முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காயம் காரணமாக ஐ.பி.எல் போட்டியிலிருந்து ரவீந்திர ஜடேஜா விலகல்?

புதன்கிழமை, 11 மே 2022      விளையாட்டு
Jadeja 2022 05 11

Source: provided

மும்பை : ஐ.பி.எல் 2022 போட்டியிலிருந்து ஆல்ரவுண்டர் ஜடேஜா விலகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் கேப்டனாக...

ஐ.பி.எல் 2022 போட்டி தொடங்குவதற்கு முன்பு சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவியிலிருந்து டோனி விலகினார். இதையடுத்து ஜடேஜா, சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் 8 ஆட்டங்களில் 2 வெற்றிகளை மட்டும் பெற்றதால் திடீரென கேப்டன் பதவியிலிருந்து அவர் விலகினார். இந்த நெருக்கடியில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக டோனி மீண்டும் தேர்வானார். அதற்குப் பிறகு சிஎஸ்கே விளையாடிய 3 ஆட்டங்களில் 2-ல் சிஎஸ்கே வெற்றி பெற்றுள்ளது.

ஜடேஜாவுக்கு காயம்... 

ஆர்சிபிக்கு எதிரான ஆட்டத்தில் ஃபீல்டிங் செய்தபோது ஜடேஜாவுக்குக் காயம் ஏற்பட்டது. இதனால் டெல்லிக்கு எதிராக சிஎஸ்கேவின் சமீபத்திய ஆட்டத்தில் காயம் காரணமாக ஜடேஜா விளையாடவில்லை. இந்நிலையில் காயம் குணாமாகாததால் ஐ.பி.எல் 2022 போட்டியிலிருந்து ஜடேஜா விலகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சிஎஸ்கே அணி மீதமுள்ள 3 ஆட்டங்களிலும் வென்றால் மட்டுமே பிளேஆஃப்புக்கான போட்டியில் இருக்க முடியும் என்கிற நிலையில் ஜடேஜாவுக்கு ஏற்பட்டுள்ள காயமும் அதனால் அவர் போட்டியிலிருந்து விலக இருப்பதும் சிஎஸ்கே அணிக்குப் பெரிய பின்னடைவாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.  ஜடேஜாவின் விலகல் பற்றி அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து