க.தான் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
21 May 2022ஊட்டி : ஆட்சியில் இல்லாத போதும் மக்களுக்காக பணியாற்றும் இயக்கம் தி.மு.க.தான் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
-
இயல்பு வாழ்க்கை திரும்புவதால் இலங்கையில் அவசர நிலை வாபஸ்
21 May 2022கொழும்பு : இலங்கையில் வன்முறை தணிந்து இயல்பு நிலை திரும்பி வருகிறது. இதையடுத்து, இலங்கையில் அவசர நிலை திரும்பப் பெறப்பட்டுள்ளது.
-
கர்நாடக மாநிலத்தில் சோகம்: திருமண விழாவிற்கு சென்ற ஜீப் விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு
21 May 2022கர்நாடகாவில் திருமண விழாவிற்கு சென்ற ஜீப் சாலையோர மரத்தில் மோதிய விபத்தில் மணமகளின் தாய் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.
-
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் : ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
21 May 2022சென்னை : தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
தமிழகத்தில் பி ஏ-4 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
21 May 2022சென்னை : தமிழகத்தில் பி ஏ-4 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
-
குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
21 May 2022உதகை : 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் கீழ், குழந்தைகளின் வளர்ச்சியை கண்டறிவதற்கான சிறப்பு மருத்துவ முகாமை நீலகிரி மாவட்டம், தொட்டபெ
-
செயல்பாடுகளை விமர்சித்ததால் முன்னாள் உலக செஸ் சாம்பியனை உளவாளி பட்டியலில் சேர்த்த ரஷ்யா
21 May 2022மாஸ்கோ : ரஷ்யாவின் செயல்பாடுகளை விமர்சித்ததால் முன்னாள் உலக செஸ் சாம்பியனை உளவாளி பட்டியலில் அந்நாட்டு நீதித்துறை அமைச்சகம் சேர்த்துள்ளது.
-
தருமபுரம் ஆதீன மடத்தில் இன்று பட்டின பிரவேசம் நிகழ்ச்சி : ஆதீனகர்த்தர்கள், அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்பு
21 May 2022மயிலாடுதுறை : தருமபுரம் ஆதீன திருமடத்தில் இன்று நடைபெறும் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் பல்வேறு ஆதீனகர்த்தர்கள், பா.ஜ.க.
-
பா.ம.க. தலைவராக அன்புமணி ராமதாஸ் : 28-ம் தேதி அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
21 May 2022சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி நியமிக்கப்பட உள்ளார். அதற்கான அறிவிப்பு வரும் 28-ம் தேதி வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
-
புதுவை மாநில கவர்னர் தமிழிசை கையில் பாம்பு : வைரலாகும் விடியோ
21 May 2022புதுச்சேரி : புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சிறுவர்களுடன் ரயில் பயணம் செய்து, மயில்களையும், பாம்புகளையும், பறவைகளையும் கைகளில் தூக்கி வைத்து கொஞ்சிய விட
-
தமிழகம் முழுவதும் 117 மையங்களில் நடந்த குரூப்-2 முதல்நிலை தேர்வு: 11.78 லட்சம் பேர் எழுதினார்கள்
21 May 2022சென்னை : தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த 117 மையங்களில் நேற்று குரூப் -2 முதல்நிலை தேர்வு நடந்தது.
-
இந்தியாவில் சீன ஆக்கிரமிப்பு காங்கிரஸ் ஆட்சியில் நடந்தது: மத்திய அரசு விளக்கம்
21 May 2022இந்தியாவின் கிழக்கு லடாக் பகுதியில் சீனா பாலம் கட்டி வரும் பகுதி 60 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியில் அந்த நாட்டால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி என்று பாரதிய ஜனதா தலைம
-
ராஜீவ் காந்தியின் நினைவு தினம்: உதகையில் உருவப் படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை
21 May 2022உதகை : மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி உதகையில் அமைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.&n
-
பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர் யார்? - -தமிழகம் உட்பட 5 மாநில கருத்து கணிப்பில் மோடிக்கு முதலிடம்
21 May 2022புதுடெல்லி : தமிழ்நாடு உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல் முடிந்து ஓராண்டு ஆன நிலையில், அடுத்த தேர்தலில் பிரதமர் பதவிக்கு யார் மிகவும் பொருத்தமானவர்?
-
கொரோனாவை கட்டுப்படுத்த இஞ்சி, மூலிகை தேநீர் பருகுங்கள் : நாட்டு மக்களுக்கு வடகொரிய அரசு பரிந்துரை
21 May 2022பியோங்கியாங் : கொரோனாவை கட்டுப்படுத்த இஞ்சி, மூலிகை தேநீரை பருக நாட்டு மக்களுக்கு வடகொரிய அரசு பரிந்துரைத்துள்ளது.
-
சலுகைகளை நிராகரித்தார் தலைமை தேர்தல் ஆணையர்
21 May 2022இந்திய தலைமை தேர்தல் ஆணையரும், தேர்தல் ஆணையரும், சிக்கன நடவடிக்கையாக தங்களுக்கு வழங்கப்படும் ஊக்கச் சலுகைக்கான வரி விலக்கு, சுற்றுலா பயணப் படி ஆகியவற்றை ஏற்க மறுத்துள்ள
-
அசாம் மழை, வெள்ளம்: 8.39 லட்சம் பேர் பாதிப்பு பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
21 May 2022அசாமில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி 9 பேரும், நிலச்சரிவுகளில் சிக்கி 5 பேரும் என மொத்தம் 14 பேர் உயிரிழந்து உள்ளனர்.
-
ஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்தி வரும் குரங்கம்மை நோய் பரவுவதை தடுக்க விமான நிலையங்களில் கண்காணிப்பு: மத்திய அரசு உத்தரவு
21 May 2022ஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்தி வரும்குரங்கம்மை நோய் பரவுவதை தடுக்க இந்திய விமான நிலையங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.ஐரோப்பிய நாடுகளில் இது
-
உதகை -200 துவக்க விழா: ரூ. 56.36 கோடியில் பல்வேறு முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின் : பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்
21 May 2022உதகை : நீலகிரி மாவட்டம், உதகை அரசினர் கலைக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில், உதகை – 200 விழாவினை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார்.
-
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: மேட்டூர் அணை நீர்மட்டம் 115.35 அடியாக அதிகரிப்பு : தண்டோரா மூலம் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
21 May 2022மேட்டூர் : கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.
-
கேன்ஸ் திரைப்பட விழாவில் மேலாடை ஏதும் அணியாமல் உக்ரைன் பெண் போராட்டம்
21 May 2022பாரீஸ் : கேன்ஸ் திரைப்பட விழாவின் சிவப்பு கம்பள வரவேற்பின்போது, பெண் ஒருவர் மேலாடை அணியாமல் தனது உடலில் உக்ரைன் கொடியின் வண்ணங்களை வரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட
-
நாய் உணவை சாப்பிட்டால் ரூ. 5 லட்சம் சம்பளம் : இங்கிலாந்து நிறுவனம் அறிவிப்பு
21 May 2022லண்டன் : இங்கிலாந்தில் உள்ள நிறுவனம் ஒன்று நாய் உணவை 5 நாட்கள் சாப்பிடும் நபருக்கு ரூ. 5 லட்சம் சம்பளம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.