எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
அஸ்வின் பவுலிங் குறித்து முன்னாள் வீரர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். நான்கு வருடங்களுக்குப் பின் சமீபத்தில் டி20 அணியில் இடம்பிடித்த அஸ்வின் சிறப்பாகச் செயல்பட்டார். ஆனால் ஒருநாள் போட்டிகளில் அவர் விக்கெட் சாய்க்காதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அஸ்வினுக்கு பதில் மாற்று வீரரை சிந்திக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
ஹர்பஜன் பேசுகையில், "டெஸ்ட் அல்லது ஒருநாள் போட்டி போன்றவற்றில் இஷாந்த் ஷர்மா மற்றும் அஸ்வின் இரண்டு பேரும் இந்திய அணிக்காக சிறப்பாகவே செயல்பட்டுள்ளார்கள். அஸ்வின் ஒரு சாம்பியன் பந்து வீச்சாளர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் ஒருநாள் போட்டிகளுக்கு அஸ்வினுக்கு பதிலாக ஒரு மாற்று வீரரைத் தேட வேண்டிய நேரமிது என்று தோன்றுகிறது. அவர் இடத்துக்கு குல்தீப் யாதவ் போன்ற ஒருவர் சிறந்த தேர்வாக இருக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.
______________
பொவேல் அதிரடி சதம்: மே.இ.தீவுகள் வெற்றி
வெஸ்ட்இண்டீஸ்- இங்கிலாந்து அணிகள் மோதிய 3-வது 20 ஓவர் போட்டி பிரிட்ஜ் டவுனில் இந்திய நேரப்படி நள்ளிரவில் நடந்தது. முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 224 ரன் குவித்தது. 4-வது வீரராக களம் இறங்கிய ரோவ்மேன் பொவேல் அதிரடியாக ஆடி சதம் அடித்தார். அவர் 53 பந்தில் 107 ரன்னும் (4 பவுண்டரி, 10 சிக்சர்), நிக்கோலஸ் பூரன் 43 பந்தில் 70 ரன்னும் (4 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தனர்.
பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 204 ரன் எடுத்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் 20 ரன்னில் வெற்றி பெற்றது. டாம் பாண்டன் 39 பந்தில் 73 ரன்னும் (3 பவுண்டரி, 6 சிக்சர்), பில்சால்ட் 24 பந்தில் 57 ரன்னும் (3 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தனர். செப்பர்டு 3 விக்கெட்டும், பொல்லார்ட் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். இந்த வெற்றி மூலம் 5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
______________
விராட் கோலி விவகாரத்தில் பி.சி.சி.ஐ. மீது குற்றச்சாட்டு
கேப்டன் பதவி விவகாரத்தில் விராட் கோலிக்கும், இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலிக்கும் இடையே மோதல் ஏற்பட்டு இருந்தது. இந்த நிலையில் விராட் கோலி விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) தவறு செய்து விட்டதாக பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும், முன்னாள் விக்கெட் கீப்பருமான ரஷீத் லத்தீப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது.,
விராட் கோலி விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் கையாண்ட விதம் சரியில்லை. ஒருநாள் போட்டிக்கான அணியின் கேப்டன் பதவியில் இருந்து அவரை நீக்கியதில் கிரிக்கெட் வாரியம் தவறு செய்து விட்டது. இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் நீண்டகாலம் பணியாற்றிய கேப்டன் பதவியில் இருந்து விலக முடிவெடுத்தாலோ அல்லது நீக்கப்பட்டாலோ அவர் கிரிக்கெட் வாரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடாமல் இருப்பது சாத்தியமில்லை. இது எனது தனிப்பட்ட அனுபவத்தில் இருந்து அறிவேன். இவ்வாறு ரஷீத் லத்தீப் கூறியுள்ளார்.
___________
டெஸ்ட் அணியை வழி நடத்த 5 வீரர்கள் உள்ளனர் - பிரட் லீ
முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ, தற்போதைய இந்திய டெஸ்ட் அணியை வழி வழிநடத்தக்கூடிய நான்கு-ஐந்து வீரர்கள் உள்ளனர் என்று கூறி உள்ளனர். இந்திய டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகிய இரண்டு வாரங்களுக்குப் பிறகு பிரட் லீ இந்த கருத்தை கூறியுள்ளார். கடந்த ஆண்டு கோலி இருபது ஓவர் கேப்டன் பதவியில் இருந்து விலகினார் பின்னர் தேர்வாளர்கள் இருபது ஓவர் மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கு ஒரே கேப்டனை மட்டுமே விரும்பியதால் அவர் ஒரு நாள் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதுகுறித்து பிரட் லீ கூறியவதாவது., இது முழுக்க முழுக்க விராட் கோலியின் முடிவு. நான் பிக் பாஷ் லீக் மற்றும் ஆஷஸ் தொடரில் கவனம் செலுத்தி வருகிறேன். இது பற்றி நான் அதிகம் கூற முடியாது, அது முழுக்க முழுக்க விராட் கோலியை பொறுத்தது. நான்கு-ஐந்து வீரர்கள் டெஸ்டில் இந்தியாவை வழிநடத்த முடியும் என்று நான் நினைக்கிறேன், காலம் தான் பதில் சொல்லும்,” என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
மொஹரம் பண்டிகை: வரும் 7-ம் தேதி அரசு விடுமுறை என பரவும் தகவலுக்கு மறுப்பு
05 Jul 2025சென்னை, மொஹரம் பண்டிகை ஜூலை 6-ம் தேதிதான் என்றும், இந்தப் பண்டிகையை முன்னிட்டு ஜூலை 7, 2025 (திங்கட்கிழமை) அரசு விடுமுறை என்ற தகவல் தவறானது என்றும் தமிழக அரசின் உண்மை ச
-
தி.மு.க.வுக்கு ஆதரவு எப்படி? 3 தொகுதிகளின் நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
05 Jul 2025சென்னை, பட்டுக்கோட்டை, பாபநாசம், மணப்பாறை 3 சட்டப்பேரவை தொகுதிகளின் நிர்வாகிகளுடன் தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
-
அரசு மருத்துவ கல்லூரி டீன் நியமனம்: தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது ஐகோர்ட்
05 Jul 2025சென்னை, அரசு மருத்துவ கல்லூரி டீன் நியமனம் தொடர்பாக, தனி நீதிபதியின் உத்தரவை சென்னை ஐகோர்ட் உறுதி செய்துள்ளது.
-
வரும் 8-ம் தேதி ராமதாஸ் தலைமையில் பா.ம.க. செயற்குழு கூட்டம்
05 Jul 2025திண்டிவனம், பா.ம.க. செயற்குழு கூட்டம் வரும் 8ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
காசாவில் 613 பாலஸ்தீனியர்கள் கொலை: ஐ.நா. குற்றச்சாட்டு
05 Jul 2025வாஷிங்டன் : கடந்த மே மாதத்தில் இருந்து காசாவில் நிவாரண உதவி பெற முயன்ற 613 பாலஸ்தீனியர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
-
சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விதிமுறைகள் வெளியீடு
05 Jul 2025புதுடில்லி : 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இரண்டு முறை நடத்தப்படும் என சி.பி.எஸ்.இ. அறிவித்திருந்தது. அதற்கான தகுதி அளவுகோல் மற்றும் விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
-
விஜய் கட்சியிலிருந்து பிரசாந்த் கிஷோர் திடீர் விலகல்
05 Jul 2025சென்னை, விஜய் கட்சிக்கு தேர்தல் ஆலோசனை வழங்கும் பொறுப்பை ஏற்றிருந்த பிரசாந்த் கிஷோர், அதில் இருந்து விலகிக் கொண்டுள்ளார்.
-
உ.பி., யில் சோகம்: கல்லூரி சுவரில் கார் மோதி மணமகன் உட்பட 8 பேர் பலி
05 Jul 2025லக்னோ, உத்தரபிரதேச மாநிலத்தில் கல்லூரி வளாக சுவரில் கார் மோதிய விபத்தில் மணமகன் உட்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
இந்தித் திணிப்புக்கு எதிராக மத்திய பா.ஜ.க. அரசுக்கு மறக்க முடியாத பாடத்தை தமிழ்நாடு மீண்டும் கற்பிக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டம்
05 Jul 2025சென்னை, தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பா.ஜ.க. செய்துவரும் துரோகத்துக்கு பா.ஜ.க. பரிகாரம் தேட வேண்டும்.
-
நானே முதல்வர் வேட்பாளர்: அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி; எடப்பாடி பழனிசாமி மீண்டும் உறுதி
05 Jul 2025சென்னை, 2026 தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் நானே முதல்வர் வேட்பாளர் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
-
மராத்தி பேசாவிட்டால் காதுகளுக்கு கீழே அடியுங்கள்: ராஜ் தாக்கரே
05 Jul 2025மும்பை : மகாராஷ்டிராவில் மராத்தி பேசாவிட்டால் காதுக்குக் கீழே அடியுங்கள் என்ற ராஜ் தாக்கரே பேச்சால் சர்ச்சை எழுந்துள்ளது.
-
கனமழை காரணமாக இமாசலில் 69 பேர் பலி
05 Jul 2025சிம்லா, இமாசல பிரதேசத்தில் மிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
-
அஜித்குமார் தாயார், தம்பிக்கு ஆறுதல் தெரிவித்த ஓ.பி.எஸ்.
05 Jul 2025திருப்புவனம் : போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று ஓ.பன்னீர் செல்வம் ஆறுதல் தெரிவித்தார்.
-
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் முதல் முகாமை ஜூலை 15-ல் சிதம்பரத்தில் தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
05 Jul 2025சென்னை, உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் முதல் முகாமை ஜூலை 15-ல் சிதம்பரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
-
எடப்பாடி பழனிசாமிக்கு 'இசட் பிளஸ்' பாதுகாப்பு
05 Jul 2025சென்னை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-07-2025.
06 Jul 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-07-2025.
06 Jul 2025