முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தலைவர்களின் இன்றைய பிரச்சார விவரம்

சனிக்கிழமை, 12 பெப்ரவரி 2022      அரசியல்
Image Unavailable

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.  

தி.மு.க. தலைவரும், முதல்வருமான  மு.க.ஸ்டாலின் நேற்று மாலை திருப்பூர் மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து காணொலி வாயிலாக பிரச்சாரம் மேற்கொண்டார். இன்று திண்டுக்கல் வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், நேற்று மாலை தென்சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகள், தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். இன்று ஆவடி மாநகராட்சி, திருவொற்றியூர் பெரியார் நகர், ராயபுரம் ஆகிய பகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரச்சாரம் மேற்கொள்கிறார். 

அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, நேற்று  மாலை சங்கிரிதேவூர், அரசிலாமணி, பூலாம்பட்டி, எடப்பாடி கொங்கணாபுரம், சேலம் மாநகராட்சி பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில் இன்று ஓமலூர், காடையாம்பட்டி, மேச்சேரி, மேட்டூர், கொளத்தூர், இடங்கனசாலை சங்கிரி சேலம் மாநகராட்சி பகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். 

இதே போல் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, ஈரோடு, கோவை, குன்னூர் ஆகிய பகுதிகளில் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார். நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று மாலை நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சை ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில் இன்று தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி பகுதிகளில் பிரச்சாரம் செய்கிறார். தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி இன்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து