முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நொய்யல் ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கத்திலிருந்து 24-ம் தேதி முதல் நீர் திறக்க தமிழக அரசு உத்தரவு

வெள்ளிக்கிழமை, 21 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : நொய்யல் ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கத்தில் இருந்து வரும் 24-ம் தேதி முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

இது குறித்து பொதுப்பணித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, 

கரூர் மாவட்டம்,  புகளூர் வட்டம், நொய்யல் ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கத்திலிருந்து நொய்யல் கால்வாயிலுள்ள பாசன  நிலங்களுக்கு  155.52 மில்லியன் கன அடிக்கு மிகாமல் 24.01.2022 முதல் 23.02.2022 வரை சிறப்பு நனைப்பிற்கு,  20 நாட்களுக்கு  மிகாமல், முறை வைத்து தண்ணீர் விட அனுமதி அளித்து அரசு ஆணையிட்டுள்ளது. இதனால்  கரூர் மாவட்டம், புகளூர் மற்றும் மண்மங்கலம் ஆகிய வட்டங்களிலுள்ள 19480 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து