முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலிடெக்னிக்குகளில் சேர ஜூலை 1 முதல் விண்ணப்பிக்கலாம்: பொறியியல் கல்லூரி கல்வி கட்டணம் உயர்த்தப்படாது : அமைச்சர் பொன்முடி திட்டவட்டம்

வெள்ளிக்கிழமை, 27 மே 2022      தமிழகம்
Ponmudi 2022 05 11

Source: provided

சென்னை : பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டணம் உயர்த்தப்படாது என்று அமைச்சர் பொன்முடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்கள் சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியதாவது:- 

பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர ஜூலை 1 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பாலிடெக்னிக் கல்லூரிகளில் 10 புதிய பாட திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள நிலையில் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொறியியல் படிப்புக்கு ஆன்லைன் வழியே விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டணம் உயர்த்தப்படாது. 

கட்டண உயர்வு குறித்த ஏ.ஐ.சி.டி.இ பரிந்துரையை ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லை. பொறியியல் கல்லூரிகளுக்கான கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை. பழைய கட்டணமே வசூலிக்கப்படும். தமிழகத்தில் மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்படும்.

புதிய தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த தேவை இல்லை. கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வந்தால் இதுபோன்ற சிக்கல்கள் ஏற்படாது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து